அமெரிக்காவின் (Libertarian) லிபெர்ட்டேரியன் கட்சி

அமெரிக்காவின் Libertarian Party :
 
அமெரிக்க அரசியல் என்றாலே குடியரசு கட்சி மற்றும்
ஜனனாயக கட்சிகள் மட்டும்தான் நினைவிற்கு வரும்.
ஆனால் மூன்றாவதாக ஒரு கட்சி 1971இல் இருந்து
செயல்படுகிறது. சுமார் 2 ல்ட்சம் உறுப்பினர்களை
கொண்ட கட்சி இது.
 
இரு பெரிய கட்சிகளுக்கு ஒரு மாற்றாக, அருமையான
கொள்கைகளோடு போராடும் சிறு கட்சி இது. இதன்
முக்கிய கொள்கைகள் :
 
1.அரசு என்பது மிக மிக சிறிய, வலு குறைந்த
அமைப்பாகவே இருக்க வேண்டும். அதவாது பல
தேவையில்லாத துறைகளில் அரசின் தலையீட்டை
அடியோடு நீக்க வேண்டும். Small government. தனி
மனித சுதந்திரம் தான் மிக மிக அடிப்படையான
உரிமை. அதை பாதுகாக்க மட்டும் அரசு எந்திரம்
தேவை. 
 
2.வ‌ருமான‌ வ‌ரி ம‌ற்றும் இத‌ர‌ வ‌ரிகளின் விகுதம்
மிக‌ மிக மிக குறைக்க‌ப்ப‌ட வேண்டும்.
 
3.எந்த ஒரு தனியார் தொழில் துறை மற்றும்
நிறுவனத்திற்க்கும் அரசு எந்த ஒரு சலுகையோ,
உதவியோ அளிக்க கூடாது.  அதுதான் உண்மையான
சுதந்திர சந்தை பொருளாதாரம்.  திவால் மற்றும்
நஸ்டம் என்பது சந்தை பொருளாதாரத்தின்  ஒரு
அம்சமே. அது resourceகளை குறைந்த efficiency உள்ள
அமைப்புகளிலிருந்து மிக அதிக‌ efficiency உள்ள
நிறுவனங்களுக்கு மாற்றும்.
 
4.விவசாயம், எரிசக்தி போன்ற துறைகள் எதற்க்கும்
அரசு மானியம் அளிக்க கூடாது. அவை தானகவே
வளர வேண்டும். "Hands off" policy.
 
5.அன்னிய விவாகரங்கள் : முதல் வேலையாக அமெரிக்கா
நேட்டோ (NATO)  போன்ற அனைத்து அமைப்புகளிலிருந்து
விலக‌ வேண்டும்.  எந்த நாட்டுடனும் ராணுவ மற்றும்
இதர  ஒப்பந்தங்கள் கூடாது. உலகின் எந்த நாட்டின் உள்
விவகாரங்களிலும் தலையிடக்கூடாது. படை எடுக்க
கூடவே கூடாது.  உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ராணுவ
தளங்களை மூடிவிட்டு, அமெரிக்க ராணுவம் உள்னாட்டில்
மட்டுமே தளங்களை வைத்திருக்க வேண்டும். ராணுவ
செலவு மிகவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ராணுவம்
என்பது தற்காப்பிற்க்காக‌ (self-defence) மட்டும், சிறிய
அளவில் இருந்தால் போதும்.
 
6.உலக நாடுகள் எதற்க்கும், எந்த நிதி உதவி (aid) மற்றும்
இதர‌ 'உதவிகளை' அமெரிக்க அரசு நிறுத்த வேண்டும்.
முதலில் உள்னாட்டு மக்களை கவனிக்க வேண்டும். அரசின்
நிதி நிலையை மேம்படுத்தி, கடனை ஒழித்து, பட்ஜெட்டில்
துண்டு  விழாமல் தடுக்க வேண்டும். Balanced budget. உலக்
வங்கி, அய்.எம்.எஃப் போன்றவை தேவையில்லை. அதில்
இருந்து அமெரிக்கா விலக வேண்டும். தனியார் அமைப்புகள்
மற்றும் மக்கள் இது போன்ற உதவிகள் செய்ய
தடையில்லை. அது அடிப்படை உரிமை.
 
