முதலீட்டியத்தின் அடிப்படைகள் – 2

நம்பிக்கை, நாணயம், கூட்டு முயற்சி : இவைதான் முதலீட்டியத்தின் அடிப்படை அம்சங்கள். இதை பற்றி சற்று பார்ப்போம்.

 

தொழில் நிறுவனங்கள் பல வகை வடிவங்களை கொண்டவை :

 

1.Sole Proprietorship (தனி நபர் உரிமை)

2.Partnership Firm (கூட்டாளிகள் கொண்ட சிறு நிறுவனம்)

3.Private Limited Company (இயக்குனர்கள், பங்குதாரர்கள் கொண்ட நிறுவனம்)

4.Public Limited Company (பங்குகளை வெளியிட்டு, பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்).

5.Venture Capital based companies (தொழில் முனைவோர்களை நம்பி முதலீடு செய்யப்பட்ட நிறுவனம்)

 

மிக குறைந்த முதலீட்டில், ஒரு தனிநபரால், தன் திறமை, உழைப்பின் மீது கொண்ட நம்பிக்கையால் உருவக்கப்படும் நிறுவனமே sole proprietorship நிறுவனம். அதன் வளர்ச்சி மற்றும் அளவு பொதுவாக பெரிய அளவில் இருக்காது. முதலீட்டிய அமைப்பில், இவைதான் முதல் படி.

 

இரண்டாவது வகையான கூட்டாளிகளை கொண்ட partnership firm : இவைதான மிக முக்கியமானவை. Building blocks of capitalism and prosperity. கூட்டாளிகளில் ஒருவரிடம் அதிக முதலீடு இருக்கும். ஒருவரிடம் தொழில் திறமை இருக்கும். ஒருவரிடம் உழைக்கும் திறன் அதிகமிருக்கும். நிர்வாகத்திறன், மார்கெட்டிங் திறன் என்றும் பிறருக்கு திறமைகள் இருக்கும். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை கொண்டால் தான் நிறுவனத்தை துவக்க முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை (mutual trust and faith) தான் மிக முக்கியமான அம்சம். சில பகுதிகளில் இந்த நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி மிக அதிகம் இருக்கும். அப்பகுதிகளே துரிதமாக வளம் பெறும். (இதில் சாதிய, குடும்ப உறவுகளின் பங்கும் உண்டு.) உதராணமாக கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இத்தகைய கூட்டாளி நிறுவனங்கள் மிக மிக அதிகம். அதனால் தான் அப்பகுதிகளில் தொழில் வளர்சியும் அதிகம். வறுமை அளவும் குறைவு. (in relative terms). பொதுவாக நிர்வாக கூட்டாளி என்று ஒருவரோ அல்லது இருவரோ இருப்பர். மற்றவர் sleeping partners என்று முதலீடு மட்டும் செய்யும் கூட்டாளிகள். நிர்வாக கூட்டாளி(கள்), மற்ற கூட்டாளிகளை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிறுவனத்தை நிர்வாகிக்க முனையும் தன்மை கொண்டவரகளாக இருப்பது மிக அவசியம். ஏமாற்றும் தன்மை கொண்டவரகள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற நிறுவனங்கள் உருவாகுவது அரிது. சக மனிதர்களை அதிகம் நம்பாமள், குறுகிய மனோபாவம் கொண்ட பகுதிகளில் உருவாகாது.

 

இன்று பெரும் பன்னாட்டு நிறுவனமாக திகழும் Infosys நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சொற்ப முதலீட்டில் ஒரு partnership firm ஆகவே துவக்கபட்டது ! இன்று பெரு நிறுவனங்களாக திகழும் பல புகழ் பெற்ற நிறுவனங்களுல் பல பத்தாண்டுகளுக்கு முன் அல்லது நூற்றாண்டுகளுக்கு முன் இது போன்ற partnership firmகளாகவே துவக்கப்ட்டன.

 

சக கூட்டாளிகளை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிருவனத்தை நிர்வாக்கிக்கும் குண நலனே மிக மிக அடிப்படை. ஊரில் உள்ள அனைத்து 'திறமையாளர்களும்' பிராடு பயலுகளாகவே இருந்தால், யாரும் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள். தொழில் வளர்ச்சி இல்லாமல், அந்த பகுதி வறுமையிலேயே தேங்கி கிடக்கும். யாரும் கடனும் அளிக்க மாட்டாரக்ள். எனவே இந்த அடிப்படை நேர்மை என்பது மிக முக்கியமானது. Business ethics and morals..

