உணவும், உடையும்

இந்திய விவசாயம் சீரழிந்து விட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தொடர்ந்து அங்காலாய்ப்பு. இதற்கெல்லாம் காராணம் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகள் தான் என்று மிக எளிமைபடுத்தப்பட்ட வாதம் தொடர்ந்து ஒலிக்கிறது, உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ சேவை, கல்வி என்று வரிசையக செல்லும் அடிப்படை தேவைகள். இதில் இரண்டாவது அடிப்படை தேவையான உடை பற்றி பெரிய சர்ச்சை, விவாதம், அறச்சீற்றம் எதுவும் இன்று தென்படுவதில்லை. இதர தேவைகள் பற்றி தான். ஏன் என்று பார்ப்போம்.
90கள் வரை இந்திய தொழில்துறை அரசின் கட்டுபாடுகள், லைசென்ஸ், பெர்மிட், கோட்டா ராஜ்ஜிய முறையால் கடுமையாக கட்டுபடுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்தது. 1991இல் நடைமுறைபடுத்தப்பட்ட தாராளமயமாக்கல் இந்த கட்டுப்பாடுகளை பெருமளவில் ஒழித்தது. பார்க்கவும் :  'தாரளமயமாக்கல்' என்றால் என்ன ?

அதற்க்கு முன்பு வரை ஆடை என்பது பெரு வாரியான இந்திய மக்களுக்கு ஆடம்பர செலவு என்ற வகையில் தான் இருந்தது. இன்று சொன்னால நம்ப முடியாது. ஆனால் அன்று கந்தல் மற்றும் கிழிந்த ஆடைகள் சர்வ சாதாரணம். மிக குறைந்த எண்ணிக்கையில் தான் பெரு வாரியான மக்க்ள வைத்திருந்தனர். முக்கியமாக ஏழைகளும், கூலி தொழிலாளர்களும், அனாதை குழந்தைகளும், பிச்சை எடுப்பவர்களும் அன்று உடுத்த போதுமான, மலிவான ஆடைகள் இல்லாமல் பெரும் துன்பத்தில் திளைத்தனர். (இன்று உணவு, இருப்பிடம் போல் அன்று ஆடையும் பற்றாக்குறை மற்றும் கடும் விலை). பழைய கருப்பு வெள்ளை படங்கள், 70களில் வெளி வந்த கலர் படங்களை பார்த்தால் தெரியும்.

1991 வரை புதிய நூற்பாலைகள், பஞ்சாலைகள் துவங்க லைசென்ஸ் தேவை பட்டது. உற்பத்தியை பெருக்க பெரும் தடைகள். வரி விகிதங்களும் மிக மிக அதிகம். உற்பத்தி வரி, சுங்க வரி, விற்பனை வரி, ஆக்ட்ராய் என்று பெரும் சுமை. எனவே அனைத்து உற்பத்தியும் நசுக்கப்பட்டு, விலை அதிகமாக, பற்றாக்குறை இருந்த காலங்கள். தாரளமயமாக்கல் வந்தவுடன் தான் உற்பத்தி துறைக்கு புத்த்யுர் பிறந்து, பெரு வெள்ளம் போல் பெருகியது. ஆடை மிக மலிவாக, தாரளமாக கிடைக்க துவங்கியது. இன்று ஒரு அடிமட்ட கூலி தொழிலாளி, தன் ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவை வாங்க முடியும். People are better clothed now than ever before. பிச்சைகாரர்கள் கூட தான்.

இதே மாற்றம் ஏன் விவசாயத்தில் சாத்தியமாகவில்லை ? வளர்ந்த நாடுகளில், முக்கியமாக அமெரிகாவில் வறுமை என்பது உணவு கிடைக்காத பட்டினி அல்ல. இருப்பிடம், மருத்துவ வசதி இல்லா நிலை தான் அங்கு வறுமை. உணவு விலை அங்கு மிக மிக மலிவு. காரணம் விவசாய உற்பத்தி முறை முற்றாக ‘முதலாளித்துவ’ பாணியில், பெரும் பண்ணைகளில், நவீன வேளான்மை முறைகள், எந்திரங்கள் கொண்டு பயிரடப்படுகிறது. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் மக்கள் படிப்படியாக விவசாயத்தில் இருந்து உற்பத்தி துறைக்கும், பிறகு சேவை துறைக்கும் மாறினர். இன்று அங்கு விவசாயத்தில் மிக குறைந்த எண்ணிகையிலான மக்களே உள்ளனர். (10 சதத்திற்க்கும் குறைவானவர்கள்). இந்தியாவில் இதை அனுமதிக்காமல், முட்டாள்தனமான ‘நில சீர்திருத சட்டங்கள்’, ‘நில உச்ச வரம்பு சட்டங்கள்’ போன்றவையினால், சராசரி பண்ணையின் அளவு இன்று 2 ஏக்கருக்கும் குறைவு. ஆனால் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு இன்னும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். Two thirds of the population are still trapped in agriculture.


Economics of scale என்று ஒரு முக்கிய விசியம் உண்டு, பெரும் அளவில், நவீன முறையில் உற்பத்தி செய்யப்படும் பண்டத்தின் விலை மிக மிக குறையும். (ஆடையில் இது இந்தியாவில் நிகழ்ந்தது). முதலாளித்துவ, கம்யூனிச முறை எதுவாகினும் இது பொருந்தும். பழைய சோவியத் ரஸ்ஸியாவில், கூட்டு பண்னைகளில் அளவு பல ஆயிர்ம் ஏக்கர்களின் இருந்தது. இன்று உள்ள ரஸ்ஸியாவிலும் தான். வளர்ந்த நாடுகல் அனைத்திலும் இதே போல் தான். ஆப்ரிக்காவில், தென் அமெரிகாவில் கூட இந்தியா போல் நில உச்ச வரம்பு தடைகள் இல்லை. 500 ஏக்கர் பண்ணைகள் சர்வ சாதாரணம். இங்கு இப்ப சாத்தியமில்லை. எனவே உற்பத்தி செலவு மிக மிக அதிகம். புதிய முதலீடுகள் விவசாயத்தினுள், பங்கு மற்றும் நிதி சந்தை மூலம் செல்வது மிக மிக குறைவே. எனவே சிறு விவசாயிகள் மிக அதிக வட்டிக்கு, தனியார்களிடம் கடன் வாங்கி திவாலுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆந்திரா, மகாராஸ்ட்ரா பகுதிகளில், பருத்தி விவசாயிகள் தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். பல காரணிகள். கடன் சுமை முக்கிய காரணம். தாரளமயமாக்கல் தான் காரணம் என்றால் இந்தியா முழுவதும், அனைத்து வ்கை விவசாயிகளும் ஒரே விகிதத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லை.

காப்பி, டீ, ரப்பர் எஸ்டேடுகளுக்கு இந்த நில உச்ச வரம்பு சட்டம் கிடையாது. ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் ஒரே எஸ்டேட்டில் இருக்கும். ஏன் என்று யாரும் யோசிப்பதில்லை. ஏனைய விவசாயம் போல் இதிலும் துண்டு துண்டான சிறு விவசாயிகளின் நிலம் போல் இருந்தால், கட்டுபடியாகது. பெரும் அளவில் உற்பத்தி, குறைந்த செலவில் செய்யவே முடியாது. எல்லாம் விவசாயம் தான். ஆனால் அரசின் சட்ட திட்டங்களால தான் இத்தனை குளருபடி.

உடனடியாக நில உச்ச வரம்பு சட்டத்தை ரத்து செய்ய முடியாது. படிப்படியாக செய்யலாம். இதை பற்றி முதலில் பொது விவாதம் தேவை. கார்பரேட் பண்ணைகளை அனுமதிப்பது பற்றியும் விவாதம் தேவை.

பொருளாதார மந்தங்கள் பற்றி..

பொருளாதார மந்தங்கள் பற்றி..

'முதலாளித்துவ' பாணி பொருளாதார அமைப்பில், சில ஆண்டுகளுக்கு ஒரு
முறை பொருளாதார மந்தம் தொடர்ந்து உருவாகி வந்து கொண்டே இருக்கிறது.
இதற்க்கு காரணம் பற்றி இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.

Monetarists என்று ஒரு பிரிவு பொருளாதார அறிஞர்களில் உண்டு. நான் அவர்கள்
வாதத்தையே முன் மொழிகிறேன். சுருக்கமாக சொன்னால், பண 'சப்பளை'
தான் மூலக்காரணி. பணத்தை 'உருவாக்கும்' அதிகாரம் அல்லது உரிமை
'தேசியமயமாக்கப்பட்டு' நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. பணத்தை
அரசுகள், தம் நாட்டின் மைய்ய வங்கி (reserve bank or central bank) மூலமே
உருவாக்கும் நிலை கடந்து 150 ஆண்டுகளாக.

பணத்தின் பயன்பாடுகள் பல உண்டு, அதில் சில :

1. பண்ட மாற்றுக்கான மீடியம். (medium of exchange)
2. மதிப்பை அளக்க அலகு  (measure of value)
3. மதிப்பை சேமித்து வைக்க. (store of value)

ஒரு நாட்டிற்க்குள் இருக்கும் நிகர பண சப்பளையில் அளவு
நியயமற்ற அல்லது 'சரியான' முறையில் மாறாமல், அரசுகளின்
இஸ்டதுக்கு மாறினால், உருவாகும் விளைவுகளே பொருளாதார
சுழற்சிகள்.

அரசு தன் செலவுகளுக்குகான நிதி ஆதாரங்களை இரு வழியில் பெறும் :
வரி விதிப்பு மூலம் ஒன்று. இரண்டாவது கடன் வாங்குவது மூலம். தம்
கடன் பத்திரங்களை ரிஸர்வ் வங்கியிடம் 'விற்று' அதற்க்கு பதிலாக legal
tender money எனப்படும் பணத்தை பெற்று செலவு செய்வது. சந்தையில்
தனியார்களிடமும் அரசு கடன் பத்திரங்களை விற்று பணம் ஈட்டும்.

பொதுகாவே அரசுகளின் செலவுகள், வரவை விட அதிகமாகவே இருக்கும்.
பற்றாகுறையை ஈடு கட்ட, கடன் வாங்கி சமாளிப்பதே வாடிக்கை. இங்கு
கடன் என்பது மக்களிடம் இருந்து மறைமுகமாக வாங்குவது. அதாவது
நோட்டடித்து வருமானம் ஈட்டுவது.

வட்டி விகிதங்கள் எப்போதும், பணவீக்க விகுதத்திற்க்கு நேர்விகிதத்தில்
தான் இருக்கும். எங்கு விலைவாசி உயர்வு விகிதம் அதிகமாக இருக்கிறதோ
அந்நாடுகளில் தான் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். எனெனில் வட்டி
என்பது பணத்திற்கான 'விலை' அல்லது 'வாடகை' ; money costs. பணத்தின்
மதிப்பு, விலைவாசி உயர்வு எத்தனை சதம் உள்ளதோ அதே அளவில்
'தேயும்'. depreciation of value of currency. எனவே வட்டி விகிதம் இந்த தேய்மான
அளவை விட அதிகமாகவே இருக்கும். இது அடிப்படை பொருளாதார விதி.

ஆனால் அரசுகளின் ரிசர்வ் வங்கிகள் இந்த வட்டி விகுதத்தை செயற்கையாக
குறைத்து அல்லது அதிகரித்து வைக்க்கும் நடைமுறை இருக்குறது. அதாவது
தம் ரிசர்வ் வங்கிகள், தனியார் வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைகளுக்கான
வட்டியின் அளவை செயற்கையாக நிர்ணியத்து, அதன் மூலமும் பண சப்பளையின்
அளவை கட்டுபடுத்த முயலும். இதன் மூலம் நிஜ சந்தை நிர்ணியக்கும் வட்டி
விகுத்தை (real rate of interests) விட குறைவான விகிதத்தில் கடன் அளித்து,
negative rates of interest அய் உருவாக்கும் முறை உள்ளது. முக்கியமாக அமெரிகாவின்
ரிசர்வ் வங்கியான ஃபெட்ரல் ரிஸவர் இப்படி தான் பல காலமாக செய்கிறது.

இதற்க்கு காரணம் : அமெரிக்க அரசின் தொடர்ந்து பெருக்கும் பற்றாக்குறை
பட்ஜெட்டுகள். பற்றாகுறைய நிரப்ப ஃபெட் இடம் தொடர்ந்து 'கடன்' வாங்கும்.
அதற்க்கு ஈடாக தம் கடன் பத்திரங்களை அளிக்கும். ஃபெட் நோட்டடித்து
கடன் வழங்கும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வளரும் பட்சத்தில், அதன் வளர்ச்சி விகிதம்
எத்தனை சதமோ, அதே சதவீதத்தில் நிகர பண சப்ப்ளையும் அதிகரித்தால்,
விலைவாசி உயர்வு மிக மிக குறைவாக ஒரு சதத்திற்க்கு கீழே இருக்கும்.
தியரி படி. ஜெர்மனியில் இது பல ஆண்டுகளாக முன்பு சாத்தியமானது.
பெரும்பாலான நாடுகளில் அப்படி நடப்பதில்லை. பண சப்பளை (M-3)
பெரும் விகிதம், நாட்டின் ஜி.டி.பி வளரும் விகித்தை விட மிக அதிகான
விகிதத்தில் தான் இருக்கிறது. ராணுவ செலவு, நிர்வாக செலவு, இதர
வெட்டி செலவுகள் என்று அரசுகள் இஸ்டத்துக்கு, பொறுப்பில்லாமல்
செலவு செய்யும் போது, இப்படி தான் ஆகும்.

