வட கொரியா என்னும் நரகக்குழி

வட கொரியாவின் வரலாறு மற்றும் இன்றைய நிலைமை பற்றி
பார்ப்போம்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு,
பல கொடுமைகளை அனுபவித்த கொரியா நாடு, பின் உள்நாட்டு
யுத்ததில் சிக்கியது. வடக்கு பகுதியில் கம்யூனிஸ்டுகள் (சீனா
மற்றும் ரஸ்ஸியா ஆதரவுடனும்), தென் பகுதியுல்
முதலாளித்துவாதிகள் / ஜனனாயகவாதிகள் அமெரிக்க மற்றும்
இதர நாடுகள் ஆதரவுடனும், கொரியாவை கைப்பற்ற கடும்
போரிட்டனர். 1950 முதல் 1953 முதல் நடந்த போரின்
இறுதியில் கொரியா தேசம் இரண்டாக பிளக்கப்பட்டு,
தென் கொரியா மற்றும் வட கொரியா என்று இரு நாடுகளாக‌
பிரிக்கப்பட்டது.

தென் கொரியா சுதந்திர சந்தை பொருளாதாரத்தையும், ஏற்றுமதிக்கான
தொழில்களையும் வெற்றிகரமாக‌ பயன்படுத்தி, சில ஆண்டுகளில் பெரும்
பொருளாதார வளர்ச்சியையும், வாழ்க்கை தரத்தையும் பெற்றது. அரசியல்
ரீதியாக, படிப்படியாக ஜனனாயக அமைப்பை அடைந்தது.

ஆனால் வட கொரியா கிம் என்னும் கம்யூனிச சர்வாதிகாரியின் இரும்பு
பிடியில் சிக்கி, மெதுவான வளர்ச்சியை அடைந்தது. 70கள் முதல்
பொருளாதாரம் தேக்கமடைந்தது. நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி
ராணுவ செலவிற்க்காக ஒதுக்கப்பட்டது. தனியுடைமையே இல்லாதால்,
உற்பத்தி திறன் மிக மிக‌ குறைவாகவும், நவீனமாகாமலும் குறைவாக
இருந்தது.

1994இல் கிம் இறந்தவுடன், அவரின் மகன் கிம் ஜாங் இல் சர்வாதிகாரியானர்.
மிக மிக கொடுங்கோலனான‌ இவர், 'எதிரிகள்' பலரையும் கொன்றழத்தார். வட
கொரியா விவசாயம் மிக மிக நலிவடைந்து, பஞ்சம் உருவானது. இறக்குமதி
செய்ய அன்னிய செலவாணி இல்லாததால், அரசாங்கமே "கடத்தல்" மூலம்
அன்னிய செலவாணியை பெற முயன்றது.

பஞ்சம் தலைவிருத்தாடி, பட்டினிச்சாவுகள் நடக்கும் போதும்,
ஆட்சியாளர்கள், அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும்
உருவாக்கி குவிக்கின்றனர்.

தம் மக்களை கண்டே பயந்த அரசு இது. அவர்களை முற்றாக
அடிமைகளாக‌ வைத்திருக்க மிக மிக அதிக பலம் கொண்ட
ராணுவம். தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள், தம் மீது
படை எடுத்துவிடும் என்று ஒரு பூச்சாண்டி காட்டியே ராணுவ
செலவை குறைக்க மறுக்கும் அரசு.

ஆனால் உண்மையில் உலகின் எந்த நாடும் வட கொரியா மீது
படை எடுக்க விரும்பாது. ரஸ்ஸியா, ஜப்பான், அமெரிக்கா, தென்
கொரியா, சைனா என்று முக்கிய நாடுகள் அனைத்தும் இன்று
வரை வட கொரியாவை தாஜா செய்து, அவ்வப்போது உதவி
செய்து வருகிறது. காரணம், வட கொரியா ஒரு "failed state"ஆக
வீழ்ந்தால், பல லச்சம் அகதிகள் தென் கொரியா, சைனா மற்றும்
இதர அண்டை நாடுகளில் தஞ்சம் புக முனைவர். ச‌மாளிக‌வே
முடியாத‌ நிலை அது.

