பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

சுதந்திர‌ம் அடைவ‌த‌ற்க்கு முன் இந்திய‌வில் பொது துறை நிறுவ‌ன‌ங்க‌ளே இல்லை.
ரயில் போக்குவ‌ர‌த்து, மின் வின‌யோகம், வங்கி, இன்ஸுரனஸ்
கூட‌ த‌னியார் வ‌ச‌ம்தான். அப்போது ஊழல், திருட்டு இந்த
அளவு இல்லை, இது போன்ற நிறுவனங்களில் கூட.
நன்றாகவே நடந்தன.

நேரு, சோசியலிச பாணி கொள்கைகளை முன்மொழிந்து ஐந்தாண்டு திட்டங்கள் மூலம்
பொது துறை நிறுவனங்கள் உருவாக வழி வகுத்தார். 50களில் பெரும் செலவில் பல
துறைகளில் அவை உருவாக்கப்பட்டன. அரசி முதலீடு
செய்ய கடன் வாங்கி /நோட்டடிதே செயல் பட்டது. மேலும் வரிவிகுதங்களை மிக
மைக அதிகமக்கியது. அதன் மூலம்
பண வீக்கம் மிக அதிகமாகி விலைவாசி விசம் போல் உயர்த்தொடங்கியது.

சரி, அத்தனை செலவு செய்து உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின்
வரல்லறை இன்கு பார்ப்போம்.

இரும்பு உருக்காலைக‌ள் அப்போது டாடா நிறுவ‌ன‌ம் ம‌ட்டும் ந‌ட‌த்திய‌து.
அமெரிக்க‌ க‌ம்பெனிக‌ள் 50க‌ளில் இந்தியாவில் புதிய‌ உருக்காலைக‌ள்
துவ‌ங்க‌ ஆர்வ‌ம் காட்டின‌. அந்நிய‌ முத‌லீடுக‌ள் அனும‌திக்க‌ப‌ட‌வே
இல்லை. இந்திய‌ர் தொழில் முனைவோர்க‌ளும் புதிதாக் ஆர‌ம்பிக்க
அனும‌திக்க‌ப‌ட‌வில்லை. (இன்ரு நேர் எதிர்). அர‌சே க‌ன‌ர‌க‌ தொழில்க‌ளை
துவ‌க்க‌ முற்ப‌ட்ட‌து, மிக‌ அதிக‌ செல‌வில்.

துர்காபூர், ரூர்க்கி, பிலாய் போன்ற‌ இட‌ங்க‌ளில் ர‌ஸ்ஸிய‌ உத‌வியுட‌ன்
இரும்பு உருக்கு ஆலைக‌ள் ஆர‌மிப்க்க‌ ப‌ட்ட‌ன‌. ஆர‌ம்ப‌ம் முத‌லே க‌டும்
சிக்க‌ல்க‌ள். ந‌ஸ்ட‌ம். ப‌ற்றாக்குறை.
அங்கு வேலை பார்ப‌வ‌ர்க‌ளும் அர‌சு ஊழிய‌ர்க‌ளாக‌ அனாத‌ல் அவ‌ர்க‌ளிட‌ம்
நேர்மையான‌ வேலை செய்யும் ம‌னோபாவ‌ம்
மிக‌ குறைவாக‌ இருந்த‌து.

மிக் முக்கிய‌மாக‌, நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சு உய‌ர் அதிகாரிக‌ளால்
தான் மேலாண்மை செய்ய‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர்க‌ள் ம‌த்திய‌ அமைச்ச‌ர்க‌ளுக்கு
கீழ் இருந்த‌ன‌ர். அதாவ‌து ஆளும்
காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர்க‌ள், அமைச்ச‌ர்க‌ள், அரசு உயர் அதிகாரிக‌ள் :
இவ‌ர்க‌ளின் முழு க‌ட்டுப்பாட்டில் இய‌ங்கிய‌து. எத்த‌னை தூர‌ம் நேர்மை,
ந‌டுவு நிலைமை, professionalisim,
சிக்க‌ன‌ம், இருந்திருக்கும் என்று க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள்.

போட்டிகள் கிடையாது, லாபம் எனப்து கெட்ட வார்த்தை.
இறக்குமதி மூலமும் போட்டிகள் கிடையாது. ஏனேனில் இறக்குமதி
செய்ய அன்னியல் செலவாணியே இல்லை. அரசிக்கு தட்டுபாடு.
இறக்குமதி லைசென்ஸ்கள் அளிப்பதில் கடும் ஊழல், அரசியல்
மற்றும் கள்ள சந்தை. இப்போது புரிந்து கொள்ள மிகவும்
கஸ்டம்.