இதன் விளைவுகள் தான் தொடர் பொருளாதார சுழற்சிகள். பண சப்பளை
அதிரிக்கும் போது பல price signals எனப்படும் 'விலைகள் அளிக்கும்
தகவல்கள்' இயல்புக்கு மாறாக, உருமாறி, distort ஆகி, தவறான
'சமிக்கைகளை' உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்,
நுகர்வோர்களுக்கும் அளிக்கும். செயற்கையாக பண்டங்கள் மற்றும்
சொத்துகளில் விலை உயரும் போது, உற்பத்தியாளர்கள் தம்
உற்பத்தியை அதிகரிக்க முயல்வர். நல்ல விலை கிடைக்கிறது என்று
'சமிக்கை' (தவறாக, மாயை போல்) கிடைப்பதால் இது நிகழும். நுகர்வோர்களும்
கடன் அதிகம் வாங்கி, பொருட்களை அதிகம் வாங்குவர். எனெனில்
அரசின் தலையீட்டால் வட்டி விகிதங்கள் செயற்கையாக குறைந்த
அளவில் இருப்பதால். எதிர்காலத்தில் தொடர்ந்து இந்த boom இருக்கும்
என்ற மாயையில் பலரும் தவறான முடிவுகள் எடுப்பர்.

ஆனால் இயற்கைக்கு மாறான இந்த boomகள் அதிக காலம் நிற்காமல்,
நீர் குமிழி வெடிப்பதை போல் நொறுங்கும். பொருளாதார மந்தம்
உருவாக்கும். அதை தீர்க்க அரசுகள் மேலும் பண சப்பளையை அதிகரித்து,
வட்டி விகிதங்களை குறைத்து, நிலைமையை 'சரி செய்ய' முயலும்.
மீண்டும் ஒரு boom உருவாகி சுழற்சி தொடரும். இது தான் கடந்த கால
வரலாறு. இதற்க்கு விதிவிலகான நாடுகள் உண்டு, முக்கியமாக ஜெர்மனி.

Foreign exchange ratesகளும் பல நாடுகளில் செயற்கையாக கட்டுப்படுத்தப்படிருப்பது
மேலும் ஒரு சிக்கல். உலக பொது கரண்டியாக ஆகிவிட்ட அமெரிக்க டாலரை
ஏற்றுமதி செய்யும் நாடுகள் செயற்கையாக தூக்கி பிடித்திருப்பதும் ஒரு
பெரிய distortion and imbalance creating phenomenon.

இன்னும் விரிவாக, ஆழமாக பேசப்பட வேண்டிய விசியம் இது. மேலும்..

http://en.wikipedia.org/wiki/Monetarism
http://en.wikipedia.org/wiki/Austrian_business_cycle_theory

ஊழலின் ஊற்றுகண் - 2

சோசியலிசம் என்ற சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்துப்படுவதால்
குழப்பம் அதிகம். கம்யூனிசததிற்க்கு முன்னோடியான சோசியலிசம் வேறு. நான் சொல்ல வருவது, சில மே.அய்ரோப்பிய நாடுகளில், இந்தியாவில் அன்று கடை பிடிக்கப்பட்ட ஜனனாயக பாணி சோசியலிசம்.
இந்தியாவில் சோசியலிச பாணி என்ற பெயரில் 50களில் இருந்து நடைமுறை படுத்தப்பட்ட கொள்கைகள் :
அய்ந்தாண்டு திட்டங்கள் : இவை நாட்டில் பொருளாதாரத்தை முழுவது திட்டமிட்டு நடத்தும் நோக்கதில் உருவாக்கப்பட்ட்ன. முடிந்த வரை அரசு துறைக்குதான் முக்கியத்துவம். தனியார் துறை மிகுந்த கட்டுப்படுகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஒவ்வொறு துறையிலும் தனியார்கள் எந்த ஒரு பொருளையும், எத்தனை அளவு உற்பத்தி செய்ய முன் அனுமதி அளிக்க industrial licensing policy என்ற சட்டம் இயற்றப்பட்டது.
சில முக்கிய துறைகள் தனியார்களுக்கு அனுமதி மறுக்கப்ப்ட்டன. பல துறைகளில், மிக குறைந்த அளவு லைசென்ஸே அளிக்கப்பட்டது. பொதுதுறை வளர வேண்டி, தனியார் துறை முடக்கப்பட்டது. ஆனால் பொதுதுறையால வேண்டிய உற்பத்தி செய்ய இயலாமல் பற்றாக்குறை உண்டாகியது. சிமெண்ட். நூல், ஜவுளி என்று பல விசியங்களில் கடும் பற்றாக்குறை. அதனால கடத்தல், கள்ள சந்தை உருவாகி, ஊழல் தலைகாட்டியது.
இந்த லைசென்ஸ் ராஜ்ஜியத்தை கட்டிக்காக்க பெரும் அரசு அதிகாரவர்கள் உருவாக்கப்பட்டது. அவர்களின் நேர்மை படிப்படியாக குறைந்தது. தொழிலதிபர்கள் புதிய நிறுவனங்களை ஆரம்பிக்க, இருக்கும் நிறுவனங்களை விரிவு படுத்த, இந்த அதிகாரிகள், அமைச்சர்களின் தயவை நாட வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால லைசென்ஸ் வழங்குவதில் லஞ்சம் மற்றும் political patronage பெரிய அளவில் உருவானது. இது இந்திரா காந்தி காலங்களில் அதி உச்சமடைந்தது.
அரசு துறையை தொடர்ந்து விரிவு படுத்த, ராணுவ செலவுகளை செய்ய அரசு பெரும் அளவில் வரி விதித்தது. புதிய புதிய வரிகள் விதிக்கப்பட்டன. உச்சபட்சமான வருமான வரி 98 % அளவிற்க்கு (கோடீஸ்வர்களுக்கு மட்டும்) 70களில் உயர்ந்தது. இதனால் பெரும் அளவில் வரி ஏய்ப்பு நடக்க ஆரம்பித்தது. கருப்பு பணம் மிக மிக மிக அதிகம் உருவாகி, நேர்மையை அழித்தது.
தேசியமயமாக்கல் என்ற ‘அபாயம்’ இருந்ததால், பலரும் புதிய தொழில்களை துவக்க, ரிஸ்க் எடுக்க தயங்கினர். அதனாலும் உற்பத்தி பற்றாகுறை ஏற்பட்டு சிக்கல் அதிகரித்தது.
அன்னிய முதலீடுகளே தடை செய்யப்பட்டன. அன்னிய நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. ரூபாய், பணச் சந்தையில் இன்று போல் float செய்யப்படாமல், severe foreign exchange rate controlsகளுக்கு உட்படுத்தப்பட்டது. ரூபாயின் மதிப்பு செயற்க்கையாக சந்தை மதிப்பை விட, பல மடங்கு அதிகமா நிலை நிறுத்தப்பட்டது. அனைத்து பரிவர்த்தனைகளும் அரசின் ரிஸர்வ் வங்கி மூலம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இறக்குமதி எப்போதும் நமக்கு ஏற்றுமதியை விட டாலர் மதிப்பில்அதிகம். அதனால் டாலர் இருப்பு எப்போதும் பற்றாக்குறை. ஏற்றுமதியும் அதிகரிக்க வழியில்லை காரணம் நம் ரூபாயின் மதிப்பு செயற்கையாக அதிகமாக வைக்கப்பட்டதால். வெளிநாடுகளில், நம் பண்டங்களை இறக்குமதி செய்பவர்கள், சந்தை மதிப்பை விட அதிக விலை அளித்து, இறக்குமதி செய்ய தயாரில்லை. இது புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படையான விசியம் தான். (ரூபாய்க்கி எதிராக டாலர் வீழ்ச்சி அடைந்த 2007இல், நம் ஏற்றுமதியாளர்கள் அடைந்த பிரச்சனைகள், நஸ்டங்களை நினைவு கூருங்கள்).
இறக்குமதி செய்ய லைசென்ஸ்கள் அரசாங்கத்தால் அளிக்க்பட்டன. அன்னிய செலவாணி மிக தட்டுப்பாடாக இருந்தால், எந்த பண்டம் அத்தியாவியம், எது ஆடம்பரம், யாருக்கு இறக்குமதி லைசென்ஸ் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் (காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும்), உருவாக்கப்பட்டன. இது பெரும் ஊழலுக்கு வகை செய்தது. பெரும் தொழிலதிபர்கள், தளவாடங்கள், இயந்திரங்கள், மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அதிகாரிகளில் தயவு மிக மிக அதிகம் தேவை பட்டது. போதாக்குறைக்கு, சில முக்கிய ஏற்றுமதி / இறக்குமதி வணிகம் அரசுடைமயாக்கப்பட்ட State Trading Corporation மூலமாக மட்டும் தான் சாத்தியாமானது. அதில் மெகா ஊழல் உருவானது.
அரசின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேயிருந்தது. சமாளிக்க தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்டுகள். அதாவது புதிதாக பெரிய அளவில் நோட்டடித்து, அரசு பொறுப்பில்லாமல் செலவு செய்தது. இதன் விளைவு கடுமையான விலைவாசி உயர்வு. ஆண்டுகள் 18 சதவீதம் எல்லாம் சாதாரணம். அதனால வட்டி விகுதங்களும் அதை விட அதிகமாக உயர்ந்து, மக்களை வாட்டியது.
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்த்தால், அதற்க்கு ஏற்றது போல், கூலி உயர்வு கேட்டு, தொழிலாளர்களின் போராட்டமும் வலுத்தது. அதனால் வருடத்தில் பல நாட்கள் உற்பத்தி முடங்கி, பற்றாக்குறை அதிகரித்தது. புதிய தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தியிம் அதிகம் இல்லை. இரும்பு, சிமெண்ட், சர்கரை, உரம் போன்ற பல பொருட்களின் விலையை அரசு கடுமையான price controls மூலம் கட்டுப்படுத்தியது.
இதனால கள்ள சந்தை, கடத்தல், பதுக்கல் உருவாகி, நேர்மையை மேலும் சீரழித்தது.
வறுமையும் தொடர்ந்து அதிகரித்தது. வேலை இல்லாத்திண்டாடமும் மிக மிக அதிகரித்தது. ஜனத்தொகையும் தொடர்ந்து உயர்ந்தது.
தொழிற்துறையை முடக்கியது போதாது என்று விவசாயத்தையும் சோசியலிச கோட்ப்படுகள் என்ற பெயரில் முடக்கினார்கள். நில உச்ச வரம்பு சட்டம் என்று எந்த ஒரு விவசாயும், நஞ்சை நிலங்கள் 15 ஏக்கர்களுக்கு மேல் சொந்தமாக வைத்திருக்க கூடாது என்று தடை. இதனால் பினாமி நிலங்கள் உருவாகின. வளர்ந்த நாடுகளில் நடந்தது போல், பெரும் அளவு கொண்ட நவீன பண்ணைகள் உருவாகி, விவசாய உற்பத்தி திறன், அதாவது maximization of yield and minimization of productions costs due to economies of scale and use of modern technology இங்கு சாத்தியமில்லாமல் போயிற்று. இதனால் தானிய விலை மிக மிக அதிகமாக உயர்ந்தது.
அன்னிய முதலீடுகள், இந்திய பெரு முதலாளிகள், பெரிய விவசாயிகள் : இவர்கள் அனைவரும் மெகா வில்லன்கள் என்று இடதுசாரிகளால் தொடர்ந்து மேடைகளிலும், ஊடகங்களிலும் தூற்றப்பட்டனர். மக்களின் பொது புத்தியிலும் அப்படி ஏற்றப்பட்டது. இதனால் (இன்று போல் அல்லாமல்) தொழில் துவங்க பலரும் அன்று தயங்கினர். A whole generation of ‘would be’ entrepreneurs were blunted from risk taking and made to look for got jobs.
தனியார் துறை மிக குறைவான வேலை வாய்புகளையே இதனால் உருவாக்க முடிந்தது. பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் மிக மிக அதிகரித்தது. வேலை என்றால் அரசு துறை வேலை மட்டும் தான் என்று பல பத்தாண்டுகள் இருந்தது. எம்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்துவிட்டு, வேலை கிடைக்காமல், இளைஞர்கள் தாடி வளர்த்துக் கொண்டு, குட்டை சுவற்றில் அமர்ந்து, கம்யூனிசம் பேசினர். 1980இல் வெளிவந்த வறுமையில் நிறம் சிகப்பு படம் அருமையாக இந்த சூழலை காட்சிபடுத்தியது.
அன்னிய செலவாணி பற்றாமல், அய்.எம்.எஃப் வங்கியிடம் ஆண்டு தோறும் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் நமக்கு. ஒரு கட்டத்தில் வட்டி கூட கட்ட முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டோம். 1991இல் இது ஒரு களைமாக்ஸ்க்கு நகர்ந்தது.
மேலும்..

ஊழலின் ஊற்றுகண்

இந்தியாவில் பொது வாழ்க்கையில் நேர்மை இவ்வளவு தூரம் சீரழிந்தற்க்கு 1991 வரை இங்கு இருந்த ‘சோசியலிச’ பாணி பொருளாதார கொள்கைகள் தான் அடிப்படை காரணம். அதன் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. மேலும் பல பத்தாண்டுகளில் படிப்படியாக நம் நேர்மை அழிந்தது. 1966இல் பிராகசம் அவர்கள் தான் ஏன் இன்னும் உயிர் வாழ வேண்டும் என்று நொந்து பேசியதை பற்றி ராஜாஜி எழுதியது :

http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

இந்த ’சோசியலிச எச்சங்கள்’ பற்றி ’சிசுபாலன்களுக்கு’ புரியாது. இதெல்லாம் போலி சோசியலிசம் அல்லது ’……’ என்று மட்டும் கதைப்பார்கள். அது என்ன எழவோ, அதன் விளைவை பற்றி சுதந்திரம் வந்து 20 ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தலைவர் சாக வேண்டும் என்று நொந்து புலம்பும் அளவிற்க்கு நிலைமை சீரழிய ஆரம்பித்துவிட்டது. இன்று உச்சமடைந்து உள்ளது. இதெல்லாம் புரிந்து கொள்ள ‘முன் முடிவுகளற்ற’ திறந்த மனம் வேண்டும்.

இறுதியாக அந்த கட்டுரையில் ராஜாஜி, நேருவின் கொள்கைகள் பற்றி எழுதியது :

Sri Jawaharlal Nehru, urged by patriotic impulse, and early
indoctrination committed the blunder of taking India out of
the path of humility and put it in the race for industrialization,
and did all he could to transform our ideology into that of
Soviet Russia. This was the fatal step that brought us to the
present position out of which it requires not only wisdom but
indomitable courage to save India. Social justice and removal
of disparities of opportunity and equitably distributed welfare
are great and worthy ends. But the fatal mistake was the plan
to achieve this by the shortcut of heavy borrowing and central
planning and permit-license-regime which has brought in its
wake all that makes Sri Sri Prakasa lament so bitterly.