7.மதம் மற்றும் இதர விசியங்களில் சர்வ சுதந்திரம்
அனுமதிக்கப் பட வேண்டும். கருகலைப்பு, ஓரினச்சேர்க்கை
போன்றவை தனி நபர் பிரச்சனைகள். அதில் அரசு
தலையிடக்கூடாது. கட்டுபடுத்தக் கூடாது.
 
8.பொதுமக்கள் ஆயுதம் தாங்க எந்த கட்டுபாடும் விதிக்க
கூடாது. (anti-Gun Contro Regulationsl)
 
9.ஏழை மக்களுக்கான உதவி வழங்கும் திட்டங்கள் (welfare)
அரசே செய்யாமல் தனியார் மயமாக்க வேண்டும்.
 
10.அரசின் பள்ளிகள் : பெற்றோர் ஆசிரயர் கழகத்தவரால்
மட்டுமே நிர்வாகிக்கபட வேண்டும். Free education vouchers
and competition அதிகரிக்கப்பட வேண்டும்.
 
இது போல் பல விசிய‌ங்களில் முழுமையான சுதந்திர
கொள்கைகளை கொண்ட ஒரு அபூர்வ கட்சி இது. இது
ஆட்சி அமைத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற
சொல்லே வழக்கொழிந்துவிடும் !! அமெரிக்காவின் வளம்
மற்றும் தனினபர் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.
அதன் மூலம் உலகத்தில் வறுமை மேலும் குறையும்.
 
Gun Control போன்ற சில விசியங்களில் இக்கட்சியின்
நிலைபாடு  விவாதத்திற்குரியதுதான். ஆனால் இதர
அடிப்படை விசியங்களில் மிக மிக தெளிவான,
அருமையான‌ கொள்கைகள்.
 
ஆனால் இக்கட்சி பெருவாரியான ஆதரவை பெறுவது
நடக்குமா ?
 
இக்க‌ட்சியின் வ‌லைம‌னை :
http://www.lp.org/issues
 

 


 

மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்

அன்புள்ள ஜெமோ,

பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய உங்கள் பதிவை ( http://jeyamohan.in/?p=97 )
இப்போதுதான் படித்தேன். அதை ஒட்டிய மடல் இது :

மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்

///ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை இயல்பாகக்
கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின் மையம். அதை
எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து அளவுக்கே
முக்கியமான குரல்.////

சொத்துரிமை தான் முதலாளித்துவத்தின் ஆணிவேர். பல வகை
அடிப்படை உரிமைகளில் சொத்துரிமை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத உள்ளேன். மார்க்ஸிச‌த்தை எந்த‌ '
முறையில்' அம‌ல்ப‌டுத்தினாலும், அடிப்ப‌டை சொத்துரிமையை ந‌சுக்காம‌ல்
செய‌ல்ப‌டுத‌ முடியாது. சொத்துரிமையை ந‌சுக்கும் போது இத‌ர‌ ம‌னித‌
உரிமை மீற‌ல்க‌ள் மிக‌ இய‌ல்பாக‌ ந‌சுக்க‌ப‌டும். அதை த‌விர்க்க‌வே
முடியாது. செம்புரட்சிக்கு பின் ஸ்டாலின்ஸ‌ம் உருவாகுவ‌தை
த‌விர்க்க‌வே முடியாது.

அலெக்ஸான்ட‌ர் சோல்ஸ்சென்ன்ஸின் (Aleksandr Solzhenitsyn)
சொல‌வ‌து :

..he blamed the teachings of Karl Marx and Friedrich Engels, arguing
Marxism itself is violent. His conclusion is Communism will ALWAYS be
totalitarian and violent, wherever it is practiced. There was nothing special
in the Russian conditions which affected the outcome...

He also rejected the view that Stalin created the totalitarian state, while
Lenin (and Trotsky) had been "true communists." He argued Lenin started
the mass executions, wrecked the economy, founded the Cheka which would
later be turned into the KGB, and started the Gulag even though it did not have
the same name at that time.

இந்த‌ அம்ச‌ம் மார்கிஸ‌த்தின் அடிப்ப‌டை கூறுக‌ளிலேயே உள்ள‌து.
என‌வே ஸ்தாலிய‌த்தை உருவாக்க‌ சாத்திய‌மில்லாத‌ ஒரு
மார்க்ஸிச‌ம் சாத்திய‌மே இல்லை.