 

Private Limited Company என்பது அடுத்த கட்டம். இதுவும் partnership firmஅய் போன்றதுதான். ஆனால் சில அடிப்படை வித்தியாசங்கள். முதலீடு சற்று பெரிய அளவில் இருக்கும். இந்த லிமிட்ட என்பது, நஸ்டமடைந்து திவாலாகும் போது, கூட்டாளிகளின் தனிபட்ட சொத்துகளை கடன் கொடுத்தவர்கள் ஏலத்திற்க்கு கொண்டு வர முடியாது. நிறுவனத்தின் சொத்துக்களை மட்டுமே attach செய்ய முடியும். Limited Liability partnership (LLC) நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. To reduce risks and to encourage entrepreunership.

 

Public Limited Company அடுத்த நிலை. இவை பங்குகளை / கடன் பத்திரங்களை (shares and debentures) பொது மக்களுக்கு வெளியிட்டு / விற்று பெரும் மூலதனம் சேகரித்து, பெரிய projectகளை ஆரம்பிக்க ஏதுவானவை. பங்கு சந்தை மற்றும் ஆன்லைன் வர்தகம் பற்றி பல தவறான, மேலோட்டமான தகவல்கள் தான் பொது புத்தியில் அதிகம். அவற்றின் மிக அடிப்படை நோக்கங்கள் (functions) பற்றிய தெளிவு குறைவு. பொது மக்களின் சேமிப்பை ஆக்கபூர்வமான, லாபகரமான, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வழிகளில் செலுத்த மிக இன்றியமையாத பணிகளை செய்வதே பங்கு சந்தையின் அடிப்படை. பங்கு சந்தை அதிகம் develop ஆகாத காலங்களில், நம் மக்களின் சேமிப்பு, பயனற்ற, unproductive முறைகளில் முடங்கியிருந்தன. பல நூற்றாண்டுகளாக தங்கத்திலும், நிலத்திலும் மட்டும் சேமிப்புகளை முடக்கும் தன்மை தொடர்ந்தது. (இன்றும் இத்தகைய 'பாதுகாப்பான' வழிகளை நாடுபவர்களே அதிகம்).

 

மக்களின் சேமிப்புகள் சரியான முறையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் நாடுகளில் தான் பொருளாதார வளர்சி மற்றும் முன்னேற்றம் அதிகம்  இருக்கும். இந்தியாவில், ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, பங்கு சந்தை வளர்ச்சி அடையாமல், முடங்கி போய் இருந்தது. இன்று ஓரளவு வளர்ந்து, விரிவடைந்து விட்டது. இதுவும் ஆரம்ப நிலை தான். இன்னும் matured markets ஆக இங்கு உருவாமாறவில்லை.

 

ஒரு நிறுவனம் புதிய தொழிற்சாலையை அமைக்க அல்லது விரிவுபடுத்த வங்கி கடன் ஒரளவிற்க்குதான் பெற முடியும். புதிய பங்குகளை வெளியிட்டு, பெரும் தொகைகளை திரட்டுவதுதான் வழி. நிறுவனங்களின் வரலாற்றையும், நன்னம்பிக்கையையும் (goodwill)அய்யும் பொறுத்தே மக்கள் அதன் பங்குகளை வாங்குவர். முதலீட்டாளர்களை ஏமாற்றாமல், நேர்மையாக, திறமையாக நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்களே, மேலும் மூலதனத்தை திரட்ட முடியும். Goodwill and past track record எத்தனை முக்கியம் என்பதே இங்கு அடிப்படையான அம்சம்.

 

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நல்ல முறையில், தரமான பொருட்களை, சேவைகளை, மலிவான விலையில் அளித்தால் தான் சந்தையிலும் நன்மதிப்பை (Goodwill) பெற முடியும். இதை கட்டமைக்க பல பத்தாண்டுகள் ஆகும். (இழக்க சில நாட்களே போதும் !) உதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்களில் Sony நிறுவன பொருள் என்றால் உடனே அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை தான் நமக்கு நினைவிற்க்கு வரும். அதுதான் அதன் சந்தைக்கு அடிப்படை. Brand building என்று சொல்வார்கள். வெறும் பொய்யான விளம்பரங்களினால் அதை கட்டமைக்க முடியாது. "பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோறையும் எல்லா காலங்களுக்கும் ஏமாற்ற முடியாது." என்ற முதுமொழி இங்கு மிக பொருந்தும். தரம் மற்றும் விலை : இவை மூலம் தான் சந்தையில் வெற்றி பெற முடியும். சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை அம்சம் இது.