வினவு தளத்தில் இதை பற்றி நான் நிகழ்த்திய ஒரு உரையாடல் :

johny,

உமக்கான பதில் சுவாமிநாதன் அங்கலேஸ்வரைய அய்யர் எழுதிய கட்டுரையில் உள்ளது. இந்தியாவில் தான் எம்.பிக்கள் ஓட்டு போட பணம் வாங்கினால், அது சட்டபடி குற்றமல்ல. மேலை நாடுகளில் அப்படி இல்லை. கீழே நான் இட்ட பின்னூட்டத்தின் இறுதியில் மிக தெளிவாக அய்யர் எழுதுகிறார் :

..Last week’s row in Parliament is distracting attention from the real job that lies ahead. Former prime minister Narasimha Rao survived a confidence vote by acquiring the support of three MPs of the Jharkhand Mukti Morcha. These gentlemen were naïve enough to deposit Rs 1 crore apiece in cash in their bank accounts, and were caught by the police. But the Supreme Court then held that voting for any reason whatsoever in the Lok Sabha was covered by privileges of Parliament, which gave MPs immunity from the normal laws of the land. So, MPs taking cash for votes could not be prosecuted.

When the Constitution was formulated, it provided that Parliament should codify its own privileges, laying down precisely which acts would be immune from prosecution or civil suits. More than 60 years later, Parliament has not yet done so. MPs of all parties prefer their existing immunity for all actions. This is the real scandal, and no party or newspaper is highlighting it.

We need to get beyond finger pointing to true morality and justice. The Lok Sabha needs to codify its privileges swiftly, providing immunity only for free speech in Parliament, not for any other action such as voting for cash or office. Indeed, it should provide that all criminal cases against MPs are heard first and foremost, so that parliamentarians are held to a higher standard than others, not a lower one. If the BJP and CPM are serious about improving political morality, they must launch an immediate campaign to codify and narrow parliamentary privileges. If they fail to do so, their talk of morality will stand exposed as pure hypocrisy.

//சோசலிசம் பேசிய காலத்துல இது மாதிரி நடந்திருந்தால் சொல்லுங்க.///

பிரகாசம்காரு, தான் இதையெல்லாம் பார்த்துகொண்டு வாழ்வதை விட சாக வேண்டும் என்று நொந்து போய் பேசியதை பற்றி, ராஜாஜி அன்று எழுதியதை (மேலே) படிக்கவே இல்லை போல. அல்லது புரியலையா ? அன்று விதைத்த வித்துக்கள் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளன. அந்த வித்துகள் ‘சோசியலிசம்’ என்ற பெயரால் தான் அன்று அழைக்கப்பட்டன. அதன் cumulative effects இன்றும் உள்ளது. ஒரே வருடத்த்தில், நூற்றாண்டில் சீராக முடியாது. மாசுபட்ட நிலத்தடி நீர் சரியாக எத்தனை வருடங்கள் பிடிக்கும் ? அல்லது நுற்றாண்டுகள் பிடிக்கும். அதே போல் தான் மனோபாவ மாசுகளும்.

//ஒப்பந்தம் இந்திய நலனுக்கு உகந்ததுன்னா ஏன் காசு கொடுக்குற நிலை வருது.//

இந்திய நலனை பற்றி யார் கவலை பட்டாங்க. மேலும் பலருக்கு இதன் அவசியம் புரியவில்லை. மின் பற்றாக்குறை பற்றி அக்கரை இல்லை. அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒரே நோக்கம் மட்டும் தான். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை பாரளுமன்ற ஒப்புதல் பெற காங்கிரஸ் தனக்கு நன்கு பழக்கப் பட்ட ‘முறையில்’ வெற்றிகரமாக செயல்பட்டது. உண்மைய சொன்னால், இந்திய நலன் கருதிதான் மன்மோகன் சிங் இத்தனை பிடிவாதமாக அதை நிறைவேற முயன்றார். அவர் சூட்கேஸ் வாங்குபவர் அல்ல. அமெரிக்க கைக்கூலியும் அல்ல. he is a realist and visionary who know ground reality and the our follies in the past better than any of us here. He is the one who opened up India in 1991 and saved us from bankruptcy and disaster. but for his vision and determination, this chat here would not be happeining here. Indian rupees would have crumbled (like the Zimabwen dollar now) and our imports of petro products would have stopped in 1991 and India would have collapsed like USSR in 1992. difficult for you to picturise. nevertless that is the fact, which you refuse to look at.

///Libertarian,

இதுக்கும் சோஷலிசத்துக்கும் என்ன சம்பந்தம்///

johnny,

மிக எளிமையாக சொல்கிறேன். 1947 வரை நம்மிடம் இருந்த நேர்மை, முக்கியமாக அரசியலில் இருந்த நேர்மை, போகப்போக குறைந்தது. அன்று ஒரு எம்.பி இப்படி லஞ்சம் வாங்குவது மிக மிக மிக அபூர்வம். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு தியாகிகளாலும், நேர்மையாளர்களாலும் நிரம்பியிருந்தது. இன்று மிக சீரழிந்துவிட்டது. இது சோசியலிச பாணி கொள்கைகளில் விளைவுகள். இதை பற்றி தான் ராஜாஜி எழுதியதை எடுத்துகாட்டியிருந்தேன்.

எம்.பிக்கள் பணம் வாங்கும் அளவிற்க்கு அவர்களின் நேர்மை கெட்டதற்க்கு இந்த சோசியலலிச பாணியில் நிகர விளைவுகளே காரணம். பொதுவாகவே சோசியலிசம் / கம்யூனிசம் என்ற பெயரில் அரசு எந்திரம் மற்றும் அமைச்சர்களிடம் அதிகாரம் மிக மிக அதிகமாக குவிந்த நாடுகளில், போக போக ஊழல் மலிந்து சீரழிவு உருவானது. பழைய USSR இல் இருந்த அனைத்து நாடுகளின் இன்றைய நிலை, சீனா, வட கொரியா, தென் அமெரிக்க நாடுகள் என்று பல நாடுகளில் அரசியல் நேர்மை மிக குறைந்து, லஞ்சம் விளையாடுகிறது. ஆனால் லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தை ஆரம்பத்தில் இருந்து அமலாக்கிய பல வளர்ந்த நாடுகளில் இத்தனை சீரழிவு இல்லை. ஜெர்மனி, ஃபின்லாந் போன்ற நாடுகளின் எம்.பிக்கள் இப்படி பணம் வாங்குவது சாத்தியமில்ல. விதிவிலக்காக யாராவது வாங்கினால், பிறகு வெளியே தெரிந்தால், அவ்வளவுதான். அவன் அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும். சட்டப்படி தண்டனை கிடைக்க பெரும் சாத்தியம்.

///Libertarian,

நேர்மையின்மை சோசியலிசத்தின் விளைவுகள் என்றால் சோசியலிசம் பேசப்பட்ட காலங்களில் இருந்ததைவிட சோசியலிசம் பேசப்படாத தற்போதுதான் ஒழுங்கீனம் அதிகமாக இருப்பது ஏன்? 1947ல் விதைத்த வித்துதான் இன்று ஆலமாமாகியிருக்கிறது இதை மாற்ற நூற்றாண்டாகலாம் ஆனால் சோசியலிசம் பேசிய உடனேயே சீரழிவு வந்துவிட்டதாக கூறிகிறீர்களே அது எப்படி சாத்தியமானது?

இந்தியாவை விடவும், ஜெர்மனி சோசியலிசம் பேசிய நாடு. மேலும் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பிராதனமாக செல்வாக்கு செலுத்தியது. மேலும் கிழக்கு ஜெர்மனி 1949 முதல் 1990 வரையிலும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் இருந்த நாடு.

பிரகாசம்காருவின் நொந்துபோன வார்த்தைகள் வெளிப்பட்ட தருணங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது வாக்குகளை பணத்திற்காக விற்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். சோசலிசம் பேசப்படாத இப்போதுதன் ஓட்டுக்காக பணம் வாங்குவதும் அதிகரித்துள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.///

ஜானி,

Long term effects, cumulative effects என்று சொல்வார்கள். அதுதான் இங்கு. ஓவர் நைட் மாற முடியாது. கிழக்கு ஜெர்மனியில் பின்னாட்களின் ஊழல் சீரழிந்தது. இணைந்த பிறகும் அதன் விளைவுகள் தொடர்ந்தன. ஆனால் மே.ஜெர்மனியின் பலம் மற்றும் இதர தன்மைகளால சமாளிக்க முடிந்தது. சரி, ஃபின்லாந் தான் உலகில், ஊழல் மிக மிக குறைவான நாடு என்று ட்ரான்ஸ்பாரன்ஸி இண்டெர்னேசனல் சொல்கிறது. எப்படி முடிந்தது ? வட கொரியாவையும் தென் கொரியாவையும் ஒப்பிடுங்கள்.

1966 வாக்குகளை விற்க்கவில்லை தான். ஊழல் கான்ஸர் போல அனைத்து துறைகளிலிம் பரவ ஆரம்பித்த காலங்கள் அவை. 20 ஆண்டுகளின் அன்று பெரும் மாற்றம் எப்படி ? அதற்க்கு முன்பு ஏன் அப்படி இல்லை. பல லச்சம் மக்கள் தன்னலமில்லாம்ல, விடுதலை போராட்டத்தில் தியாகம் செய்ய முடிந்த காலங்கள். 20 ஆண்டுகளில் அதே மக்களின் நேர்மை, அர்பணிப்பு, ஒழுக்கம் எப்படி கெட ஆரம்பித்தது ?


முதலீட்டியத்தின் அடிப்படைகள் - 3

லாபம் என்பது பாவமா ?

Functions of profit மற்றும் price theory பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

முதலாளி, சுரண்டல், லாப வேட்டை என்ற் சொல்லாடல்கள், ஒரு எதிர் மறையான,
வில்லத்தனமான அர்த்ததில் மட்டும் இங்கு பொது புத்தியில் ஏற்றப்பட்டு
உள்ளது. ’உபரி மதிப்பை’ தான் சுரண்டி, லாபம் என்று மாற்றி, பிறகு அதுவே
மூலதனம் ஆகிறது என்ற மார்க்சிய பார்வை பழுதுபட்டது. இதை பற்றி எமது
முக்கிய பதிவு இது :

http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html
'உபரி மதிப்பு என்னும் மாயயை'

லாபம் இல்லாமல் யாரும் எந்த காரியத்தையும் எங்கும் செய்வதில்லை. சமூக
சேவை, கலைச்சேவை போன்றவை விதிவிலக்குகள். பொதுவாக சொல்கிறேன்.

ஒரு புதிய தொழில்துறை முதன் முதலில் உருவாகும் போது, போட்டிகள் மிக
குறைவாக இருக்கும். புதிய தொழில் நுட்ப்பம் அல்லது idea / concept அய்
கண்டுபிடித்தவர் அல்லது நிறுவனம், போட்டி இல்லாத ஆரம்ப காலங்களில், மிக
மிக அதிக லாபம் பார்க்கும். காப்பிரைட் சட்டங்கள் சில ஆண்டுகளுக்கு அதை
உறுதி செய்யும். ஆனால் போக போக போட்டிகள் உருவாகி, அதனால் விற்பனை

விலையை படிப்படியாக குறைக்க வேண்டியிருக்கும். லாபமும் அதற்க்கு ஏற்ப
குறைய ஆரம்பிக்கும். (கம்யூட்டர் மற்று செல்பேசி துறைகள் நல்ல உதாரணம்).
ஒரு கட்டத்தில் உற்பத்தில் விலைகே விற்க்க வேண்டிய கட்டாயம் உருவக வாய்ப்பு
உண்டு. இதனால் பெரும் பயன் அடைபவர்கள் வாடிக்கையளார்கள் தான்.
பண்டங்கள் / சேவைகளின் விலை மிக மிக குறைந்து, தரம் மிக மிக உயர்ந்து,
பற்றாக்குறையே இல்லாமல் தாரளமாக கிடைக்கும்.

இதில் முக்கிய அம்சம், புதிய போட்டியாளர்கள் உருவாகுவது. புதிய
முதலீடுகள் மற்றும் போட்டி நிறுவனங்கள் எப்படி சரியான துறை அல்லது
product / services தேர்ந்தெடுப்பார்கள் ? அந்த துறையில் உள்ள ‘ஏகபோக’
நிற்வனத்தில் அப்ரிதமான லாபத்தை பார்த்துதான். இந்த ‘தகவலை’
(price signals) சரியான முறையில் சந்தையில் உள்ள அனைத்து playersக்கும்
கொண்டு செல்லுவதே, லாபத்தின் முக்கிய பணி. Information asymmetry
முடிந்த வரை குறைவாக உள்ள சந்தைகளே mature markets எனப்படுவது.

இன்று மிக மிக மலிவாக சந்தையில் கிடைக்கு அனைத்து பொருட்கள் / சேவைகளும்
இப்படி, இதே வழியில் வந்தவைதான். உப்பு கூட நல்ல உதாரணம். Salary என்ற
சொல், salt இல் இருந்துதான் உருவானது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்,
உட்பிரதேசங்களில் உப்பு மிக அரிதான பண்டம். ஒரு கலாத்தில் ’பணமாக’ அது
பயன்படுத்தப்படும் அளவிற்க்கு மதிப்பு இருந்தது. தொழில் புரட்சிக்கு
பின், மேலே சொன்ன முறையில் தான் இன்று உலகெங்கிலும், தாரளமாக, மலிவாக
கிடைக்கிறது. அதன் கடை பற்றி விரிவாக பேச முடியும்

சரி, ஏற்கெனவே பல ஆயிரம் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் ஒரே துறையில்,
ஒரே வகையான பண்டங்களை / சேவைகள் உற்பத்தி செய்து, சந்தையில் கடும் போட்டி
நிலவும் சூழல் பற்றி பார்ப்போம். திடிரென பற்றாக்குறை உருவாகிறது என்று
வைத்துக்கொள்வோம். (அதற்க்கு பல காரணிகள் இருக்கலாம் : மூலப் பொருட்கள்
தட்டுப்பாடு, மின் தடை, போதிய தொழிலாளர்கள்(skilled labour) இல்லாமை,
போன்றவை). உடனே சந்தையில் அந்த பண்டத்தை வாங்க பலரும் போட்டி போடுவர்.
ஆனால் விற்பனைக்கு குறைந்த அளவே கிடைப்பதால், உற்பத்தியாளார்கள் மற்றும்
வியாபரிகள் முடிந்த வரை விலையே எற்றி நல்ல லாபம் பார்ப்பார்கள். இந்த
விலை உயர்வு, உடனடியாக ஒரு முக்கிய தகவலை அனைத்து playersக்கும்
அறிவிக்கும். இந்த பண்டம் உற்பத்தி செய்தால், லாபம் மிக அதிகம்
கிடைக்கும் என்பதை. எனவே பலரும் அதே பண்டத்தை மிக அதிகமாக உற்பத்தி
செய்ய முனைவார்கள். பிறகு படிப்படியாக போட்டி அதிகமாகி, தேவையை
விட சப்பளை அதிகாமாக்கும் சூழல் உருவாகி, விலை குறைய ஆரம்பிக்கும்.