அதாவது ஒரு நிறுவனம் ஒரு கனரக எந்திரங்கள் அல்லது உதிரி
பாகங்கள் வெளினாட்டில் இருந்து இன்று சர்வ சாதாரணமாக
இறக்குமதி செய்ய முடிகிறது. அன்று பகல் கனவு.
சுங்க வரிகளும் மிக மிக மிக அதிகம். 200 சதவீதம் எல்லாம்
இருந்தன.

அதனால் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் உறபத்தியை
மட்டுமே பல துறைகளில் நம்ப வேண்டிய நிலை.
இருந்த சில தனியார்களும் உற்பத்தியை பெருக்க தடை,
கடும் கட்டுப்பாடுகள்.

இரும்பு, சிமென்ட், உரம், கம்ரெஸ்ரர்கள், என்று பல முக்கிய‌
பொருட்க‌ளில் அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளே ஏக‌ போக‌மாக‌ திக‌ழ்ந்த‌ன‌.

ஏர் இந்தியா பற்றி பார்ப்போம். 1930களில் சிறிய அளவில் ஜே.ஆர்.டி டாடா
அவர்களால் கடும் முயற்சிகளுக்கு பிறகு ஆரபிக்கப்பட்டது. அவரின் திறமையான‌
மேலாண்மையினல் படிப்படியாக வளர்ந்தது. 1950களில் சோசியலிச பாணி அரசால்
'தேசியமயமாக்க' பட்டது. அதாவது ஜே.ஆர்.டி அவர்களிடம் இருந்து
பிடுங்கப்பட்டது.திருடப்பட்டது என்றும் சொல்லாம். ஆனால் செய்தது மக்கள்
அரசாச்சே.

அதன் பின் ஆரபித்தது சீரழிவு. ஒரு விமான போக்குவரத்து துறை இரு மத்திய
அமைச்சரின் கீழ் உருவானது. (இப்படித்தான் தேவை இல்லா புதிய அமைச்சர்
பதவிகள், அதிகாரி பதவிகள், பல் கோடி வெட்டிச் செலவுகள் ஆண்டு தோறும் ;
அதை விட கொடுமை இவர்கள் மிரட்டி வாங்கும் லஞ்சம், கட்டுபாடுகள் ; வேறு
பல‌ நாடுகளில் இது போன்ற அமைச்சர்கள் கிடையாது. தேவையும் இல்லை) விமானம்
வாங்குவதில் இருந்து, உதிரிப்பாகங்கள் வாங்குவது வரை, பராமரிப்பு
காண்ட்ராக்ட், ஆள் எடுப்பது போன்ற அனைத்து 'துறை' களிலும் லஞ்சம், ஊழல்,
கொள்ளை. இன்றும் தொடர்கிறது. பல வருடங்கள் நஸ்டம். மேலும் நஸ்டம்.
இந்த நஸ்டங்களை ஈடு செய்ய மத்திய அரசு, வரி பணத்தை வாரி இறைக்கும் கொடுமை.

சரியான நேரத்தில் பயணம் ஆரம்பிப்பது அரிது. பயணிகள் நலம் பற்றி கண்டு
கொள்ளாத திமிர் பிடித்த ஊழியர்கள். (அவர்கள் தாம் அரசு ஊழியர்களயிற்றே.
என்ன தவறு செய்தாலும் வேலை போகாதே). இதர தனியார் / வெளினாட்டு
விமானங்களில் பயணித்தவர்களுக்கு இந்த வித்தியாசம் உடனே தெரியும்.

நன்கு, திறமையாக நிர்வாகிக்கப்பட்ட ஒரு நிறுவனம், அரசுடைமயாக்கப் பட்டதன்
விளைவு எத்தனை கொடுமையான சீரழிவு. இது போல் பல நிறுவனங்கள்...

இந்தியன் வங்கியின் (Inidan Bank) கதை :

சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் செட்டியார் ஜாதியனரால்
துவக்கப்பட்ட வங்கிகள் பல : இந்தியன் வங்கி, கரூர் வைசியா வங்கி, லக்ஷ்மி
விலாஸ் வங்கி, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி போன்றவை.