 

நம்பிக்கை, நாணயம் மற்றும் Goodwillஇன் முக்கியத்துவத்தை சுருக்கமாக பார்த்தோம். தொழில் நிறுவனங்களில் இறுதி வடிவமான Ventute Capital based companies பற்றி பார்ப்போம். பில் கேட்ஸ் போன்ற திறமையான தொழில் முனைவோர்களை சரியாக கண்டறிந்து, அவர்களின் ஆரம்ப கட்ட முயற்சிகளுக்கு, எந்தவிதமான செக்யூரிட்டி (அடமானம்) இல்லாமல், பெரிய அளவில் நிதியை முதலீடாக அளிக்கும் முறை. பல புதிய கண்டுபிடிப்புகள் அல்லது செயல் திட்டங்களுக்கு போதுமான முதலீடும், வங்கி கடன்களுக்கு கிடைக்காத நிலை எப்போதும் உண்டு. அந்த வகை கண்டுபிடிப்புகளுக்கும், தொழில் முனைவோர்க்களுக்கும் தாரளமாக முதலீடு அளிக்க மிக அதிகம் ரிஸ்க் எடுத்து செயல்படும் நிதி நிறுவனங்களே Venture Capital Funds. அவை முதலீடு செய்யும் நிறுவனங்கள் / திட்டங்களில் பெரும் பகுதி work out ஆகாமல் நட்டத்தில் முடியும். ஆனால் பத்தில் ஒரு திட்டம் வெற்றி பெற்றாலே போதும். மீதி ஒன்பது நிறுவன முதலீட்டிழப்பை சரிகட்டி, அதற்க்கு மேலும் பல மடங்கு லாபத்தை ஈட்டித்தரும். மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன், கம்யூட்டரை சிறிய அளவில் உருவாக்கி தனி மனித பி.சிகளாக்க வடிவமைக்க முடியும் என்று யாரும் நம்பாத போது, ரிஸ்க் எடுத்து பில் கேட்ஸுக்கு உதவிய Venture capital நிறுவனம், பின்னர் மிக பெரிய லாபத்தை வென்றிருக்கும். இதே போல பல் நூறு புதிய முயற்சிகளுக்கு பிறகு உதவ வழி பிறந்திருக்கும். Venture Capital Funds are the greatest and noblest form of capitalism. அவை எந்த நாடுகளில் அதிகம் தழைக்கிறதோ, அந்நாடுகள் தாம் மிக பெரும் வளர்ச்சி அடைந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும் பாக்கியத்தை அடைகின்றன.

 

மேலும்..

6 comments:

vasu said...

முதலீட்டியத்தின் அடிப்படைகள் இரண்டு பாகங்களும் அருமை.
எழுமையான விளக்கங்கள்.

Syed Vaisul Karne said...

It's really a great article and gives good insight about types of business entity.

How can subscribe your blog?

manjoorraja said...

எளிமையான விளக்கங்கள்.

வென்சூர் கெபிட்டல் பற்றிய விளக்கம் அருமை.

நன்றி. தொடரட்டும்.

வஜ்ரா said...

நீங்கள் ஏன் சார் வினவு போன்ற ஒரு ரவுடிக்கும்பல் நடத்தும் தேச விரோத வலைத்தளத்திற்குச் சென்று பின்னூட்டம் போடுகிறீர்கள் ?

அவர்களையெல்லாம் நீங்கள் மனிதர்களாக மதித்து பதிலளிப்பதாலேயே அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. உண்மையில் 10 நயாபைசாக்குக் கூட பிரயோசனமில்லாதவர்கள் அவர்கள்.

வீட்டில் தண்ணி தெளித்துவிடப்பட்ட தண்டச்சோறுகளும், பார்ட்டைம் திருடர்களும் ஃபுல்டைம் மெண்டல்களும் ஒரே இடத்தில் கூடமுடியும் என்றால் அது வினவு தளம் தான். அங்கெல்லாம் உங்கள் எனர்ஜியை வீணடிப்பதைவிட நல்ல கட்டுரைகளை இங்கேயே நீங்கள் எழுதலாமே. உங்கள் ரேஞ்சுக்கு நீங்கள் அந்த தரித்திர மூதேவிகளுடன் விவாதிப்பது சரியில்லை என்றே படுகிறது.

ஏதோ நான் சொல்றதச் சொல்லிட்டேன்.

ஜோதிஜி said...

நண்பா என்ன வஜ்ரா பொங்கி விட்டார்?

ஏன் நண்பர்கள் என்ற பகுதி உருவாக்காமல் இருக்கீறீர்கள் அதியமான்.

நிறைய பேர்கள் உருப்படியாக படிக்க வேண்டிய விசயங்களை அநாயசமாக எழுதி உள்ளீர்கள்.

ஒவ்வொன்றாக பொறுமையாக படிக்கின்றேன்.

Adriean said...

வஜ்ரா கூறியதை நானும் அப்படியே வழிமொழிகிறேன்.