இது ஒரு வகையான see-saw விளையாட்டு போல் தன்னைதானே சமன்(balance) செய்து
கொள்ளும் mechanism. இதற்க்கு இணையான வேறு ஒரு மெக்கானிசமும் இதுவரை
மனிதன் கண்டுபிடிக்கவில்லை. இதற்க்கு பெயர் தான் ’சந்தை’. இதில் சுதந்திர
சந்தை தான் முக்கிய சூட்சமம். அதாவது அரசுகளின் கட்டுப்பாடுகள் மற்றும்
அதிக வரிவிதிப்பு, மூலம் எந்த ஒரு தடையும் (அல்லது distortionகளும்)
இல்லாத நிலை வேண்டும். இல்லாவிட்டால் அது சுதந்திர சந்தையாக இருக்காது.
போட்டிகள் உருவாகி விலையை குறைக்க முடியாது. இந்தியாவில் 1991வரை
அதுதான் நடந்தது.

நஸ்டம் பற்றி பேசலாம். இதற்க்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. மேலே
கண்தற்க்கு நேர் எதிரான விளைவுகள், செயல்பாடுகளை உருவாக்கும். ஒரு துறை
அல்லது பண்ட உற்பத்தியில் ஈடுபடும் நிறவனங்கள் தொடர்ந்து நஸ்டம் அடையும்
சூழலில், இந்த நஸ்டம் பற்றிய தகவல் சந்தையில் உள்ள அனைத்து playersக்கும்
சென்றடையும். புதிதாக முதலீடு செய்பவர்கள் மற்றும் ஏற்கெனவே அதே துறையில்
உள்ளவர்கள் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்ப்பர். காரண்ம், நஸ்டம் பற்றிய
தகவல். படிப்படியாக புதிய முதலீடுகள் உருவாகவது நின்று போகும். ஆனால் ஒரு
கட்டத்தில், உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டு, பற்றாக்குறை உருவாகும்.
லாபம் கிடைக்க ஆரம்பித்து, பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க, லாபமும் உயர
ஆரம்பிக்கும். முன்னர் நாம் பார்த்த நிகழ்வுகள் மறுபடியும் உருவாகும். It
is a perfectly self correcting and self regulating mechanism, provided
there are no distortions caused by govt regulations.

ஏகபோகம், அதாவது monopoly என்று ஒரு பயங்காட்டல், இடதுசாரிகளால் பல
ஆண்டுகளாக செய்யப்படுகிறது. ஒரு நிறுவனம், ஒரு குறிப்பிட பொருளுக்கான
சந்தையின் பெரும் பகுதியை கைப்பற்றி, பிறகு தங்கள் இஸ்டபடி மிக மிக அதிக
விலை வைத்து, கொழுத்த லாபம் ஈட்டி, மக்களை முழுவதும் அதன்
கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் என்ற ‘கருத்து’ ; இதற்க்கு மாற்று
போட்டிகள் தான். வேறு வழிகளான அரசின் கட்டுபாடுகள், தடைகள் மிக
எதிர்மறையாகத்தான் வேலை செய்துள்ளன. புதிய போட்டிகள் சுலபமாக உருவாக
தடை செய்யாமல் இருந்தாலே போதும். விலை குறையும். அதுதான் 1991க்கு பின்
இந்தியாவிலும், கடந்த 150 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளிலும் நடந்தது...


முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 2

நம்பிக்கை, நாணயம், கூட்டு முயற்சி : இவைதான் முதலீட்டியத்தின் அடிப்படை அம்சங்கள். இதை பற்றி சற்று பார்ப்போம்.

 

தொழில் நிறுவனங்கள் பல வகை வடிவங்களை கொண்டவை :

 

1.Sole Proprietorship (தனி நபர் உரிமை)

2.Partnership Firm (கூட்டாளிகள் கொண்ட சிறு நிறுவனம்)

3.Private Limited Company (இயக்குனர்கள், பங்குதாரர்கள் கொண்ட நிறுவனம்)

4.Public Limited Company (பங்குகளை வெளியிட்டு, பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்).

5.Venture Capital based companies (தொழில் முனைவோர்களை நம்பி முதலீடு செய்யப்பட்ட நிறுவனம்)

 

மிக குறைந்த முதலீட்டில், ஒரு தனிநபரால், தன் திறமை, உழைப்பின் மீது கொண்ட நம்பிக்கையால் உருவக்கப்படும் நிறுவனமே sole proprietorship நிறுவனம். அதன் வளர்ச்சி மற்றும் அளவு பொதுவாக பெரிய அளவில் இருக்காது. முதலீட்டிய அமைப்பில், இவைதான் முதல் படி.

 

இரண்டாவது வகையான கூட்டாளிகளை கொண்ட partnership firm : இவைதான மிக முக்கியமானவை. Building blocks of capitalism and prosperity. கூட்டாளிகளில் ஒருவரிடம் அதிக முதலீடு இருக்கும். ஒருவரிடம் தொழில் திறமை இருக்கும். ஒருவரிடம் உழைக்கும் திறன் அதிகமிருக்கும். நிர்வாகத்திறன், மார்கெட்டிங் திறன் என்றும் பிறருக்கு திறமைகள் இருக்கும். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை கொண்டால் தான் நிறுவனத்தை துவக்க முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை (mutual trust and faith) தான் மிக முக்கியமான அம்சம். சில பகுதிகளில் இந்த நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி மிக அதிகம் இருக்கும். அப்பகுதிகளே துரிதமாக வளம் பெறும். (இதில் சாதிய, குடும்ப உறவுகளின் பங்கும் உண்டு.) உதராணமாக கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இத்தகைய கூட்டாளி நிறுவனங்கள் மிக மிக அதிகம். அதனால் தான் அப்பகுதிகளில் தொழில் வளர்சியும் அதிகம். வறுமை அளவும் குறைவு. (in relative terms). பொதுவாக நிர்வாக கூட்டாளி என்று ஒருவரோ அல்லது இருவரோ இருப்பர். மற்றவர் sleeping partners என்று முதலீடு மட்டும் செய்யும் கூட்டாளிகள். நிர்வாக கூட்டாளி(கள்), மற்ற கூட்டாளிகளை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிறுவனத்தை நிர்வாகிக்க முனையும் தன்மை கொண்டவரகளாக இருப்பது மிக அவசியம். ஏமாற்றும் தன்மை கொண்டவரகள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற நிறுவனங்கள் உருவாகுவது அரிது. சக மனிதர்களை அதிகம் நம்பாமள், குறுகிய மனோபாவம் கொண்ட பகுதிகளில் உருவாகாது.

 

இன்று பெரும் பன்னாட்டு நிறுவனமாக திகழும் Infosys நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சொற்ப முதலீட்டில் ஒரு partnership firm ஆகவே துவக்கபட்டது ! இன்று பெரு நிறுவனங்களாக திகழும் பல புகழ் பெற்ற நிறுவனங்களுல் பல பத்தாண்டுகளுக்கு முன் அல்லது நூற்றாண்டுகளுக்கு முன் இது போன்ற partnership firmகளாகவே துவக்கப்ட்டன.

 

சக கூட்டாளிகளை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிருவனத்தை நிர்வாக்கிக்கும் குண நலனே மிக மிக அடிப்படை. ஊரில் உள்ள அனைத்து 'திறமையாளர்களும்' பிராடு பயலுகளாகவே இருந்தால், யாரும் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள். தொழில் வளர்ச்சி இல்லாமல், அந்த பகுதி வறுமையிலேயே தேங்கி கிடக்கும். யாரும் கடனும் அளிக்க மாட்டாரக்ள். எனவே இந்த அடிப்படை நேர்மை என்பது மிக முக்கியமானது. Business ethics and morals..

 

Private Limited Company என்பது அடுத்த கட்டம். இதுவும் partnership firmஅய் போன்றதுதான். ஆனால் சில அடிப்படை வித்தியாசங்கள். முதலீடு சற்று பெரிய அளவில் இருக்கும். இந்த லிமிட்ட என்பது, நஸ்டமடைந்து திவாலாகும் போது, கூட்டாளிகளின் தனிபட்ட சொத்துகளை கடன் கொடுத்தவர்கள் ஏலத்திற்க்கு கொண்டு வர முடியாது. நிறுவனத்தின் சொத்துக்களை மட்டுமே attach செய்ய முடியும். Limited Liability partnership (LLC) நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. To reduce risks and to encourage entrepreunership.

 

Public Limited Company அடுத்த நிலை. இவை பங்குகளை / கடன் பத்திரங்களை (shares and debentures) பொது மக்களுக்கு வெளியிட்டு / விற்று பெரும் மூலதனம் சேகரித்து, பெரிய projectகளை ஆரம்பிக்க ஏதுவானவை. பங்கு சந்தை மற்றும் ஆன்லைன் வர்தகம் பற்றி பல தவறான, மேலோட்டமான தகவல்கள் தான் பொது புத்தியில் அதிகம். அவற்றின் மிக அடிப்படை நோக்கங்கள் (functions) பற்றிய தெளிவு குறைவு. பொது மக்களின் சேமிப்பை ஆக்கபூர்வமான, லாபகரமான, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வழிகளில் செலுத்த மிக இன்றியமையாத பணிகளை செய்வதே பங்கு சந்தையின் அடிப்படை. பங்கு சந்தை அதிகம் develop ஆகாத காலங்களில், நம் மக்களின் சேமிப்பு, பயனற்ற, unproductive முறைகளில் முடங்கியிருந்தன. பல நூற்றாண்டுகளாக தங்கத்திலும், நிலத்திலும் மட்டும் சேமிப்புகளை முடக்கும் தன்மை தொடர்ந்தது. (இன்றும் இத்தகைய 'பாதுகாப்பான' வழிகளை நாடுபவர்களே அதிகம்).

 

மக்களின் சேமிப்புகள் சரியான முறையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் நாடுகளில் தான் பொருளாதார வளர்சி மற்றும் முன்னேற்றம் அதிகம்  இருக்கும். இந்தியாவில், ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, பங்கு சந்தை வளர்ச்சி அடையாமல், முடங்கி போய் இருந்தது. இன்று ஓரளவு வளர்ந்து, விரிவடைந்து விட்டது. இதுவும் ஆரம்ப நிலை தான். இன்னும் matured markets ஆக இங்கு உருவாமாறவில்லை.

 

ஒரு நிறுவனம் புதிய தொழிற்சாலையை அமைக்க அல்லது விரிவுபடுத்த வங்கி கடன் ஒரளவிற்க்குதான் பெற முடியும். புதிய பங்குகளை வெளியிட்டு, பெரும் தொகைகளை திரட்டுவதுதான் வழி. நிறுவனங்களின் வரலாற்றையும், நன்னம்பிக்கையையும் (goodwill)அய்யும் பொறுத்தே மக்கள் அதன் பங்குகளை வாங்குவர். முதலீட்டாளர்களை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்களே, மேலும் மூலதனத்தை திரட்ட முடியும். Goodwill and past track record எத்தனை முக்கியம் என்பதே இங்கு அடிப்படையான அம்சம்.

 

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நல்ல முறையில், தரமான பொருட்களை, சேவைகளை, மலிவான விலையில் அளித்தால் தான் சந்தையிலும் நன்மதிப்பை (Goodwill) பெற முடியும். இதை கட்டமைக்க பல பத்தாண்டுகள் ஆகும். (இழக்க சில நாட்களே போதும் !) உதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்களில் Sony நிறுவன பொருள் என்றால் உடனே அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை தான் நமக்கு நினைவிற்க்கு வரும். அதுதான் அதன் சந்தைக்கு அடிப்படை. Brand building என்று சொல்வார்கள். வெறும் பொய்யான விளம்பரங்களினால் அதை கட்டமைக்க முடியாது. "பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோறையும் எல்லா காலங்களுக்கும் ஏமாற்ற முடியாது." என்ற முதுமொழி இங்கு மிக பொருந்தும். தரம் மற்றும் விலை : இவை மூலம் தான் சந்தையில் வெற்றி பெற முடியும். சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை அம்சம் இது.