சொத்துரிமையும் அற‌விய‌லும் ப‌ற்றி மிக‌ முக்கிய‌ ப‌திவு :

"HUMAN RIGHTS" AS PROPERTY RIGHTS
http://www.mises.org/rothbard/ethics/fifteen.asp

The Ethics and Economics of Private Property
http://www.mises.org/story/1646

அன்புடன்
K.R.அதியமான்

-----------------------------

http://jeyamohan.in/?p=97

...ஒரு படைப்பு வாசகனுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எத்தனை
பேர் எத்தனை முறை வாசிக்கிறார்களோ அத்தனைமுறை அது புதிதாகப்
பிறக்கிறது. சோதிப் பிரகாசம் அவர்களின் வாசிப்பு என்நூலில் இருந்து
அவர் பெற்றுக் கொண்டது. அதை சரி அல்லது தவறு என்று சொல்ல
எனக்கு உரிமை இல்லை. அவர் கணக்கிலெடுக்கத் தவறிய விஷயங்களை,
அவர் பார்க்காத கோணங்களை சகவாசகனாக நான் சுட்டிக் காட்டலாம்.
படைப்பாளி கூட படைப்புக்கு ஒரு வாசகனே. இனி நான் எதை
சொன்னாலும் அது அந்நாவலின் பகுதி அல்ல. அது முடிந்துவிட்டது.
[விஷ்ணுபுரத்தில் புதிதாக எழுதிச் சேர்க்கப்படவில்லை]

என் நோக்கில் அந்நாவலில் மார்க்ஸியத்தையும் ஸ்தாலினியத்தையும்
துல்லியமாக வேறுபடுத்திப் பார்த்திருப்பதாகவே படுகிறது. அப்படி
வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவரால் அதை மார்க்ஸிய எதிர்ப்பு நாவல்
என்று சொல்லிவிடவும் முடியாது. அது ஸ்தாலினிய எதிர்ப்பு நாவலே.
ஆனால் ஸ்தாலினின் தரப்புகூட வலிமையாகவே சொல்லப்படுகிறது.
அதில் ஒற்றைப்படையாகக் கருத்துகள் முன்வைக்கப்படுவது இல்லை.
எல்லா கருத்தும் ஒரு விவாதத்தன்மையுடன்தான் வருகின்றன.
ஆகவே எல்லா கருத்தும் மறுக்கப்படுகின்றன. ஆனால் சில தரப்புகள்
தன்னிச்சையான உக்கிரத்துடன் நிகழ்ந்துள்ளன. எஸ்.எம்.ராமசாமி
சொல்லும் மாறாப்பேரறம் குறித்த தரப்பு அதில் ஒன்று. அதற்குச்
சமானமான வலிமையுடன் வருவது ஜோணி என்ற கதாபாத்திரத்தால்
முன்வைக்கப்படும் எதிர்கால மார்க்ஸியம் குறித்த பெருங்கனவு.
அந்நாவல் மார்க்ஸியத்தின் அழிவைப் பற்றி பேசவில்லை, அதன்
மறுபிறப்பைப் பற்றிப் பேசுகிறது

மார்க்சியம் ஸ்தாலினியமல்ல. ஆனால் அது ஸ்தாலினியத்தை
முளைக்கவைத்தது. அரை நூற்றாண்டு காலம் அதை நியாயப்படுத்தும்
கருத்தியல் சட்டகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதை எவருமே மறுக்க
இயலாது. பின்தொடரும் நிழலின் குரலின் முக்கியமான வினாவே
அங்குதான் உள்ளது. சில எல்லைகளை நாம் ஒருபோதும்
மீறமுடியாது என எண்ணுகிறோம், சிலவற்றை கற்பனைகூட
செய்யமுடியாது என நம்புகிறோம். ஆனால் உரியமுறையில்
நியாயப்படுத்தப்பட்டால் மனிதன் எதையும் செய்வான் என்றுதான்
வரலாறு நிரூபித்துள்ளது. நாஜி வதைமுகாம்களை நடத்தியவர்கள்
மனிதர்களே. அவர்களுக்கு அவர்கள் செயல் நியாயமாக,
இன்றியமையாததாகப் பட்டது. ஆகவே மனிதன் கருத்தியல்மீது
மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்பதே நாம் இருபதாம்
நூற்றாண்டில் கற்றுக் கொண்ட பாடம். கருத்தியல் எந்த அளவுக்கு
வலிமையாகவும் துல்லியமாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலும் கவனமாக இருக்கவேண்டும். எந்த அளவுக்கு முற்போக்காக,
எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு
மேலதிகக்கவனம் தேவை. தர்க்கமல்ல, மனசாட்சியே நம்
அளவுகோல்களைத் தீர்மானிக்கவேண்டும். புத்தியல்ல கனிவே
நம்மை வழிநடத்தவேண்டும். அந்நாவலில் உள்ளதாக எனக்குப்
படுவது இதுவே.