இப்போதே, அக‌திக‌ள் எண்ணிக்கை மிக‌ அதிக‌ம். ர‌க‌சிய‌மாக‌
அங்கிருந்து த‌ப்பித்து செல்வ‌ர். வ‌ட‌ கொரியா கிராம‌ங்க‌ளில்
வாழும் ம‌க்க‌ளின் நிலை, ஈழ‌ ம‌க்க‌ளின் நிலையை விட‌ மிக‌
மிக‌ கொடுமையான‌து. விடிவே இல்லாத‌ சூழ‌ல்.

தென் கொரியாவில் வாழும் கொரியார்க‌ள் மிக‌ மிக‌ மிக‌
அதிர்ஸ்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ள். ஒரே நாட்டில் இரு நிலை.

ஆனால் இன்றும் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சிதான்.
செங்கொடி பற‌க்கிறது. நமது காம்ரேடுகள், வட கொரிய
ஆட்சியாளர்களை  "திரிபுவாதிகள்",  "போலிகள்" என்று மிக
சுலபமாக நிராகரிப்பர். ஆனால் உலகெங்கிலும் (க்யூபா) உள்பட‌
செம்புரட்சி, காலப்போக்கில் "திரிபுவாதிகள்"
வசம் சிக்கி, சீரழிந்ததே வரலாறு.

சொல்லிவைத்தது போல் விதிவிலக்கில்லாமல் அனைத்து "கம்யூனிச"
நாடுகளும் எப்படி திரிபுவாதிகளிடம் சிக்கியதாம் ? காரணம், அந்த
சித்தாந்தம் விஞஞான‌ பூரவமானது அல்ல. அல்ல. அதிகாரம் ஒரு
முனையில் குவிக்க வகை செய்யும், மக்களாட்சிக்கு, அடிப்படை
உரிமைகளுக்கு விரோதமான சித்தாந்தம் அது. அதனால் இறுதியில்
சர்வாதிகார ஃபாசிசத்திற்கே வழி வகுக்கும். இதில் எங்கும் விதி
விலக்கே  இருக்க முடியாது. மேலோட்டமாக தொழிலாளர் அரசு,
சுரண்டலை  ஒழித்தோம், சமத்துவம் என்ற labelகளை வைத்துக்
கொள்வார்கள்.

தொழிலாளர்கள் நிலை கம்யூனிச நாடுகளில்தான் மிக மிக
கொடுமையானது. கொத்தடிமைகள் போல் வாழ்க்கை. அதை பற்றி
விரிவாக பின்னர்..

North Korea Human Rights (Amnesty International's reports)
http://www.amnestyusa.org/all-countries/north-korea/page.do?id=1011213

4 comments:

K.R.அதியமான் said...

கம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் - வட கொரியா

செல்வன்

Thinnai
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20606233&format=html&edition_id=20060623

வடகொரிய கம்யூனிச அதிபர் கிம் ஜாங் 2 ஜப்பானிய பிரதமருடன் பேசும்போது 13 ஜப்பானியர்களை(ஒரு பள்ளி சிறுமி உட்பட) கடத்தியதை ஒத்துக்கொண்டார் என்பதை அம்னஸ்டி இன்டெர்நேஷனலில் இணையதளம் தெரிவிக்கிறது.....மொழி பெயர்ப்பாளராகவும்,உளவு சொல்லவும்,ராணுவ தளபதிகளின் ஆசைநாயகிகளாகவும் அவர்கள் பயன்படுத்தப்படவே கடத்தப்பட்டனர் என்பதை ஜப்பானிய பிரதமரிடம் கிம் ஜாங் நேரடியாக ஒத்துக்கொண்டார்....