 

நம்பிக்கை, நாணயம் மற்றும் Goodwillஇன் முக்கியத்துவத்தை சுருக்கமாக பார்த்தோம். தொழில் நிறுவனங்களில் இறுதி வடிவமான Ventute Capital based companies பற்றி பார்ப்போம். பில் கேட்ஸ் போன்ற திறமையான தொழில் முனைவோர்களை சரியாக கண்டறிந்து, அவர்களின் ஆரம்ப கட்ட முயற்சிகளுக்கு, எந்தவிதமான செக்யூரிட்டி (அடமானம்) இல்லாமல், பெரிய அளவில் நிதியை முதலீடாக அளிக்கும் முறை. பல புதிய கண்டுபிடிப்புகள் அல்லது செயல் திட்டங்களுக்கு போதுமான முதலீடும், வங்கி கடன்களுக்கு கிடைக்காத நிலை எப்போதும் உண்டு. அந்த வகை கண்டுபிடிப்புகளுக்கும், தொழில் முனைவோர்க்களுக்கும் தாரளமாக முதலீடு அளிக்க மிக அதிகம் ரிஸ்க் எடுத்து செயல்படும் நிதி நிறுவனங்களே Venture Capital Funds. அவை முதலீடு செய்யும் நிறுவனங்கள் / திட்டங்களில் பெரும் பகுதி work out ஆகாமல் நட்டத்தில் முடியும். ஆனால் பத்தில் ஒரு திட்டம் வெற்றி பெற்றாலே போதும். மீதி ஒன்பது நிறுவன முதலீட்டிழப்பை சரிகட்டி, அதற்க்கு மேலும் பல மடங்கு லாபத்தை ஈட்டித்தரும். மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன், கம்யூட்டரை சிறிய அளவில் உருவாக்கி தனி மனித பி.சிகளாக்க வடிவமைக்க முடியும் என்று யாரும் நம்பாத போது, ரிஸ்க் எடுத்து பில் கேட்ஸுக்கு உதவிய Venture capital நிறுவனம், பின்னர் மிக பெரிய லாபத்தை வென்றிருக்கும். இதே போல பல் நூறு புதிய முயற்சிகளுக்கு பிறகு உதவ வழி பிறந்திருக்கும். Venture Capital Funds are the greatest and noblest form of capitalism. அவை எந்த நாடுகளில் அதிகம் தழைக்கிறதோ, அந்நாடுகள் தாம் மிக பெரும் வளர்ச்சி அடைந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும் பாக்கியத்தை அடைகின்றன.

 

மேலும்..

முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 1

முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 1

 

சில காலம் முன்பு, வேதியலில் முனைவர் பட்டம் பெற்று, உயர் அரசு பதவியில் இருக்கும் குடும்ப நண்பர் ஒருவருடன் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னது :"….ஏழ்மையை ஒழிக்க, அரசு அதிகம் ரூபாய்களை அச்சடித்து, ஏழைகளுக்கு அளிக்க முடியாதா ?" ; அது வறுமையை குறைப்பதிற்க்கு பதிலாக, விலைவாசியை மட்டும் உயர்த்தும் என்பது அவருக்கு புரியவில்லை. பகுதி நேரம் பேராசியராக இருக்கும் இவருக்கே, அடிப்படை பொருளாதார விதிகள் புரியவில்லை. அறியாமை. இது போன்ற அடிப்படை விசியங்கள் பற்றி எளிமையாக விளக்க முயல்கிறேன்.

 

முதலீட்டியம் என்று சொல் சமீப காலமாக உபயோகிக்கப்படுகிறது. முதலாளித்துவம் என்ற சொல்தான் அதிகம் பிரயோகிக்கப்படும் சொல். அதைவிட முதலீட்டியம் என்ற சொல் Capitalism என்பதற்க்கு சரியான தமிழாக்கமாக உள்ளது. முதலாளி, முதலாளித்துவம் என்ற சொற்கள் வில்லத்தனமான, எதிர்மறையான அர்த்தங்களுடன் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. ஆகவே முதலீட்டியம் என்ற சொல் எமக்கு உவப்பாக இருக்கிறது !!

 

தொழிற் புரட்சி துவங்கிய பிறகுதான் முதலீட்டியம் உருவானது. அதற்க்கு முன் உலகெங்கும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நிலப்பிரவுத்துவம் தான். நவீன வடிவ ஜனனாயகமும், தொழில் புரட்சியுடன் சேர்ந்தே வளர்ந்தது. அய்ரோப்பாவில் உருவாகி, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.

 

முதலீட்டியம் பல வகைகள், பாணிகள் கொண்டது. மார்க்சியம் போன்ற ஒற்றைபடை தன்மை கொண்ட definition கிடையாது. ஒவ்வொறு நாட்டிலும் ஒவ்வொறு பாணிகள். அதை பற்றி பிறகு விரிவாக பார்போம்.

 

பாசிசம், காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் : இவைகள் முதலீட்டியத்தோடு சேர்ந்தே பார்க்கப்படும் கோணம் உள்ளது. முதலீட்டியத்தை இரு வகைகளாக பிரிக்கலாம் : லிபரல் ஜனனாயகத்தை அடிப்படையாக கொண்ட முதலீட்டியம், பாசிசத்தை அடிப்படையாக கொண்ட முதலீட்டியம். இரண்டு வகைகளையும் 'முதலீட்டியம்' என்ற சொல்லிற்க்கு கீழ் அடைத்து, குழப்பிக்கொள்ளும் தன்மை அதிகம். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் லிபரல் ஜனனாயக பாணி முதலீட்டியம் பரவலாகியது. அதுவரை பாசிச பாணியிலான, ஏகாதிபத்திய தன்மை கொண்ட முதலீட்டியம் கோலோச்சியது.

காலனியாதிக்கம் செலுத்திய அய்ர்ப்ப்பிய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கிய முதலீட்டிய பாணி இது.

 

1948இல் அய்.நா சபை பிரகடனமான : Universal Declaration of Human rights. http://www.un.org/en/documents/udhr/  இதுதான மிக மிக முக்கியமான, அடிப்படையான கொள்கை விளக்கம். மீற கூடாத 'புனித பசு' என்றும் கொள்ளளாம். சொத்துரிமை இதில் ஒரு பகுதி. அவ்வளவுதான். இந்த சொத்துரிமை தான் முதலீட்டியத்தின் ஆணி வேர். அதாவது பொது உடைமை கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கை.

 

மேலோட்டமாக பார்த்தால், சொத்துரிமை என்பது பணக்காரர்கள், பண்னையார்கள், பெரு முதலாளிகளின் நலன்களை பாதுக்காக்க, ஏழைகளை 'சுரண்ட' உருவாக்கப்பட்ட கொள்கை போல தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏழைகளில் பலரும் கடின உழைப்பில் முன்னேறி தொழில் அதிபர்களாக, பெரு விவசாயிகளாக மாறியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், இன்று பெரும் நிறுவனங்களின் 'முதலாளிகள்' அல்லது பங்குதாரகள் அனைவரும் தங்கள் 'தனி உடைமையை' சுயமாக உழைத்து பெற்றவர்கள். அல்லது அவர்களின் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை, பண்னைகளை வாரிசு அடிப்படையில் பெற்று, அதை பெருக்கி, நிர்வாகிப்பவர்கள்.

தொடர்ந்து 1000 வருடங்களாக 'பணக்காரகளாக' இருக்கும் குடும்பம் அல்லது குழு எதுவும் இல்லை. இருப்பதாக நான் அறியவில்லை.

 

ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கும் ஒருவர், தம் உழைப்பினாலும், ஊக்கத்தாலும், திறமையாலும், ஒரு சிறு நிறுவனத்தை துவக்கி, படிப்படியாக வளர்த்தி, மேம்மட்ட வரலாறுகள் பல உண்டு. தாம் பாடுபட்டு உழைத்து, உருவாக்கிய நிறுவனம் அல்லது பண்ணையை, ஒரு சோசியலிச அரசோ அல்லது 'கொள்ளையர்களோ' கைப்பற்றும் சூழல் உருவானால், தொழில் முனைவோர்கள் ஊக்கமாக 'உழைக்க' மாட்டார்கள். தன்னால் உருவாக்கப்பட்ட அல்லது முன்னோர்களாக தமக்கு அளிக்கப்பட்ட சொத்துகள் / நிறுவனங்கள் / பண்னைகள், இவைகளுக்கு 'பாதுகாப்பில்லை' என்றால் அவற்றை பேணவோ, விரிவுபடுத்தவோ ஊக்கம் இருக்காது. இது அடிப்படை மனித இயல்பு. 'சோசியலிச' கொள்கைகளை அமலாக்கும் நோக்கத்தில் பெரு நிறுவனங்களை தேசியமயமாக்கும் 'அபாயம்' தொடர்ந்த காலங்களில் இருந்த ஊக்கத்தைவிட, இன்று தாரளமயமாக்கல் காலத்தில் வெளிப்படும் ஊக்கம் மிக அதிகம். Unleashed potential of Indian entrepreuneship and energy. பார்க்கவும் : http://www.heritage.org/index/pdf/2006/index2006_chapter3.pdf  இதை புரிந்து கொள்ள கடந்த காலத்தில், 1991க்கு முன் இருந்த சூழல் பற்றி அனுபவ அறிவோ அல்லது வாசிப்பனுபவமோ தேவை.

 

நிறுவனங்கள், வணிக அங்காடிகளுக்கு பாதுகாப்பில்லாத பகுதிகளிலும் விளைவுகள் இதே போல் தான். பீகார் போன்ற பகுதிகளில் தொழில் துவங்க பலரும் தயங்குவது இதனால் தான். மாஃபியா போன்ற அமைப்புகள், தீவிரவாதிகள் மாதந்தோரும் 'protection money' (அதாவது மாமுல்) கேட்டும் அச்சுருத்தும் பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாகுவது மிக கடினம். புதிய தொழில்கள் அல்லது முதலீடுகள் உருவாகாவிட்டால், வேலை வாய்புகளும், வரி வசூலும் பெருகாமல், வறுமை தான் அதிகரிக்கும். பீகார், ஒரிஸா, மே.வங்க ஏழை மக்கள் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு அதிக அளவில் வேலை தேடி வரும் அவலம் இதற்க்கு ஒரு நல்ல உதாரணம். கங்கை பாயும் செழிப்பான பகுதி, கனிம வளங்கள் அதிகம். ஆனாலும் கடும் வறுமை. வேலை இல்லாத் திண்டாட்டம். காரணம் அங்கு சொத்துகளுக்கு போதிய 'பாதுகாப்பு' இல்லை.

 

சொத்துரிமையின் முக்கியம் பற்றி வேறு விதமாக பார்ப்போம். எழுத்தாளர்கள் மற்றும் படைப்பளிகள் உருவாக்கும் ஆக்கங்களை வணிக ரீதியாக பாதுக்க காபிரைட் சட்டங்கள் உள்ளன். ஆக்கங்களும் ஒரு வகையான சொத்துக்கள் தாம். அவற்றை விற்று பணமாக்க அரசு கொள்கைகள் தடை செய்தால் விளைவுகள் எப்படி இருக்கும் ? அதாவது அவை பொது உடைமையாக்கப்பட்டு, எழுதாளர்கள், படைப்பளிகளுக்கு மாத சம்பளம் மட்டும் அளிக்கும் ஒரு முறை உருவானால் எப்படி இருக்கும் ?

புதிய ஆக்கங்களை உருவாக ஊக்கம் குறையும். ஒரு துறை பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வு நூலகள் போன்றவற்றிக்கு காபிரைட் பாதுகாப்பு இல்லாமால், பலரும் அதை அப்படியே காபி அடித்து வெளியிட்டாலும், ஊக்கம் குறையும். சினிமா துறையில் அதிக நஸ்டம் வர இந்த வீடியோ பைரசி ஒரு முக்கிய காரணம் என்பதை இங்கு பார்க்க வேண்டும்.

 

இந்தியாவில் சொத்திரிமையின் நிலை மற்றும் சட்ட விதிகளில் புகுத்தப்பட்ட மாற்றங்கள் பற்றி ஒரு விரிவான சுட்டி : http://www.ccsindia.org/ccsindia/policy/rule/studies/wp0041.pdf

 

சொத்துரிமையை அடிப்படை உரிமையாக (Right to property as a 'Fundamental Right') ஏற்க்கபட்ட நாடுகள் தான் கடந்த நூற்றாண்டில் வறுமை அளவை மிக மிக குறைத்து, முன்னேறிய நாடுகளாக மாறின. சொத்துரிமையை பல விதங்களில் முடக்கிய, வலிமை இல்லாமல் dilute செய்த நாடுகளால் அந்த அளவு முன்னேற முடியாமல், இன்றும் வறுமையில் தத்தளிக்கின்றன. இதை பற்றி மிக விரிவான ஆய்வுகள், தரவுகள் உள்ளன. மிக எளிமையாக இதை புரிந்து கொள்ள, இன்றைய வட கொரியாவையும், தென் கொரியாவையும் ஒப்பிட்டாலே போதும்.

 

மேலும்..

கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

உலகில் இதுவரை உண்மையான கம்யூனிச அமைப்பு, எந்த ஒரு நாட்டிலும் உருவாகவே இல்லை. சோவியத் ரஸ்ஸியா போன்ற நாடுகளில் சோசியலிச அரசு அமைக்கப்பட்டு, படிப்படியாக கம்யூனிசத்தை நோக்கி நகரும் காலங்களில், திரிபுவாதிகள் தோன்றி, சீரழித்துவிட்டார்கள். இதுதான் தோழர்களின் version of history.

கம்யூனிசம் என்ற சொல் கம்யூன் (commune), அதாவது சமூகம் என்ற சொல்லிருந்து உருவானது. (இதற்க்கு சரியான எதிர்மறை சொல் முதலாளித்துவம் அல்ல. மாறாக தனிநபர்வாதம். Individualism.) எளிமையாக கூறுவதானால், ஒவ்வொறு தனிமனிதனையும், தன் முழு உழைப்பையும், தான் சார்ந்துள்ள கம்யூனிற்க்கு (சமூகத்திற்க்கு), முழுமனதுடன், (அச்சமூகம் அளிக்கும் சமளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு) அளிக்க தயார் செய்வது. From each according to his ability, to each according to needs..

இதில்தான் சிக்கலே. மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாததால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்.

தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.

பொது உடைமை சமூகத்தில், தனி உடைமை (சொத்துரிமை) அறவே ஒழிக்கப்படும். நாட்டில் உள்ள அனைவரும் அரசாங்கத்திற்க்கா வேலை செய்யும் ஊழியர்கள். தனியார் நிறுவனங்கள் அறவே இருக்காத அமைப்பு. பிரதமர் முதல் கடைனிலை ஊழியர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். (இங்கு அரசு எனபடுவதற்க்கு அர்த்தம் வேறு). அவர்களுக்கான சம்பளம், அவர்களின் வேலை மற்றும் தகுதிக்கேற்ப ஆரம்ப காலங்களில் வழங்கப்படும். பிறகு உண்மையான கம்யூனிசம் உருவாகும் போது, தேவைக்கேற்ற ஊதியம் மட்டும் வழங்கப்படும்.