இதுவே பின் தொடரும் நிழலின் குரல் பேசும் விஷயம்.
அதைப்பேசும்பொருட்டு இக்காலகட்டத்தில் மிக வலிமையனதாக
இருந்த ஒரு கருத்தியலான மார்க்ஸியம் உதாரணமாக்கப்பட்டுள்ளது,
அவ்வளவுதான். அதன் பிரச்சினை அறத்துக்கும் தர்க்கத்துக்கும்
இடையேயான முரண்பாடு குறித்ததே. மார்க்ஸியமா ஸ்தாலினியமா
என்பதல்ல அதன் சிக்கல். எப்படி ஸ்தாலினியத்தையும் போல்பாட்டின்
கொடூரங்களையும் மகத்தான மனிதாபிமானிகளாக இருந்தவர்கள்
கூட பலவருடம் நியாயப்படுத்தினார்கள் என்பதுதான். [இன்னும்
சொல்லப்போனால் இ.எம்.எஸ் என்ற மேதை, பெருங்கருணையாளன்
எப்படி அதைச்செய்தான் என்பதே என் தனிப்பட்ட சிக்கல்]. எப்படி
எந்த ஒரு இலட்சியவாதமும் ஸ்தாலினியம் போன்ற வன்முறைக்களத்தை
உருவாக்கக் கூடும் என்ற சாத்தியக்கூறுதான் அதன் இலக்கு. இலட்சியவாதம்
எதிர்நிலை நோக்குகளை வன்முறையை உருவாக்குமென்றால் அது
மெல்ல தன்னை வன்முறைக்குப் பலிதந்துவிடும் என்பதே. வன்முறைக்கு
அதற்கே உரிய இலக்கணமும் வழிமுறையும் உண்டு என்பதே.
அவ்வகையில்தன் ஆத்மாவின் ஆழத்திலிருந்து பின் தொடரும் நிழலின்
குரலின் வரிகளை வாசித்த பலநூறு ஈழவாசகர்களை நான் அறிவேன்.

ஸ்தாலினியம் தவறாயிற்று என இன்று சாதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் கொல்லப்பட்ட உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களை மீட்டெடுக்க
இயலுமா என்பதே அந்நாவல் எழுப்பும் வினா. வன்முறை எங்கு எப்படி
நிகழ்ந்தாலும் இந்த அபாயம் உள்ளது. அதை நிகழ்த்தும்போது உள்ள
நியாயங்கள் மாறலாம். நிகழ்ந்தவற்றைச் சரிசெய்ய இயலாது. அப்படியானால்
தியாகங்களுக்கு மதிப்பே இல்லையா? போல்ஷெவிக் புரட்சியில்
இறந்துபோனவர்களின் மரணம் வரலாற்றின் கேலிக்கூத்துதானா? [அதே
வினாவை அப்படியே ஈழத்தைப் பற்றியும் எழுப்பலாம். என்றாவது
அவ்வினா எழுந்துவரும், மிகவலிமையாக. அப்போது என் நாவல்
எதைப்பற்றியதென்ற கேள்விக்கே இடமிருக்காது]. அக்கேள்விக்கே
கிறிஸ்து வந்து பதில் சொல்கிறார்- திருச்சபையின் கிறிஸ்து அல்ல
படைப்பின் ஆன்மாவில் விளைந்த கிறிஸ்து.

ஸ்தாலினியத்தை உருவாக்கச் சாத்தியமில்லாத ஒரு மார்க்ஸியம்,
தாய்மையை உள்ளடக்கிய, ஆன்மீகத்தின் பெருங்கருணையை
இயல்பாகக் கொண்ட ஒரு மார்க்ஸியம் குறித்த கனவு அந்நாவலின்
மையம். அதை எழுப்பவே ஜோணி வருகிறான். அவன் குரல் கிறிஸ்து
அளவுக்கே முக்கியமான குரல்.