1969இல் 100 கோடி ரூபாய் மதிப்பிற்க்க்கு மேற்பட்ட தனியார் வங்கிகளை
இந்திரா காந்தி 'தேசியமயமக்கினார்' ; ஓட்டு வங்கிகளை பெருக்கவும், தன்னை
ஒரு ஏழை பங்காளன் / உண்மையன சோசியசிஸ்ட் என்று காட்டிக்கொள்ளவும்,
காங்கிரஸில் நடந்த உட்பூசலில் தன்னை மக்கள் செல்வாக்குடன்
வலுவாக்கிக்கவும் இதை கள்ளத்தனமாக அமலாக்கினார். கரூர் வைசியா வங்கி,
லக்ஷ்மி விலாஸ் வங்கி போன்றவை தப்பின ; ஆனால் இந்தியன் வங்கி மாட்டியது.

1969 வரை இந்தியன் வங்கி நேர்மையாகவும், திறம்படவும் நிர்வாகம் செய்யப்
பட்டது. நஸ்டம் மற்றும் வராக்கடன் மிக குறைவு. அரசுடமையக்கப்பட்ட பின்
ஆரமத்தது சனி. நிதி அமைச்சரகத்திற்க்கு கீழ் நேரடி கட்டுப்பாட்டில்
வந்தது. வங்கி உயர் அதிகாரிகள் 'முன்னேற' அரசியல்வாதிகள் மற்றும் அரசு
உயர் அதிகாரிகளின் 'தயவு' தேவை பட்டது.

கடன் வழங்க‌ 'கமிஸன்' வாங்கும் ஊழல் பெரிய அளாவில் ஆரம்பித்தது.
த‌னியார்வ‌ச‌ம் இருக்கும் போதும் ஊழ‌ல் சிறிய‌ அளவில் இருந்திருக்கும்
தான். ஆனால் நிர்வாக‌ம் உட‌னுக்குட‌ன் அவ‌ற்றை விழிப்புண‌ர்வுட‌ன்
க‌ண்கானித்து உட‌ன‌டியாக‌ த‌குந்த‌ மாற்று ந‌ட‌வ‌டிக்கை ம‌ற்றும்
தண்ட‌னைக‌ள் க‌ன்டிப்புட‌ன் செய்வ‌ர். ப‌ங்குதார்க‌ளுக்கு ப‌தில்
சொல்ல‌வேண்டிய‌ பொறுப்பு எப்போதுமே தனியா‌ர் நிர்வாகிக‌ளுக்கு மிக‌ மிக‌
அதிக‌ம். ஆனால் அர‌சுடைமையாக்க‌ப் ப‌ட்ட‌ பிற‌கு அனைத்து ப‌ங்குக‌ளும்
அர‌சிட‌ம்தான். அர‌சு என்றால் அதிகாரிக‌ளும், அமைச்ச‌ர்க‌ளும் தான்.
யாருக்கும் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ 'பொறுப்பு' இல்லையே. ந‌ஸ்ட‌ம்
ஆனாலும், சீர‌ழிந்தாலும் பொதுப்ப‌ண‌ம் தானே என்ற‌ அல‌ட்சிய‌ம் ம‌ற்றும்
பொறுப்பின்மை அனைத்து அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளுக்குமே பொது.

90க‌ளில் நிலைமை ப‌டுமோச‌மான‌து. வ‌ங்கிச் சேர்ம‌னாக‌ கோப‌ல‌க்கிருஷ்ண‌ன்
நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். ப‌ல‌ருக்கும் ச‌க‌ட்டுமேனிக்கு வாரி வ‌ழ‌ங்கினார்.
மூப்பானாரின் சிபாரிசுக‌ள் அதிக‌ம். ப‌ல‌ அயோக்கிய‌ர்க‌ளுக்கு
அநியாயமா‌க‌, அனைத்து விதி முறைக‌ளையும் மீறி க‌ட‌ன்க‌ள்
வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இறுதியில் வ‌ங்கி திவால் நிலைமையை அடைந்த‌து.
கோபாலக்கிருஷ்ணன் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அர‌சு வேறு வ‌ழியில்லாம‌ல் 2000 கோடி வ‌ரை புதிய‌ முத‌லீடுக‌ளை
வ‌ங்கிக்குள் செலுத்தி வ‌ங்கியின் நிலைமையை ச‌ரி செய்த‌து. இந்த‌ 2000
கோடிக‌ள் ம‌க்க‌ளின் வரிப்ப‌ணாம். ப‌ல‌ முக்கிய‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளுக்கு
செலவு செய்ய வேண்டிய‌ ம‌க்க‌ள் ப‌ண‌ம் இப்ப‌டி 'கொள்ளை' போன‌து.