சர்வதேச மனித உரிமைகளுக்கான இயக்கமான அம்னெஸ்டி வடகொரியாவை பற்றி சொல்லும்போது "மக்களுக்கு உணவிடும் அரசின் அடிப்படை பொறுப்பிலிருந்து வட கொரிய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டுகிறது.நகர்புறங்களிலேயே வறுமை தாண்டவமாடுவதாகவும்,குழந்தைகள் உணவின்றி தவிப்பதாகவும் அம்னெஸ்டி குற்றம் சாட்டுகிறது.பேச்சுரிமை,எழுத்துரிமை என்பது கிஞ்சித்தும் கிடையாது,படுகொலைகள்,சித்ரவதைகள்,ஆகியவை அங்கு சர்வசாதாரனம் என்றும் குற்றம் சாட்டுகிறது"


பத்திரிக்கை சுதந்திரம் என்பது ஜோக்.ஏனெனில் அரசு தான் அங்கு அனைத்து பத்திரிகைகளையும் நடத்துகிறது.அரசு சொல்லுவது தான் செய்தி.அப்படி இருந்தும் 40 பத்திரிக்கையாளர்கள் "சரியான வழியில்" செல்லும்படி மறுகல்வி புகட்டபட்டனாராம்.அவர்கள் செய்த தவறு?அரசு அதிகாரிகளின் பெயர்களை எழுத்து பிழையோடு அச்சடித்தது.


லட்சக்கணக்கான வடகொரியர்கள் உணவின்றி சாகின்றனர் என்கிறது அம்னெஸ்டி.70% மக்களுக்கு உணவு அரசு ரேஷன் மூலமே கிடைக்கும்.அதில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 300 கிராம் உணவு மட்டுமே தரப்படுகிறதாம்.


சிறைகளில் நடக்கும் கொடுமைகளுக்கு எல்லையே கிடையாதாம்.சிறைகைதிகள் பேசிக்கொள்வது கண்டுபிடிக்கபட்டால் இரும்பு கம்பிகளாலும், மரக்கழிகளாலும் அடிக்கபடுவராம்.அடித்த பின் குளிர்ந்த நீரை அடிபட்ட இடத்தின் மீது (குளீர் காலங்களிலும்) ஊற்றுவராம்.தண்ணீர் கொடுமை என்றும் ஒன்று உண்டாம்.கட்டி வைத்து கணக்கு,வழக்கின்றி தண்ணீரை குடிக்க செய்வது நடக்குமாம்.


சிறைகளில் பெண்கள் நிலைமை சொல்லும் தரமன்று என்கிறது அம்னெஸ்டி.சீனாவுக்கு தப்பி ஓட முயன்று பிடிபட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சர்வசாதாரணமாம்.பிடிபட்ட அனைத்து பெண்களும்(கர்ப்பிணி,வயதானவர் உட்பட) காலை முதல் இரவு வரை ஓய்வின்றி வேலை செய்யவேண்டுமாம்.


உணவு நிலை:


வட கொரிய மக்கள் 10 ஆண்டுகளாக கடும் உணவு பஞ்சத்தால் பிடிக்கபட்டிருக்கின்றனராம்.லட்சக்கணக்கான பேர் உணவின்றி இறந்துவிட்டனராம்.ரஷ்யா வீழ்ந்ததால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க கொரிய அரசு "இனி நாம் இருவேளை மட்டுமே உண்போம்" எனும் திட்டத்தை 1991ல் அறிமுகப்படுத்தியதாம்.ரேஷனில் உணவு பொருள் வினியோகம் 10% ஒவ்வொருவருக்கும் குறைக்கப்பட்டதாம்.1994 கோடை முழுவதும் உணவு வினியோகம் மிகவும் மோசமான நிலையை அடைந்ததாம்.விடுமுறை நாட்களில் மட்டுமே உணவு வழங்கப்பட்டதாம்.


யுனிசெப் வடகொரிய குழந்தைகள் பற்றி மிகவும் கவலை தெரிவித்துள்ளது.80,000 குழந்தைகள் பஞ்சத்தால் இறக்க வேண்டிய நிலை உள்ளது என யுனிசெப் தெரிவித்துள்ளது.மொத்தம் உள்ள 800,000 குழந்தைகளில் 38% குழந்தைகள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக யுனிசெப் தெரிவிக்கிறது.