இந்தி திணிப்பும், தனியார்மயமும்

இந்தி திணிப்பும், தனியார்மயமும்

1994இல் தனியார் சேட்டிலைட் சேனல்களை மத்திய அரசு
அனுமதிக்கும் வரை பல ஆண்டுகளாக அரசின் தூர்தர்ஸ்ன் தான்
மோனோபாலியாக கொடிகட்டிப் பறந்தது. 1970கள் முதல் 1994 வரை
சென்னை தூர்தர்சனில் இந்தி திணிப்பு மிக மிக் அதிக அளவில்
நடந்தது. இன்று 40 வயதை தொட்டவர்களுக்கு இது நியாபகம்
இருக்கும்.

நேசனல் புரோக்ராம் என்ற பெயரில் முக்கியமான நேரங்களில்
(ப்ரைம் டைம்) இந்தி மொழி நிக்ழச்சிகள் தாம். தமிழ் நிகழ்ச்சிகள்
பிற சமயங்களில் தான் அனுமதி. இது தான் இந்திய ஒற்றுமையை
நிலை நாட்ட சரியான வழி என்று டில்லியில் இருந்த தலைவர்கள்
மற்றும் அதிகாரிகளின் நினைப்பு ! எதிர்க்க முடியாத படி அனைத்து
வகை அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிந்து குடந்த
லைசென்ஸ் ராஜ்ய காலங்கள் அவை. தனியார் வானொலியும்
அன்று அனுமதி கிடையாது.

1991க்கு பின் தாரளமயமாக்கல் ஆரம்பமானாதால் ஏற்பட்ட பல
நல்ல‌ விளைவுகளில் ஒன்று தான் தகவல் தொடர்பு மற்றும்
ஊடகத் துறையில் அரசின் கட்டுபாடுகள் பெருமளவு
தளர்த்தப்பட்டு, தனியார்கள் அனுமதிக்க‌ பட்டது. 1994இல்
முதன் முதலில், தமிழில் முதல் தனியார் தொலைகாட்சியாக
சன் டீவி துவக்கப்பட்டது. அதன் பின் பல பல‌ இதர தனியார்
தொலைகாட்சி சானல்கள் மற்றும் செய்திகளுகென்றே
தனி சேனல்கள். இன்று நிலைமையில்தான் எத்தனை மாறுதல் !!
அனைத்து தனியார் தொலைகாட்சி சேனல்களிலும் தமிழ் மயம்தான்.
அவற்றின் தரம் மற்றும் தாக்கம் வேறு விசியம். ஆனால் தமிழர்கள்
விரும்பிய மொழியில் விரும்பிய நிகழ்ச்சிகளை காண வாய்ப்பு.
செய்திகள் மற்றும் கவரேஜ், அரசின் கட்டுபாட்டில் இருந்து
விடுபட்டதால், பரவலாக மற்றும் ஆழமான செய்திகள் முதன்
முறையாக இடம்பெற்றன. அரசியல் சார்ப‌ற்ற நடுனிலை
சேனல்களும் உருவாகின.

தூர்தர்ஸ்னின் மோனோபோலி ஆதிக்கம் ஒழிந்ததால் அது
தடுமாறியது. இன்று சென்னை தூர்தர்ஸனில் தமிழ் மொழி
புரோக்ராம்கள் மிக மிக‌ அதிகமாக ஒளிப்பரப்பு. எப்படி இந்த
மாற்றம் சாத்தியமானது ? தமிழ் அல்லாமல் இந்தியில்
ஒளிபரப்பினால், சந்தை போட்டியில் தோல்வி என்று
புரிந்தவுடன் தான் இந்த நல்ல மாறுதல்.

சுத‌ந்திர‌ ச‌ந்தை பொருளாதார‌ கொள்கைக‌ள் ப‌டிப்ப‌டியாக‌
அனைத்து வ‌கை சுத‌ந்திர‌ங்க‌ளையும், முக்கிய‌மாக‌
அர‌சிய‌ல் ம‌ற்றும் சிவில் உரிமைக‌ளை ப‌ர‌வ‌லாக்கி,
வ‌லிமையாக்கி, உண்மையான‌ ஜ‌ன‌னாய‌க‌த்தை நோக்கி
நாட்டை கொண்டு செல்லும் என்ப‌த‌ற்க்கு இது ஒரு முக்கிய‌
சாட்சி.