ஆனால் த‌னியார் வ‌ச‌மே தொட‌ரும் க‌ரூர் வைசியா வ‌ங்கி போன்றவை ந‌ன்கு
வ‌ள‌ர்ந்த‌ன‌. இந்திய‌ன் வ‌ங்கிக்கு விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே அர்.பி.அய்
விதிமுறைக‌ள், க‌ட்டுப்பாடுக‌ள் தாம் அவைக்கும். ஆனால் திற‌ம்ப‌ட‌,
நேர்மையான்‌ நிர்வாக‌ம் ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சியை அளிக்கின்ற‌து இன்ற‌ளவும்.
அங்கும் வ‌ராக்க‌ட‌ன்க‌ள், ந‌ஸ்ட‌ம் அவ்வ‌போது ஏற்ப‌டும். ஆனால்
திற‌மையாக் ச‌மாளிக்க‌ ப‌டும்.

60,000 கோடிக‌ளுக்கு மேல் அர்சு வங்கிக‌ளில் வ‌ராக்க‌ட‌ன். அவ‌ற்றை
வாங்கிய‌ தொழில‌திப‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டும் என்று
அனைவ‌ரும் (முக்கிய‌மாக‌ க‌ம்யூனிஸ்டுக‌ள்) வ‌லியுறுத்துவ‌து ச‌ரிதான்.
ஆனால் அவை த‌னியார் வ‌ங்கிக‌ளில் ஏன் அந்த‌ அளவு வ‌ராக்க்ட‌ன் ம‌ற்றும்
ஊழ‌ல் இல்லை என்ப‌தை விள‌க்க‌ வேண்டும்.

க்ளோப‌ல் ட‌ர‌ஸ்ட் வ‌ங்கி என்னும் புதிய‌ த‌னிய‌ர் வ‌ங்கி ப‌ல‌
த‌வ‌றுக‌ள் புரிந்து திவாலான‌து உண்மைதான். ஆனால் அதை ஈடு செய்ய‌ அர‌சின்
பொது ப‌ண‌ம் செல‌விட‌ப்ப்ட‌வில்லை. அந்த‌ வ‌ங்கி வேறு ஒரு ப‌ல‌மான‌
வ‌ங்கியுட‌ன் அய்க்கியப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் ப‌ங்குதார்க‌ள்தான்
ந‌ஸ்ட‌த்தை ஏற்ற‌ன‌ர். அர‌சு அல்ல். இது தான் முக்கிய‌ வித்தியாச‌ம்.

ஜென்ரல் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களான் GIC : National, Oriental, United
India, New India Assurance ; நான்கும் 50களில் தேசியமயமாக்கப்பட்டன.
அத‌ன் பிற‌கு அதில் ந‌ட‌க்கும் ஊழ‌ல் ம‌ற்றும் கூட்டுக் கொள்ளைக‌ள்
ப‌ற்றி த‌னியாக‌ க‌ட்டுரை எழுத‌லாம். வாகன‌ இன்ஸுர‌ன்ஸ், அதாவ‌து வாக‌ன‌
விப‌த்து காப்பீடுக‌ளில் ந‌ட‌ப்ப‌து ஒரு கூட்டுக்கொள்ளை. காப்பீட்டு
நிறுவ‌ன‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர், நீதிப‌தி, போலிஸார்,
விப‌த்தில் ப‌லியான‌ / அடிப‌ட்ட‌வ‌ரின் உற‌வின‌ர் ம‌ற்றும் அவ‌ரின்
வ‌ழ‌க்க‌றிஞ‌ர் அனைவ‌ரும் 'சேர்ந்து' காப்பீட்டு நிறுவ‌ன‌த்தை
கொள்ளை/சுரண்ட‌ல் செய்கின்ற‌ன‌ர். காப்பீட்டு நிறுவ‌ன‌ அதிகாரிக‌ளும்
வ‌ழ‌க்கு ப‌ற்றி க‌ண்டு கொள்ள மாட்ட‌ர்க‌ள். போலி வ‌ழ‌க்குக‌ள், போலி
'முத‌ல் த‌க‌வ‌ல் அறிக்கைக‌ள்' போலி ஆவ‌ண‌ங்க‌ள் என்று ஒரு முறையே
உருவாகியுள்ளது. ச‌மீப‌த்தில் நாம‌க்க‌ல், க‌ரூர் ப‌குதி தேசிய‌
இன்ஸுர‌ன்ஸ் நிறுவ‌ன‌ ஊழ‌ல்க‌ளை விசாரிக்க‌ சி.பி.ஐ வ‌ந்த‌து ஞாப‌க‌ம்
இருக்க‌லாம்.