ஒரு தொழிற்சாலை அல்லது கூட்டு பண்னையில் ஒரே வகை வேலைகளை செய்யும் அனைவருக்கும் ஒரே சம்பளம் என்று இருக்கும். இதன் விளவு, திறமையாக வேலை செய்பவர்களுக்கும், திறமையில்லாமல், சோம்பேறியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம் கிடைக்கும் நிலை. இது நன்கு வேலை செய்பவர்களின் உற்சாகத்தை குறைக்கும். அதே சமயத்தில் ஒழுங்காக வேலை செய்யாதவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும். மொத்த விளைவு : உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைவாகவே இருக்கும். மிக முக்கியமாக மூளை உழைப்பை செய்யும் நிர்வாகிகளின்
திறன் ஒழுங்காக வெளிப்படாது.

தொழில்முனைவோர் என்படும் entrepreneuers, இவர்களின் முழு திறமையும் வெளிபட வாய்பிருக்காது. ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் எந்த பாணியில் அமைக்கப்படிருந்தாலும், அதை நிர்வாக்கிக திறமையான, ஊக்கமான, நிர்வாகிகள் மிக அவசியம் தேவை. Managerial and entrepreunarl talent. இதை பொது உடமைசமூகத்தில் இழக்க நேரிடுவதால், உற்பத்தி மற்றும் efficiency மிக குறைவாகவே இருக்கும்.

தன் உழைப்பின் முழு பலனையும் தான் அடைய வேண்டும் என்ற லாப நோக்குதான் மனிதர்களை கடுமையாக உழைக்க, தம் முழு திறமையையும் செய்யும் வேலையில் முழுமனதோடு செழுத்த ஊக்குவிக்கும். இதற்க்கு விதிவிலக்குகள் இருக்கலாம். பொது நோக்கோடு, லாபம் கருதாமால் இதே போல் முழுமையாக உழைக்கும் சிலர் எப்போது இருப்பர். உண்மையான கம்யூனிஸ்டுகளும் அப்படி இருப்பர். ஆனால் அவர்கள் என்றும் மைனாரிட்டி தான். பெருவாரியானவர்கள் அப்படி இருப்பதில்லை என்பதே மனித இயல்பு. லாப நோக்கு மறுக்கப்ட்டு, தனியுடைமையின் அடிப்படையான சொத்துர்மை ரத்து செய்யப்படும் அமைப்பில், பெருவாரியானவர்களின் உழைப்பு மற்றும் ஊக்கம் முழுமையாக, போதுமானதாக இருக்காது.

சோவியத் ரஸ்ஸியாவில் ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம், பல பத்தாண்டுகள் கழித்து மாறியது. அதாவது அடுத்தத்தடுத்த தலைமுறையில் உண்மையான கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கை குறைந்தது. இதற்க்கான காரணிகளை தோழர்கள் விரிவாக விவாதித்து, மிக தவறான முடிவுகளுக்கு வந்துள்ளனர். அதாவது திரிபுவாதிகள், ஏகாதிபத்திய சதி போன்றவை தான் காரணம் என்று சொல்வர். ஆனால் இது மனித இயல்பு என்பதே உண்மை. ஒரு நாட்டில் அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற முடியாது. ஒரு தலைமுறையில் ஒரு குறிப்பிட்ட சதவீத்தினரை மட்டும்தான் உண்மையான கம்யுனிஸ்ட்களாக மாற்ற முடியும். பெரும்பான்மையோர் தங்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வர். ஆனால் நடிப்பார்கள். வேண்டா வெறுப்பாகத்தான் வேலை செய்வார்கள். அவர்களை ‘திருத்தி’, re-training and educating about communism செய்ய அரசும், கட்சியும் முயலும். அதற்க்காக பல மனித உரிமை மீறல்களை சர்வ சாதாரணமாக புரிய வேண்டி வரும்.

எறும்புகள், தேனீக்கள் போல் மனிதர்களை மாற்ற முடியும் என்பது சாத்தியமே இல்லை. இதை தான் வரலாறு நிறுபிக்கிறது. செம்புரட்சி நடந்த நாடுகள் அனைத்திலும் போக போக உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் கடும் துன்பம் அடைந்தனர். முக்கியமாக விவசாயத்தை திடிரென பொது உடைமை பாணியில், கூட்டுபண்னைகளாக மாற்றிய ஆரம்ப வருடங்களில், விவசாய உற்பத்தி கடுமையாக குறைந்தது. பஞ்சம் உருவானது. இது செம்புரட்சி நடந்த அனைத்து நாடுகளிலும் ஆரம்ப வருடங்களில் நடந்தது. விதிவிலக்கே இல்லை. ஏன் என்று யோசிக்க வேண்டும். 80களி ஒரு சோவியத் ரஸ்ஸிய கூட்டுபண்ணை தொழிலாளர் சொன்னது : “We pretended to work while they pretended to pay”

இன்று உலகில் எங்கும் சோசியலிச பாணி கம்யூனிச அமைப்புடைய நாடே இல்லை. கூபாவையும் சொல்ல முடியாது. 50 ஆண்டுகளில் பெரும் மாற்றம். வரும் காலங்களில் செம்புரட்சி உருவாக வாய்புள்ள நாடு என்று ஒரு நாட்டையும் சொல்ல முடியவில்லை. (60களில் அப்படி இல்லை). மொத்த தென் அமெரிக்காவும் பொது உடைமையை நோக்கிய பாதையை கைவிட்டுவிட்டன. சீலே மற்றும் பெரு போன்ற நாடுகளின் மாற்றம் வியக்க வைக்கும். 40 ஆண்டுகளுக்கு முன் அங்கு புரட்சி பற்றிய சிந்தனைகள் இன்று இல்லை. ஒரு முன்னாள் மார்க்ஸிய போராளியும், இன்று ஜனாதிபதியுமான
ஒருவரின் பேட்டி இது :

A new beginning : The emerging democratic paradigm in Latin America
http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I'll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”

இந்தியா இன்று ஊழல்மயமாக உள்ளது. சராசரி இந்தியானின் நேர்மை மற்றும் ஊழலுக்கு துணை போகாத ஒழுக்கம் குறைவுதான். எதோ ஒரு வகையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் மனோபாவம் மிக பரவலாக வேறூண்றிவிட்டது. அரசு ஊழியர்களின் நேர்மை மற்றும் உற்பத்தி திறன் பற்றி சொல்லவே வேண்டாம். மொத்த மக்களும் செம்புரட்சியின் மூலம் அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்யவே கொடுமையாக உள்ளது.

இதற்க்கு மாற்றாக, தனிநபர்வாதத்தை அடிப்படையாக கொண்ட சுதந்திர சந்தை பொருளாதாரத்தை, ஜனனாயக முறையில், முறையாக பின்பற்றிய பல நாடுகள் கடந்த 100 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்று, வறுமையில் அளவை மிக மிக குறைத்து, இன்று செழிப்பான வளர்ந்த நாடுகளாக மாறின. மே.அய்ரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற பல நாடுகளின் economic history அய் பார்த்தாலே புரியும்.

கம்யூனிசம் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற்ற வேண்டும். கம்யூனிசம் என்றால் என்னவென்று புரிய வைத்து, அதை நம்ப வைத்து, முழுமையாக ஏற்க்க வைக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதையே வரலாறு நிருபிக்கிறது. அதனால் தான் உலகெங்கிலும் இச்சித்தாந்தம் இன்று காலாவதியானதாக கருதப்படுகிறது.

மேலும் உபரி மதிப்பு மற்றும் சுரண்டல் தான் இதற்க்கு ஆதாராமான விசியங்கள். ஆனால் அவை உண்மை அல்ல என்பதை எமது முந்திய பதிவில் எழுதியுள்ளேன்.

’உபரி மதிப்பு’ என்னும் மாயயை

'உபரி மதிப்பு என்னும் மாயயை'

 

உபரி மதிப்பு (surplus value) என்பதே மார்க்சிசத்தின்
மையக்கூறு என்று சொல்லலாம : http://en.wikipedia.org/wiki/Surplus_value 

 

தொழிலாளர்களின் உழைப்பிற்க்கு அளிக்கப்படும் சம்பளம்,
அவர்களால் உருவாக்கப்படும் பெருட்களின் மதிப்பை விட
(அல்லது உழைப்பின் 'சரியான மதிப்பை' விட) மிக மிக
குறைவானது, அந்த 'கொடுக்கப்படாத' சம்பளமே, உபரி
மதிப்பு என்று மார்க்சிசம் சொல்கிறது. அந்த உபரி மதிப்பு
'சுரண்டப்பட்டு', லாபமாக வெளிப்படுகிறது. அதுவே பின்
முலதனமாக உருவெடுக்கிறது. இதுதான் மார்கிசியத்தின்
மைய்யக் கரு. இது எப்படி மிக தவறான, பொய்பிக்கப்பட்ட
'போலி' விஞ்ஞானம் என்பதை பார்ப்போம்.

 

மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப்
படுகிறது. வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும்
உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ,
தேவையோ இருக்காத். உதாரணமாக, பாலைவனத்தில்
சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை
படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி
எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும்,
அங்கு அதற்க்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே
போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான
'மதிப்பு'. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க
உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே
என்பது மார்கிசிய கருத்து.

 

உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்
கொள்வோம். அந்த 'உபரியை' 'சுரண்டி' லாபாமாக
மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு
ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம்
இதற்க்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், 'தொழில்
முனைவோன்' என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம்
என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு
என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் :

 

1.தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன ? ஒரு
நிறுவனத்தை கட்டமைக்க, organisational and managerial ability
மிக மிக மிக தேவை. Risk taking mentality, pioneering spirit,
innovative thinking, will power, leadership and communication skills :
இவை இல்லாமல் தொழில் முனைவோர் ஒரு நிறுவனத்தை
உருவாக்கி, வெற்றிகரமாக நடத்த முடியாது. இவற்றின்
உபரி மதிப்பு என்ன ?

 

2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு
தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே
நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
இரண்டும் ஒரே வகையான எந்திரங்களை கொண்டு, ஒரே
வகையான பொருட்களை உற்பத்தி  செய்து, ஒரே சந்தையில்
விற்க்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம
அளவு திறமை, உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்கள்
வேலை செய்கின்றனர். ஒராண்டிற்க்கு பிறகு, ஒரு
தொழிற்சாலை ஒரளவு லாபமும், மற்றொன்று நட்டத்தையும்
அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம்,
அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால்,
பிறகு நட்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின்
தொழிலாளர்களின் 'உபரி மதிப்பு' எங்கு சென்றது ? 
இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள்,
சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களை
கொண்டு, ஒரே ரகபொருட்களை தான் உற்பத்தி செய்தனர்.
பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது ?

 

3. கூட்டுறவு அல்லது அரசு துறையில், மேற்கொண்ட
உதாரணத்தில் உள்ளதை போன்ற அதே வகை / அளவிலான
நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று
வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம்
மற்றும் உற்பத்தி திறன், தனியார் நிறுவனங்களை விட
குறைவாக இருப்பது இய்லபு. ஏன் ? காரணம், உரிமையாளர்
என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பெறுப்பற்ற
மனோபாவம். Sense of ownership gives rise to sense of responsibity.
அரசு துறையின் managers மற்றும் workers : இவர்களின்
உற்பத்தி திறன் (productivity) தனியார் துறையை விட
குறைவாகவே இருக்கிறது. இவர்களின் 'உபரி மதிப்பு'

எப்படி குறைந்தது ? அது எங்கு சென்றது ?

 

மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு
சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு,
ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக
கட்டமைப்பே அழியும் என்பது. Business cycles என்று சொல்லப்படும்
பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
நிகழ்கின்றன. மார்க்ஸின் 'விஞ்ஞானப்படி' ஒவ்வொறு சுழற்ச்சியின்
மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து,
குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும்
பிழைக்கும். மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட
புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும்
உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் )உபரி மதிப்பை
மேலும் மேலும் 'சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே
முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார
கட்டமைப்பே இயல்பாக அழியும். ஆனால் கடந்த 150 வருட
பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு
பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை
விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது.
தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல
படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது.

 

இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு
மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே
அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது
என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று

world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.

 

மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற
நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது.
ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான
விளைவுகளையே ஏற்படுத்தியது. The road to hell is paved with
 good intentions என்கிறது ஒரு ஆங்கில முதுமொழி.

 

இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் ஒரு பொது பிம்பத்தை
கட்டமைக்கும் அளவிற்க்கு மிகவும் பரவலாக உபயோகிக்கபடுகின்றன.
இடதுசாரி என்றால் அவர் ஒரு ஏழை பங்காளன், ஏற்ற தாழ்வுகளை
அகற்றப் பாடுபடுபவர், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், மதவாதத்தை 
எதிர்ப்பவர்  ;   வலதுசாரி என்றால் அவர் பணக்கார்களின் ஆதாரவாளர்,
ஏழைகளின் எதிரி, தொழிலாளர்களை "சுரண்டுபவர்", ஏகாதிபத்திய
ஆதரவாளர், ஃபாசிசவாதி, மதவாதி, கொடூர நெஞ்சம் படைத்தவர்,
இப்படி சில முன்முடிவுகளை இந்த "லேபில்கள்" மூலம், ஒருவரை
பற்றி முத்திரை குத்த பயன்படுத்தப்படுகிறது.
 
இவை எல்லாம் வெறும் முத்திரைகள். அர்த்தமற்றவை. ஆழமற்ற
லேபில்கள். வாதங்களை எளிமைபடுத்த உபயோகப்படும் சொல்லாடல்கள்.
அவ்வளவுதான்.
 
வலதுசாரி என்றால் அவன் ஒரு ஃபாசிஸ்ட் அல்ல. இடதுசாரி என்றால்
அவன் ஒரு ஃபாசிச எதிர்ப்பளரும் அல்ல. ஃபாசிசத்தை முன் மொழிந்த
சர்வாதிகாரியான முசோலனியும் வலதுசாரிதான். லிபரல் ஜனனாயகத்தை,
மக்களாட்சியை முன்மொழிந்த எர்கார்ட் (ஜெர்மன் அதிபர்) போன்றவர்களும்
அதே வலதுசாரி என்ற லேபில் / முத்திரையின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள்.
 