தொலைதொட‌ர்பு துறையிலும் இதே க‌தைதான். இன்று இந்த‌
இணைய‌ம் மிக‌ மிக‌ ம‌லிவாக‌, ப‌ர‌வ‌லாக‌ ம‌க்க‌ளில் ஊட‌க‌மாக‌,
ஈடு இணைய‌ற்ற‌ சுத‌ந்திர‌த்துட‌ன‌ வ‌ள‌ர‌ முக்கிய‌ கார‌ணம், அது
அர‌சின் க‌ட்டுப்பாட்டில் இல்லை. பி.எஸ்.என்.எல் ம‌ட்டும்
இன்றுவ‌ரை ஒரே நிறுவ‌ன‌மாக‌, மோனோபலியாக‌ தொட‌ர்ந்திருந்தால்
இது சாத்திய‌மில்லை. 1990க‌ளுக்கு முன் தொலைபேசி வாங்க‌
முய‌ன்ற‌வ‌ர்க‌ளுக்கு புரியும் இது.

இணைய‌ம் ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள், செய்திக‌ள் ம‌ற்றும்
இத‌ர‌ விசிய‌ங்க‌ளை ம‌க்க‌ள் அனைவ‌ரும் மிக‌ எளிதாக‌
ப‌ரிமாற‌ வ‌கை செய்கிற‌து. இந்திரா காந்தி கால‌த்தில் மிஸா
என்ற‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்தில் நில‌விய‌ ஊட‌க‌ முட‌க்க‌த்தை
இன்று உள்ள‌ க‌ட்ட‌ற்ற‌ சுத‌ந்திர‌ நிலையுட‌ன் ஒப்பிட்டால்
புரியும். அன்று சோசிய‌லிச‌ம் என்ற‌ பெய‌ரில் தான்
அட‌க்குமுறை ஏவ‌ப்ப‌ட்ட‌து.

Milton Friedman என்ற‌ மாபெரும் பொருளாதார‌ வ‌ல்லுன‌ர் எழுதிய‌
முக்கிய‌ ஆக்க‌ங்க‌ள் இவை :

"Capitalism and Freedom"
http://en.wikipedia.org/wiki/Capitalism_and_Freedom

"Free to Choose"
http://en.wikipedia.org/wiki/Free_to_Choose

அனைவ‌ரும் ப‌டித்து ப‌ய‌ன் பெற‌ வேண்டிய‌ நூல்க‌ள் இவை.

சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்

சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்

எழுத்தாளர் சாரு நிவேதித்தா, கேராளாவை அடிக்கடி
சிலாகித்து எழுதுவார். அங்கு எழுத்தாளர்கள் மிகவும்
கொண்டாடப் படுகிறார்கள். அவர்களின் நூல்கள்
மிக அதிகம் படிக்கபடுகின்றது /மதிக்கபபடுகிறார்கள்.
ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் அந்த அளவு தமிழ்னாட்டில்
மதிக்கப்படுவதில்லை. புத்தக விற்பனையும் குறைவு.
இப்படி...

இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் கேரளா /
தமிழ்நாடு பற்றிய‌ சரியான ஒப்பீட்டை தராது. தொழில்
வளார்ச்சி, வேலை வாய்ப்புகள், வன்முறை, ஜனனாயக
அடிப்படைகள் போன்றவை தாம் முக்கியம். அடிப்படை
தேவைகள்.

கேரளாவில் 40களில் இருந்து கம்யூனிச கொள்கைகள்
பரவலாக‌ பரவி, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை, 1957இல்
அமைத்தது. தொழில் முனைவோர் எதிரிகளாக பார்க்கப்
பட்டனர். தொழிலாளர்கள் உரிமைகளுக்காக மட்டும்
போராடினர். கடமை பற்றி கவலைப்படவில்லை. மொத்த
விளைவு : கேரளாவில் கடுமையான வேலை இல்லாத்
திண்டாட்டம். மலையாளிகள் வேலை தேடி உலகெங்கும்
புலம் பெயர்ந்தன். பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
தமிழ் நாட்டிற்க்கு பல லச்சம் மலையாளிகள் வேலை
தேடி வந்தனர் / வருகின்றனர். மாற்றாக தமிழர்
கேரளாவிற்க்கு வேலை தேடி செல்வது மிக மிக
குறைவே.