ரேஷன் முறை மிகவும் மோசமான நிலையை எட்டி(74% மக்கள் ரேஷனை மட்டுமே நம்புபவர்கள்) 1998'ல் சுத்தமாக நின்றுபோனதாம்.இனிமேல் நீங்களே உங்கள் கவனித்து கொள்ள வேண்டியதுதான் என அரசு அறிவித்ததும் மக்கள் புல்,பூண்டு,வேர்கள்,செடிகள் ஆகியவற்றை உண்டு காலம் தள்ளினராம்.இறந்தவர்களின் எண்ணீக்கை 220,000 முதல் 35 லட்சம் வரை என்கின்றனர்.


இதுபோக ஜாதிகொடுமை வேறு உண்டாம்.25% மக்கள் "தேசவிரோதிகள்" எனும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனராம்.அரசால் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் குடும்பத்தினர் தேசவிரோதிகளாக கருதப்படுவர் என்கிறது அம்னெஸ்டி.தென்கொரியாவிலிருந்து கைதிகளாக பிடிபட்டு வந்தவர்களும் இந்த பட்டியலில் உண்டு.இவர்களுக்கு சுத்தமாக உணவு எதுவும் தரப்படுவதில்லை என்பதோடு,கடும்கண்காணிப்புகள்,ஒடுக்குமுறை ஆகியவை உண்டாம்.


வடகொரிய மதம்:


கம்யூனிஸ்ட் நாடாச்சே.அங்கு மதம் ஏது என கேட்கலாம்.இருக்கு.அங்கு மன்னர் கிம் ஜாங் 2 தான் கடவுள்.கிம் ஜாங்கை கடவுள் என்றே அரசு ஊடகங்கள் சொல்கின்றன.கிம் ஜாங் கடவுள்,குரு என புகழும் பிரச்சாரம் அங்கு விடாது நடக்கிறது. ஒரு சாம்பிள் பாருங்கள்.


The Korean people regard it as their most worthwhile life to uphold Secretary Kim Jong Il and live and work in perfect harmony with him, said Rodong Sinmun in a signed article August 31. The author of the article said: The Korean people absolutely worship, trust and follow the General as god. These noble ideological feelings are ascribable to the fact that they have keenly felt the greatness of the General from the bottom of their hearts. He is the great teacher who teaches them what the true life is, a father who provides them with the noblest political integrity and a tender-hearted benefactor who brings their worthwhile life into full bloom. The life of the Korean people who form a harmonious whole with the General is a revolutionary life to glorify their noblest political integrity. This is why they have unbendingly advanced the revolution with an unshakable faith, not wavering under any obstacles and trials. The General is the mental pillar and the eternal sun to the Korean people. As they are in harmonious whole with him, they are enjoying a true life based on pure conscience and obligation. They are upholding him as their great father and teacher, united around him in ideology, morality and obligation. So, their life is a true, fruitful and precious life without an equal in history.


1999ல் வட கொரிய அரசு உளவுத்துறை தெரிவித்த தகவல்படி 2.5 மில்லியன் முதல் 3.5 மக்கள் உணவின்றி இறந்தனராம்.இது உண்மை என்றால் உணவின்றி மக்களை சாகடித்த ஆட்சியாளர்களின் பட்டியலில் 3ம் இடம் கிம் ஜாங்குக்காம்(முதல் இடம் மாவோவுக்கு,இரண்டாம் இடம் ஸ்டாலினுக்கு)முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளோர் அனைவரும் கம்யூனிஸ்டுகளே என்பது தற்செயல் நிகழ்வாக இருக்கலாம்:-)


வட கொரிய அரசின் அதிகாரபூர்வமான இணையதளம் மன்னரையும் அவர் தந்தையயும் "நம் தலைவர்கள் தேசத்தின்,மனித இனத்தின் சூரியன்கள் " என்கிறது.அவர்கள் வரலாற்றை அரசே வெளியிட்டுள்ளது.படித்தால் ஏதோ கடவுள்களின் அவதார கதை போல் உள்ளது.