த‌னியார் இன்ஸுர‌ன்ச் நிறுவ‌ன‌ங்க‌ள் வாக‌ன‌ இழ‌ப்பீடு விசிய‌ங்க‌ளில்
ஏமாறுவ‌தில்லை. நிர்வாகிக‌ள் ப‌ங்குதார்க‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌
க‌ட்டாய‌ம் ; அத‌ன் வ‌ழ‌க்கறிஞ‌ர்கள், தோற்க்கும் வ‌ழ‌க்குக‌ளுக்கு
த‌குந்த‌ ப‌தில் சொல்ல‌ வேண்டும். இதெல்லாம் அர‌சு நிறுவ‌ன‌ங‌க‌ளில்
கிடையாது. அத‌னால் தான் பிரிமிய‌த் தொகை அதிக‌மாக்க‌ வேண்டிய‌ நிலை.
சுர‌ண்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ணத்தை வாடிக்கையாளார்க‌ளிட‌ம் இருந்து வ‌சூல் செய்து
ச‌ரிக‌ட்டும் அவல‌ம்.

நிலகரி சுரங்கங்கள் சுதந்திரத்திற்க்கு முன் தனியார் வசம் தான் இருந்தன.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, மத்திய அமைச்சர் மோகன்
குமாரமங்கலமின் வழிகாட்டுதலில், அவரின் கீழ் பணி புரிந்த ஒரு உயர்
அதிகாரி தேசியமயமாக்கலை வழினடத்தினார். 25 ஆண்டுகள் கழித்து அந்த அதிகாரி
அதற்க்காக மிகவும் வருத்தப்பட்டு, நொந்து போய் எழுதிதியிருந்தார். எந்த
நோக்கத்திற்க்காக நிலக்கரி சுரங்கங்கள் அரசுடைமையாக்கப்பட்ட‌னவோ,
அதற்க்கு நேர் எதிரான விளைவுகளே நடந்தன. நிலக்கரி மாஃபியா என்னும்
கிரிமினல் குழுக்கள் பீகார் பகுதிகளில் புதிதாக தோன்றி இன்று
கான்ட்ராக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மிரட்டல், பணம் பறிப்பு,
கடத்தல் மற்றும் ஊழல் அதிகாரிகள்/அமைச்சர்களோடு 'கூட்டு சேர்ந்து' கொள்ளை
போன்ற கொடுமைகளில் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றன. அவர்களாஇ மீறி அங்கு
யாரும் நிலகாரியை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல முடியாது. மேலும் ஒரு
புத்தகமே இதை பற்றி எழுதலாம்...

http://www.india-seminar.com/2001/502/502%20suhel%

////Corporate corruption in India can easily be classified into two parts:
corruption by PSUs (public sector units) and that by the private
sector. The analysis in many parts will be common, but suffice to say
that it is the PSUs which even today practise it with aplomb. Every
PSU gives way when it comes to accountability. While institutions such
as the Unit Trust of India have come in for heavy criticism because of
the parameters they have used to disburse loans, the picture is no
different in most PSUs which remain the fountainhead of all white
collar corruption.

No amount of vigilance activities or the fulminations of the CVC have
been able to curb their wanton expenditure. From private visits in
some steel plant's planes to quota disbursals, especially in the Coal
Indias of the world, we have seen it all. It is the PSU that still
supports the errant ways of bureaucrats and ministers in its
supervising ministries which is why corruption cannot be snuffed out –
it travels right to the top. India is the only country which sees
battles within the Prime Minister's Office to appoint chairmen of
nationalized banks or functionaries to some important financial
institutions.

Corruption at the PSU is manifested in several ways; it ranges from
the empanelment of suppliers to the selection of employees. In fact,
some of the biggest scams are in the area of recruitment for these
PSUs. The tack that most PSUs employ is to create artificial
employment, which in the ultimate analysis is harmful to shareholder
interest. However, since the largest (if not the only) shareholder in
almost all these PSUs is the government, accountability is the least
important of issues! The other facet of corporate corruption is what I
call the 'constituency nurturing' syndrome. A careful observation will
show that many ministers make it a point to extract all they can in
the form of cash or kind in order to benefit their constituency. Now
if this isn't corruption, then what is?

Would this happen if things were transparent? It is galling that
despite severe strictures, even from the Supreme Court in many
instances, we see flagrant violations in appointments to these
high-powered posts. We have put in place a system which breeds
corruption at all levels: whether it is the lowly excise inspector to
the Chairman of the Customs Board (who was recently arrested),
corruption has permeated every aspect of Indian existence and it is
not getting any better! ////