கேராளா எல்லையை தாண்டினால், ஒரு மலையாளி
மிக 'நல்ல‌' தொழிலாளியாகிவிடுவார். சுறுறுப்பு, திறமை,
வேலையில் அர்பணிப்பு, ஊக்கம் போன்ற குணங்கள்
வெளிப்படும். வாழ்க்கையில் முன்னேற‌ மிக முயல்வர்.
ஆனால் இந்த குணங்கள் கேராளவிற்க்குள் இருக்கும்
போது சிறிதேனும் வெளிப்படாத விந்தை மனிதர்கள்.

திருச்சூர் போன்ற பகுதிகளில் நம லக்கேஜை நாமே
வாகனத்திலிருந்து இறக்கினாலும், அந்த பகுதி
கலாஸிகளுக்கு 'கூலி' தரவேண்டும். வேலை ஏதும்
செய்யாமலே கூலி கேட்க்கும் வினோதம் தமிழகத்தில்
இல்லை.

கேரள விவசாயத்தின் அவலங்களை பற்றி ஒரு
தனிப்பதிவே எழுத வேண்டும். நிலச்சீர்திருத்தம்
'வெற்றிகரமாக' நடந்த‌தால் சிறு துண்டுகளாக சிதறிய
'பண்ணைகள்' இன்று பரிதாபனான நிலையில் உள்ளன்.
நெல் உற்பத்தி 30 வருடங்களுக்கு முன் இருந்ததை
விட‌ குறைந்துவிட்டது. ஆம், குறைந்துவிட்டது.

கேரளாவில் நீர் வளம், மின்சாரம், துறைமுகங்கள்,
போக்குவரத்து கட்டமைப்புகள், நிதி மூலதனம் (கேரள
வங்கிகளில் என்.ஆர்.அய் சேமிப்புகள் குவிந்துள்ளன),
திறமையான தொழிலாளர்கள் என்று அனைத்து வசதிகள்
இருந்தாலும், பைத்தியக்காரன் தான் அங்கு புதிய தொழில்
தொடங்க முனைவான்.

பந்த, வேலை நிறுத்தம் போன்றவை மிக சாதாரணம்.

மலையாளிகளே நடத்தும் வலைமனை இது. பார்க்க :
http://savekerala.blogspot.com/

இவற்றோடு ஒப்பிடும் போது நமது தமிழக நிலை
எவ்வளவோ மேல். வேலை வாய்ப்பு மற்றும் தொழில்
வளர்ச்சி மிக மிக‌ அதிகம். வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்ற பெயரில் பல கோடி வெளிமானிலத்தவர்
இங்கு வேலை தேடி வந்து வாழ்கின்றனர்.

கேரளாவில் வன்முறை அளவு, தமிழகத்தை விட மிக
அதிகம். தேர்தலில் புதிய வேட்பாளர்கள் / கட்சிகள்
போட்டியிடுவது இங்கு எளிது. ஆனால் அங்கு காங்கிரஸ்
/ கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர புதியவர் நுழைந்தால்
ஃபாசிச எதிர்விளைவுகள் தாம்.

எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் கேரளா சொர்க
பூமியாக‌ இருக்கலாம். ஆனால் மக்களுக்கு.

சாருவின் அபிமான மலையாள எழுத்தாளாரான பால்
ஸக்கரியாவின் கட்டுரை தான் இது :

"முட்டாள்களின் சொர்க்கம்" ; மாயாவித் திருடர்கள்
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp

இந்த பாரா ஸ்கரியாவின் கட்டுரையிலிருந்துதான் :

"..பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை'
உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள்
தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத்
தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்
தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில்
தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு
முன்னால் செல்வதாக நான் முன்பே
குறிப்பிட்டேன்."

இப்ப சொல்லுங்க : சாருவின் கேரளாவா அல்லது
நமது தமிழகமா ?