சே குவாராவும் இடதுசாரிதான், நேருவும் இடதுசாரிதான். முன்னவர்
பாரளுமன்ற ஜனனாயகத்தில் நம்பிக்கை இல்லாத போராளி, பின்னவர்
ஜனனாயகவாதி. எனவே, இந்த வலது / இடது லேபில்கள், முன்முடிவுகளை
அளித்து, ஒருவரை பற்றிய சரியான எடைபோடுதலை செய்யவிடாமல்
குழப்பும்.
 
வலதுசாரிகள் என்றால் அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. எந்த
வகை அடிப்படைவாதமும் ஃபாசிமே ஆகும். எனவே சரியான
சொல்லாடல்கள் :  ஃபாசிசவாதி / ஜனனாயகவாதி. அடிப்படை மனித
உரிமைகளை மதிப்பவர் ஜனனாயகவாதி. மறுப்பவர் ஃபாசிசவாதி.
 
அடிப்படை ஜனனாயக உரிமைகளில்  சொத்துரிமையும் அடக்கம். அதை
ஜனனாயக வழியில் முன்மொழிதலே வலதுசாரி சிந்தனைகள் எனலாம்.
(அப்படித்தான் எம்மை கருதுகிறேன்). ஆனால் ஃபாசிச முறையில் எதை
முன்மொழிந்தாலும் அது ஏற்க்கமுடியாது. ஃபாசிஸ்டுகள் இடது / வலது
இரு தளங்களிலும் உள்ளனர். எனவே மேலும் குழப்பம்.
 
உதாரணமாக இடி அமின், சதாம் ஹுசைன் போன்றவர்கள் ஃபாசிஸ்டுகள்
என்பதை சுலபமாக உணரலாம். ஆனால் மாவோ, ஜோஸஃப் ஸ்டாலின்
போன்றவர்களை ஒரு ஃபாஸிஸ்ட் என்று உணர்வது கடினம். அவர்கள்
சித்தாந்தரீதியாக "இடதுசாரிகள்" ; பொது உடைமைவாதிகள், பாட்டாளி
வர்கத்தின் ரட்சகர்கள் என்று இன்றும் சில தீவிர மார்க்சியவாதிகளால்
கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செய்த
செயல்கள் பற்றிய முழுவிபரமும் தெரியாமல், அல்லது தெரிந்தும்,
அதை "வரலாற்று கட்டாயங்கள்" என்று நியாயபடுத்திக்கொண்டு
கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள்.
 
வலதுசாரிகள் என்றால் ஏழைகளின் எதிரிகள் என்று ஒரு பிம்பம்.
ஆனால் அது முற்றிலும் தவறான கட்டமைப்பு. சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகள் மூலம், வளர்ந்த நாடுகள் அனைத்தும்
(முக்கியமாக இரண்டாம் உலகபோரில் அழிந்த ஜெர்மனி, ஜப்பான்,
தென் கொரியா, மலேயா போன்ற நாடுகள்) ஏழ்மையை பெருவாரியாக
குறைத்த வரலாறு பெரிதாக அறியப்படவில்லை. ஆனால் அந்நாடுகள்
பின்பற்றும் கொள்கைகள் "வலதுசாரி" கொள்கைகள். நேர் எதிராக
"இடதுசாரி" கொள்கைகளை (பல பாணிகளில்) பின் பற்றிய சுதந்திர
இந்தியா போன்ற நாடுகளும், சோவியத் ரஸ்ஸிய, வட கொரியா
போன்றவை வறுமையை பரவலாக்கி, ஊழல் மிகுந்து, ஏறக்குறைய
ஃபாசித்தை உருவாக்கி சீரழந்தன. இதிலிருந்தே வலதுசாரிகள் என்றால்
ஏழைகளின் எதிர்கள், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க செய்யும்
பிற்போக்காளர்கள் என்ற பிம்பம் உடைகிறது.
 
30 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அரசியலில் சரளமாக
சில‌ சொற்கள் பிரயோகிக்கப்பட்டன : 'சோசியலிஸ்டுகள், ஏழை
பங்காளர்கள், முற்போக்காளர் / பிற்போக்காளர்', இன்னபிற. முக்கியமாக
இந்த முற்போக்காளர் / பிற்போக்காளர் என்ற முத்திரைகள் விளைவித்த
நாசம் மிக அதிகம். வலதுசாரிகள் எல்லாம் பிற்போக்காளர்கள்,
இடதுசாரிகள் எல்லாம் முற்போக்காளர்களாம். அதனால வலதுசாரி
என்று முத்திரை குத்தப்பட்ட அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர்.
அம்முத்திரையை கண்டு அனைவரும் பயந்தனர். முற்போக்காளர்
என்ற முத்திரையை விரும்பினர். இது அறிவுஜீவிகள் மத்தியில்
மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகள் வட்டத்திலும் நிலவியது.
முக்கியமாக அன்றைய ஆளும் கட்சியாக, பலமாக, பல காலம்
ஆண்ட காங்கிரஸ் தலைவர்களிடம் மிகுதியாக இருந்தது. இந்திரா
காந்தியின் சர்வாதிகார போக்கை எதிர்க்க துணிந்தவர்களுக்கு
இந்த வலதுசாரி பட்டம் கிடைக்கும் என்பதாலேயே பலரும்
"இடதுசாரி முற்போக்குவாதி" என்ற முத்திரை பெற துடித்து,
இந்திரா காந்தியின் ஃபாசிதற்க்கு துணை போயினர்.   
நல்லவேளையாக இது போன்ற லேபில்கள் இன்று அரசியல்
சூழலில் இல்லாமல் ஆனாது. ஊழல் மட்டும்தான் இன்று
பரவலாக உள்ளது. 

 

விலைவாசியை உயர்த்த போகும் பட்ஜெட்

விலைவாசியை உயர்த்த போகும் பட்ஜெட்

நிதியமைச்சர் அறிவித்த இந்திய பட்ஜெட்டின் வரவு செலவின்
சுருக்கம் :

அரசின் வருமானம் : ரூ.6,41,079 கோடிகள்
நிக‌ர‌ செலவு : ரூ.10,20,838 கோடிகள்
ப‌ற்றாக்குறை : ரூ.3,79,759 கோடிகள் (அனுமான‌ம்)

அதாவ‌து சுமார் 4 லச்சம் கோடி துண்டு விழுகிற‌து. பெட்சிட் அல்ல‌து
ப‌டுதா என்றும் சொல்லாம். அதை க‌ட‌ன் வாங்கித்தான் ஈடு செய்கிற‌து
ந‌ம‌து அர‌சு. மொத்த கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறது. இதுவ‌ரை
வாங்கிய‌ க‌ட‌ன்க‌ளுக்கான‌ இந்த‌ வ‌ருட‌ வ‌ட்டித் தொகை : சுமார் 3,00,000
கோடிகள். மொத்த கடன் எவ்வளவு என்பதை சரியாக கண்டுபிடிக்க
முடியவில்லை. வட்டி தொகையில் இருந்து யூகிக்கலாம்.

அர‌சு ப‌ற்றாக்குறைய‌ க‌ட‌ன் வாங்கியும், நோட்ட‌டித்தும் செல‌வு
செய்கிற‌து. அத‌னால் தான் விலைவாசி க‌ண்ட‌ப‌டி உய‌ர்கிற‌து. இன்னும்
இர‌ண்டு ஆண்டு க‌ழித்து இந்த‌ ப‌ட்ஜெட்டினால் விலைவாசி உய‌ர்வு
ஏற்படும். உட‌னே தெரியாது. ஆனால் அன்று அத‌ற்கான‌ கார‌ணிக‌ள்
இது போன்ற‌ ப‌ட்ஜெட் ப‌ற்றாகுறைக‌ள் என்று பொது புத்தியில்
அறிய‌ப்ப‌டாம‌ல், இத‌ர‌ கார‌ணிக‌ள் ம‌ட்டும் விவாதிக்க‌ப்ப‌டும். பார்க்க‌ :

விலைவாசி ஏன் உயர்கிறது ?
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html

பொருளாதார‌ ம‌ந்த‌த்தை நீக்க‌வும், நாட்டின் பொருளாதார‌ம் "வ‌ள‌ர‌வும்"
இது போன்ற‌ ப‌ற்றாகுறை ப‌ட்ஜெட்டுக‌ள் தேவை என்று ஒரு எண்ண‌
ஓட்ட‌ம் இருக்கிற‌து. லார்ட் கீயின்ஸ் என்ற‌ பொருளாதார‌ நிபுண‌ரின்
வ‌ழிமுறை இது. ஆனால் அவ‌ர் சொன்ன பற்றாக்குறை பட்ஜெட் விகுத‌ம்
மிக‌ மிக‌ குறைவான‌து.இந்தியாவில் மொத்த ஜி.டி.பியில் சுமார் 10 முத‌ல்
12 ச‌த‌வீத‌ அளவில் மத்திய‌ / மாநில‌ ம‌ற்றும் மான்ய‌ ப‌ட்ஜெட்டுக‌ளின்
ப‌ற்றாகுறை உள்ள‌து. அது தொட‌ர்ந்து விலைவாசி உய‌ர்வை அதிக‌ப்ப‌டுத்தி,
விவ‌சாயிக‌ளையும், ஏழைக‌ளையும், ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ளையும் க‌டும்
துன்ப‌த்திற்க்காளாக்கி, எதிர் ம‌றையான‌ விளைவுக‌ளையே த‌ரும்.
க‌ட‌னாளியான‌ அர‌சு, மேலும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் கோடிக‌ள் க‌ட‌ன் வாங்கி,
பொருளாதார‌த்தை மேம்ப‌டுத்துவ‌து ந‌ட‌வாத‌ காரிய‌ம். வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ள்
அளவு இந்திய‌ பொருளாதார‌ம் பாதிக்க‌ ப‌ட‌ வில்லை. பொருளாதார‌
வ‌ள‌ர்சி விகுத‌ம் தான் குறைந்து உள்ள‌து. ப‌ற்றாகுறை ப‌ட்ஜெட்டுக‌க‌ள்
இல்லாம‌லேயே, சில ஆண்டுகளில் அது தானாக‌வே ச‌ரியாவிடும்.
ஆனால் க‌ட‌ன் சுமையும், விலைவாசி உய‌ர்வும் அதிக‌ரிக்கும்
ப‌ற்றாக்குறை ப‌ட்ஜெடுக‌ள் ந‌ம் சாப‌க்கேடுக‌ள்.

மேலும், இந்த‌ ஆண்டு ராணுவ‌ச் செல‌வு : 1,41,703 கோடிக‌ள். சென்ற‌
ஆண்டை விட‌ சுமார் 36,000 கோடிக‌ள் அதிக‌ம். அக்கிர‌ம‌மான‌ த‌ண்ட‌ச்
செல‌வு. ந‌ம‌க்கு சிறிதும் க‌ட்டுப‌டியாகாத‌ வெட்டி வீராப்பு .ஆட‌ப்ப‌ர‌ம்.
இது போல் ப‌ல‌ துறைக‌ளிலும் வெட்டிச் செல‌வுக‌ள். அதை குறைக்க‌
வேண்டும் முத‌லில்.

இவ்வ‌ள‌வு செல‌வுக‌ளும் க‌ட‌ன் வாங்கித்தான் செய்கிறோம். க‌ட‌ன் வாங்கி
செல‌வு செய்தால் எதிர்கால‌ம் என்ன‌ ஆகும் ? த‌னி ம‌னித‌ன் இது போல்
க‌ட‌ன் வாங்கினால் என்ன‌ ஆவானோ, அதே தான் அர‌சிற்க்கு ஏற்ப‌டும்
என்ப‌தே அடிப்ப‌டை பொருளாதார‌ விதி. அது ப‌ல‌ருக்கும் புரிவ‌தில்லை.

ஆம்னி பஸ்களுக்கு விடுதலை

Ban on omnibus permits revoked
http://www.hindu.com/2009/06/11/stories/2009061159630800.htm

தமிழகத்தில், சுமார் 18 வருடங்களாக இருந்த ஆம்னி
பஸ்களுக்கான லைசென்ஸ் கட்டுபாடுகளை தளர்த்தியது
அரசு. நீண்ட தொலைவு பயணத்திற்க்கு அரசு பஸ்கள்
மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் அதிகம் தேவைபடுகின்றன.
(ரயில் வண்டிகளில் இடம் நிரம்பி வழிவதால்) ; ஆனால்
1991 முதல் புதிய ஆம்னி பஸ்களுக்கான பெர்மிட்டுகள்
வழங்குவதை நிறுத்தி வைத்தது தமிழக அரசு. விளைவு :
கடும் பற்றாக்குறை மற்றும் டிக்கட் விலைகள் மிக
அதிகமானது.

ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் விதமே வினோதமானது,
முட்டாளதனாமானது. மதுரையில் இருந்து சென்னை
செல்லும் ஆம்னி பஸ், டூரிஸ்ட் வண்டியாகவே இயக்கப்படுகிறது.
அதவாத பயணிகள் அனைவரும் "சேர்ந்து" சென்னையை
சுற்றி பார்க்க செல்வதாக ஒரு செட்டப். தனியார் பஸ்களுக்கு
நேரடியான அனுமதி வழங்கப்படாதால் 40 வருடங்களாக இந்த
அவலம். மேலும் புதிய ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட்
அனுமதிக்காமல் இருந்ததால், இருக்கும் பெர்மிட்டுகள்
பல கோடி ரூபாய்களுக்கு (கருப்பில்) கைமாறின. எனக்கு
தெரிந்து கரூர் சென்னை ஆம்னி பெர்மிட், சில வருடங்களுக்கு
முன் சுமார் 2 கோடிக்கு கைமாறியது.