கல்கட்டா, ரங்கூன், சிங்கப்பூர் : ஒரு ஒப்பீடு

கல்கட்டா, ரங்கூன், சிங்கப்பூர் : ஒரு ஒப்பீடு

1940 வ‌ரை சிங்க‌பூர், ர‌ங்கூன், க‌ல்க‌ட்டா மூன்றும் ஆங்கில‌
கால‌னிய‌ சாம்ராஜ்ய‌த்தின் மூன்று முக்கிய‌ துறைமுக‌ ந‌க‌ர‌ங்க‌ள்.
மூன்றும் ஏறக்குறைய சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தனவாக
1940வரை இருந்தன. ஏறக்குறைய ஒரே அளவு வளர்சி மற்றும்
வாணிபம் அந்த துறைமுகங்கள் மூலம் நடைபெற்றன.

இரண்டாம் உலக்ப்போரின் விளைவாக, ஆங்கிலேய காலனியாதிக்கம்
சரிந்து, பின் மூன்று நகரங்களும் சுதந்திர நாடுகளின் துறைமுக
நகரங்களாக உருமாற்றாம் ஆயின.

60 ஆண்டுகளுக்கு பின் இன்று இம்மூன்று நகரங்களையும் ஒப்பீட்டால் :
சிங்கபூர் மிக மிக அதிக வளம் பெற்று, ஒரு உயர்தர வளர்ந்த நாட்டின்
துறைமுக நகராக ஜொலிக்கிறது. 1940உடன் ஒப்பிட்டால் இன்று அங்கு
வாழ்க்கை தரம் மிக மிக அதிகம். முக்கிய‌ கார‌ண‌ம் அங்கு க‌ட‌ந்த‌
60 ஆண்டுக‌ளாக‌ சுத‌ந்திர‌ ச‌ந்தை பெருளாதார‌ கொள்கைக‌ள், free port,
கூட்டாட்சி ம‌ற்றும் சுத‌ந்திர‌ம்.

ரங்கூன் (இன்று யாங்கூன் என்று பெயர் மாற்றம்) ஒரு
கொடுமையான ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ். 1948முதல்
அன்னிய வெறுப்பு (xenophobia ) மிக அதிகம் கொண்டிருந்த ஒரு நாட்டின்
முக்கிய நகரம். அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் நசுக்கப்பட்ட ஒரு
பகுதி. அதன் விளைவு, இன்று ரங்கூன் துறைமுகம் முக்கியத்துவம்
இல்லாமால், கவனிக்கப்படாமல் ஒரு நோயாளி போல் உள்ளது.

கல்கட்டா 1920கள் வரை ஆங்கிலேய இந்தியாவின் தலைநகர்.
முக்கிய துறைமுகம். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த
பின், காங்கிரஸ் அரசு, ஜனனாயக சோசியலிச பாணி பெருளாதார
சித்தாந்ததை இந்தியாவில் அமல்படுத்தியது. முக்கியமாக கம்யூனிச
கொள்கைகள் மேற்கு வங்கத்தில் மிக அதிகம் பரவி, 1977 முதல்
அங்கு சி.பி.எம் கட்சியின் ஆட்சி. வணிகம் மற்றும் தொழில்களுக்கு
பெரும் தலைவலி மற்றும் வெளிப்படையான எதிர்ப்பு உருவானது.
தொழில் வளர்ச்சி முடங்கி, இன்று கல்கட்டா சீரழவில் உள்ளது. 60
ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரகாசமான நிலை நலிந்து, இன்று
ஒரு பெரு நோயாளி போல் தவிக்கிறது. பெரும் தொழில்க‌ள் ம‌ற்றும்
வ‌ணிக‌ நிறுவ‌ங்க‌ள் க‌ல்க‌ட்டாவை விட்டு புல‌ம் பெய‌ர்ந்து விட்ட‌ன‌.
புதிய‌ முத‌லீடுக‌ள் ம‌ற்றும் வேலை வாய்ப்புக‌ள் மிக‌ குறைவாக‌வே
வ‌ள‌ர்கின்ற‌ன‌.

1940 வ‌ரை ஏற‌க்குறைய‌ ச‌ம‌ அள‌வில் இருந்து மூன்று பெரு
ந‌க‌ர‌ங்க‌ளின் இன்றைய‌ நிலை சொல்கிற‌து : எது ச‌ரியான‌
பொருளாதார‌ / அர‌சிய‌ல் கொள்கை என்ப‌தை..