இதில் மறைந்து நிற்க்கும் விசியம் : அரசு அதிகாரிகள்,
அமைச்சர்கள், முதல்வர் வரை லஞ்சம் விளையாடுவது.
வருடந்தோரும் மாமுலாக சூட்கேஸ்கள் அனுப்பபடுகின்றன.
இதற்க்கு பெயர்தான் குரோனி கேபிடலிசம். புதிய போட்டியாளர்கள்
உருவாகி, மலிவான சேவைகள் அதிகமாகி, லாபம்
குறைவதை தவரிக்க‌ இதுவரை பெர்மிட் பெற்ற முதலாளிகளும்,
அரசு எந்திரமும் கூட்டாக செய்யும் சதி இது.

"தனியார் முதலாளிகள் வளர்ந்துவிடுவார்கள், லாபம்
இல்லாத வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க மாட்டார்கள்,
டிக்கட் விலை மிக அதிகமாகும், மக்கள் தவிப்பர்கள்" :
இந்த டைலாக் மாமுலாக உபயோகிக்கப்பட்டு, பொது
புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது.

இப்போதும், புதிய ஆம்னி பஸ்களுக்கான பெர்மிட் வழங்கும்
அதிகாரம் ஆர்.டி.ஓ மற்றும் அதன் தலைவரான் போக்குவரத்து
கமிஸ்னர் (மிகவும் 'பசையுள்ள' பதவி) ஆகியோரிடம் தான்
வழங்கள்ப்பட்டுள்ளது. இனி பல கோடிகள் கைமாறும். பேரங்கள்,
சூட்கேஸ்கள்...

ஏல முறையில் வெளிப்படையாக வழங்கும் முறையே
சரியானது. ஊழல் உருவாவதை தடுக்கும். ஆனால்
விடமாட்டார்கள்.

மேலும் பார்க்க :

http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html

வட கொரியா என்னும் நரகக்குழி

வட கொரியாவின் வரலாறு மற்றும் இன்றைய நிலைமை பற்றி
பார்ப்போம்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு,
பல கொடுமைகளை அனுபவித்த கொரியா நாடு, பின் உள்நாட்டு
யுத்ததில் சிக்கியது. வடக்கு பகுதியில் கம்யூனிஸ்டுகள் (சீனா
மற்றும் ரஸ்ஸியா ஆதரவுடனும்), தென் பகுதியுல்
முதலாளித்துவாதிகள் / ஜனனாயகவாதிகள் அமெரிக்க மற்றும்
இதர நாடுகள் ஆதரவுடனும், கொரியாவை கைப்பற்ற கடும்
போரிட்டனர். 1950 முதல் 1953 முதல் நடந்த போரின்
இறுதியில் கொரியா தேசம் இரண்டாக பிளக்கப்பட்டு,
தென் கொரியா மற்றும் வட கொரியா என்று இரு நாடுகளாக‌
பிரிக்கப்பட்டது.

தென் கொரியா சுதந்திர சந்தை பொருளாதாரத்தையும், ஏற்றுமதிக்கான
தொழில்களையும் வெற்றிகரமாக‌ பயன்படுத்தி, சில ஆண்டுகளில் பெரும்
பொருளாதார வளர்ச்சியையும், வாழ்க்கை தரத்தையும் பெற்றது. அரசியல்
ரீதியாக, படிப்படியாக ஜனனாயக அமைப்பை அடைந்தது.

ஆனால் வட கொரியா கிம் என்னும் கம்யூனிச சர்வாதிகாரியின் இரும்பு
பிடியில் சிக்கி, மெதுவான வளர்ச்சியை அடைந்தது. 70கள் முதல்
பொருளாதாரம் தேக்கமடைந்தது. நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி
ராணுவ செலவிற்க்காக ஒதுக்கப்பட்டது. தனியுடைமையே இல்லாதால்,
உற்பத்தி திறன் மிக மிக‌ குறைவாகவும், நவீனமாகாமலும் குறைவாக
இருந்தது.

1994இல் கிம் இறந்தவுடன், அவரின் மகன் கிம் ஜாங் இல் சர்வாதிகாரியானர்.
மிக மிக கொடுங்கோலனான‌ இவர், 'எதிரிகள்' பலரையும் கொன்றழத்தார். வட
கொரியா விவசாயம் மிக மிக நலிவடைந்து, பஞ்சம் உருவானது. இறக்குமதி
செய்ய அன்னிய செலவாணி இல்லாததால், அரசாங்கமே "கடத்தல்" மூலம்
அன்னிய செலவாணியை பெற முயன்றது.

பஞ்சம் தலைவிருத்தாடி, பட்டினிச்சாவுகள் நடக்கும் போதும்,
ஆட்சியாளர்கள், அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும்
உருவாக்கி குவிக்கின்றனர்.

தம் மக்களை கண்டே பயந்த அரசு இது. அவர்களை முற்றாக
அடிமைகளாக‌ வைத்திருக்க மிக மிக அதிக பலம் கொண்ட
ராணுவம். தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள், தம் மீது
படை எடுத்துவிடும் என்று ஒரு பூச்சாண்டி காட்டியே ராணுவ
செலவை குறைக்க மறுக்கும் அரசு.

ஆனால் உண்மையில் உலகின் எந்த நாடும் வட கொரியா மீது
படை எடுக்க விரும்பாது. ரஸ்ஸியா, ஜப்பான், அமெரிக்கா, தென்
கொரியா, சைனா என்று முக்கிய நாடுகள் அனைத்தும் இன்று
வரை வட கொரியாவை தாஜா செய்து, அவ்வப்போது உதவி
செய்து வருகிறது. காரணம், வட கொரியா ஒரு "failed state"ஆக
வீழ்ந்தால், பல லச்சம் அகதிகள் தென் கொரியா, சைனா மற்றும்
இதர அண்டை நாடுகளில் தஞ்சம் புக முனைவர். ச‌மாளிக‌வே
முடியாத‌ நிலை அது.

இப்போதே, அக‌திக‌ள் எண்ணிக்கை மிக‌ அதிக‌ம். ர‌க‌சிய‌மாக‌
அங்கிருந்து த‌ப்பித்து செல்வ‌ர். வ‌ட‌ கொரியா கிராம‌ங்க‌ளில்
வாழும் ம‌க்க‌ளின் நிலை, ஈழ‌ ம‌க்க‌ளின் நிலையை விட‌ மிக‌
மிக‌ கொடுமையான‌து. விடிவே இல்லாத‌ சூழ‌ல்.

தென் கொரியாவில் வாழும் கொரியார்க‌ள் மிக‌ மிக‌ மிக‌
அதிர்ஸ்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ள். ஒரே நாட்டில் இரு நிலை.

ஆனால் இன்றும் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சிதான்.
செங்கொடி பற‌க்கிறது. நமது காம்ரேடுகள், வட கொரிய
ஆட்சியாளர்களை  "திரிபுவாதிகள்",  "போலிகள்" என்று மிக
சுலபமாக நிராகரிப்பர். ஆனால் உலகெங்கிலும் (க்யூபா) உள்பட‌
செம்புரட்சி, காலப்போக்கில் "திரிபுவாதிகள்"
வசம் சிக்கி, சீரழிந்ததே வரலாறு.

சொல்லிவைத்தது போல் விதிவிலக்கில்லாமல் அனைத்து "கம்யூனிச"
நாடுகளும் எப்படி திரிபுவாதிகளிடம் சிக்கியதாம் ? காரணம், அந்த
சித்தாந்தம் விஞஞான‌ பூரவமானது அல்ல. அல்ல. அதிகாரம் ஒரு
முனையில் குவிக்க வகை செய்யும், மக்களாட்சிக்கு, அடிப்படை
உரிமைகளுக்கு விரோதமான சித்தாந்தம் அது. அதனால் இறுதியில்
சர்வாதிகார ஃபாசிசத்திற்கே வழி வகுக்கும். இதில் எங்கும் விதி
விலக்கே  இருக்க முடியாது. மேலோட்டமாக தொழிலாளர் அரசு,
சுரண்டலை  ஒழித்தோம், சமத்துவம் என்ற labelகளை வைத்துக்
கொள்வார்கள்.

தொழிலாளர்கள் நிலை கம்யூனிச நாடுகளில்தான் மிக மிக
கொடுமையானது. கொத்தடிமைகள் போல் வாழ்க்கை. அதை பற்றி
விரிவாக பின்னர்..

North Korea Human Rights (Amnesty International's reports)
http://www.amnestyusa.org/all-countries/north-korea/page.do?id=1011213

அமெரிக்காவின் (Libertarian) லிபெர்ட்டேரியன் கட்சி

அமெரிக்காவின் Libertarian Party :
 
அமெரிக்க அரசியல் என்றாலே குடியரசு கட்சி மற்றும்
ஜனனாயக கட்சிகள் மட்டும்தான் நினைவிற்கு வரும்.
ஆனால் மூன்றாவதாக ஒரு கட்சி 1971இல் இருந்து
செயல்படுகிறது. சுமார் 2 ல்ட்சம் உறுப்பினர்களை
கொண்ட கட்சி இது.
 
இரு பெரிய கட்சிகளுக்கு ஒரு மாற்றாக, அருமையான
கொள்கைகளோடு போராடும் சிறு கட்சி இது. இதன்
முக்கிய கொள்கைகள் :
 
1.அரசு என்பது மிக மிக சிறிய, வலு குறைந்த
அமைப்பாகவே இருக்க வேண்டும். அதவாது பல
தேவையில்லாத துறைகளில் அரசின் தலையீட்டை
அடியோடு நீக்க வேண்டும். Small government. தனி
மனித சுதந்திரம் தான் மிக மிக அடிப்படையான
உரிமை. அதை பாதுகாக்க மட்டும் அரசு எந்திரம்
தேவை. 
 
2.வ‌ருமான‌ வ‌ரி ம‌ற்றும் இத‌ர‌ வ‌ரிகளின் விகுதம்
மிக‌ மிக மிக குறைக்க‌ப்ப‌ட வேண்டும்.
 
3.எந்த ஒரு தனியார் தொழில் துறை மற்றும்
நிறுவனத்திற்க்கும் அரசு எந்த ஒரு சலுகையோ,
உதவியோ அளிக்க கூடாது.  அதுதான் உண்மையான
சுதந்திர சந்தை பொருளாதாரம்.  திவால் மற்றும்
நஸ்டம் என்பது சந்தை பொருளாதாரத்தின்  ஒரு
அம்சமே. அது resourceகளை குறைந்த efficiency உள்ள
அமைப்புகளிலிருந்து மிக அதிக‌ efficiency உள்ள
நிறுவனங்களுக்கு மாற்றும்.
 
4.விவசாயம், எரிசக்தி போன்ற துறைகள் எதற்க்கும்
அரசு மானியம் அளிக்க கூடாது. அவை தானகவே
வளர வேண்டும். "Hands off" policy.
 
5.அன்னிய விவாகரங்கள் : முதல் வேலையாக அமெரிக்கா
நேட்டோ (NATO)  போன்ற அனைத்து அமைப்புகளிலிருந்து
விலக‌ வேண்டும்.  எந்த நாட்டுடனும் ராணுவ மற்றும்
இதர  ஒப்பந்தங்கள் கூடாது. உலகின் எந்த நாட்டின் உள்
விவகாரங்களிலும் தலையிடக்கூடாது. படை எடுக்க
கூடவே கூடாது.  உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ராணுவ
தளங்களை மூடிவிட்டு, அமெரிக்க ராணுவம் உள்னாட்டில்
மட்டுமே தளங்களை வைத்திருக்க வேண்டும். ராணுவ
செலவு மிகவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ராணுவம்
என்பது தற்காப்பிற்க்காக‌ (self-defence) மட்டும், சிறிய
அளவில் இருந்தால் போதும்.
 
6.உலக நாடுகள் எதற்க்கும், எந்த நிதி உதவி (aid) மற்றும்
இதர‌ 'உதவிகளை' அமெரிக்க அரசு நிறுத்த வேண்டும்.
முதலில் உள்னாட்டு மக்களை கவனிக்க வேண்டும். அரசின்
நிதி நிலையை மேம்படுத்தி, கடனை ஒழித்து, பட்ஜெட்டில்
துண்டு  விழாமல் தடுக்க வேண்டும். Balanced budget. உலக்
வங்கி, அய்.எம்.எஃப் போன்றவை தேவையில்லை. அதில்
இருந்து அமெரிக்கா விலக வேண்டும். தனியார் அமைப்புகள்
மற்றும் மக்கள் இது போன்ற உதவிகள் செய்ய
தடையில்லை. அது அடிப்படை உரிமை.
 
7.மதம் மற்றும் இதர விசியங்களில் சர்வ சுதந்திரம்
அனுமதிக்கப் பட வேண்டும். கருகலைப்பு, ஓரினச்சேர்க்கை
போன்றவை தனி நபர் பிரச்சனைகள். அதில் அரசு
தலையிடக்கூடாது. கட்டுபடுத்தக் கூடாது.
 
8.பொதுமக்கள் ஆயுதம் தாங்க எந்த கட்டுபாடும் விதிக்க
கூடாது. (anti-Gun Contro Regulationsl)
 
9.ஏழை மக்களுக்கான உதவி வழங்கும் திட்டங்கள் (welfare)
அரசே செய்யாமல் தனியார் மயமாக்க வேண்டும்.
 
10.அரசின் பள்ளிகள் : பெற்றோர் ஆசிரயர் கழகத்தவரால்
மட்டுமே நிர்வாகிக்கபட வேண்டும். Free education vouchers
and competition அதிகரிக்கப்பட வேண்டும்.
 
இது போல் பல விசிய‌ங்களில் முழுமையான சுதந்திர
கொள்கைகளை கொண்ட ஒரு அபூர்வ கட்சி இது. இது
ஆட்சி அமைத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற
சொல்லே வழக்கொழிந்துவிடும் !! அமெரிக்காவின் வளம்
மற்றும் தனினபர் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.
அதன் மூலம் உலகத்தில் வறுமை மேலும் குறையும்.
 
Gun Control போன்ற சில விசியங்களில் இக்கட்சியின்
நிலைபாடு  விவாதத்திற்குரியதுதான். ஆனால் இதர
அடிப்படை விசியங்களில் மிக மிக தெளிவான,
அருமையான‌ கொள்கைகள்.
 
ஆனால் இக்கட்சி பெருவாரியான ஆதரவை பெறுவது
நடக்குமா ?
 
இக்க‌ட்சியின் வ‌லைம‌னை :
http://www.lp.org/issues