வட கொரியரின் கடவுள்:


வடகொரியாவின் மிகப்பெரும் செல்வந்தர் அதன் கடவுள்,செக்ரட்டரி,மன்னரான கிம் ஜாங்க் 2 தான்.ஹாலிவுட் படங்கள் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.1970'ல் 15,000 படங்களை தன் கலெக்ஷனில் வைத்திருந்தாராம்.போர்னோகிராபி படங்களும் மிகவும் பிடிக்குமாம்.சூப்பரான அந்தப்புரங்களும் அதில் ஏராளமான "தோழியரையும்" வைத்திருக்கிறாராம்.


ஜோசியத்தில் இவருக்கு ஏக நம்பிக்கை.இவர் ஆட்சிக்கு ஒன்றாக பிறந்த மூவரால் ஆபத்து வரும் என நம்பி கொரியாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் அனைத்தையும் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் பிரித்து அனாதை விடுதிகளில் கடும் கண்காணிப்பில் வளர்ப்பதாக ஹெரால்ட் சன் பத்திரிக்கை தெரிவிக்கிறது


எல்லைகள் அற்ற நிருபர்கள் குழு(Reporters without borders) தெரிவுக்கும் தகவல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கின்றன.




--
செல்வன்

www.holyox.tk

“We've begun to raise daughters more like sons... but few have the courage to raise our sons more like our daughters.” - Gloria Steinem

--~--~---------~--~----~------------~-------~--~----~
This message is part of the topic "வட கொரியா என்னும் நரகக்குழி" in the Google Group "தமிழமுதம்"
for which you requested email updates.
To stop receiving email updates for this topic, please visit the topic
at http://groups.google.com/group/tamizhamutham/t/72ba3bad7d0c400b
-~----------~----~----~----~------~----~------~--~---

K.R.அதியமான் said...

போலந்த நாடும், ஸ்டாலினும்

போலந்த நாடு ரஸ்ஸியாவிற்க்கும், ஜெர்மனிக்கும் இடையே
உள்ள ஒரு பெரிய நாடு. பல நூற்றாண்டுகளாக சுதந்திரம்
காணாமல், பல ஏகாதிபத்தியங்களினால அடிமைப்ப்டுத்தப்பட்டு,
கொடும் இன்னல்களை அனுபவித்த நாடு அது.

அதன் கொடுமையான வரலாற்றை சற்று பார்ப்போம்..
இரண்டாம் உலக்போரின் போது, நாசி ஜெர்மனியும், ஸ்டாலினிய ரஸ்ஸியாவும்
போலந்த் மீது படை எடுத்து, அதை "பகிர்ந்து" கொண்டன. நாசிக்கள் அவர்கள்
பகுதியில், கொடுரமான யூத இன அழிப்பை மேற்கொண்டனர். ரஸ்ஸியர்கள், அவர்கள்
பகுதியில் செம்புரட்சி அரசை மேலிருந்து திணித்தனர். மக்களாட்சி
என்ற வார்த்தையே அங்கு இல்லை.

1945இல் இரண்டாம் உலகப்போர் முடிந்து, நாசி ஜெர்மனி
தோற்க்கடிக்கப்பட்டது. ர‌ஸ்ஸியாவிற்ற்கு மேற்கே இருந்த‌ அய்ரோப்பிய‌
நாடுக‌ளை 'விடுவித்த‌' சோவிய‌த் ர‌ஸ்ஸிய‌, அந்த‌ கிழ‌க்கு அய்ரோப்பிய‌
நாடுக‌ள் அனைத்திலும் 'புர‌ட்சி' அர‌சுக‌ளை நிறுவிய‌து. அனைத்து
இட‌ங்க‌ளிலும் முறை தான்.

போரின் போது மிக‌ கொடுமையான‌ ஒரு பெரும் ப‌டுகொலைக‌ளை
ஸ்டாலினிய‌ ர‌ஸ்ஸியா நிக‌ழ்த்திய‌து. போல‌ந்த‌ ராணுவ‌ அதிகார்க‌ள்
சுமார் 22,000 பேர்க‌ள், போர் கைதிக‌ளாக‌ ர‌ஸ்ஸிய‌ர்க‌ள் வ‌ச‌ம்
இருந்த‌ன‌ர். ரஸ்ஸியர்கள், அவ‌ர்க‌ள் அனைவ‌ரையும், ஈவிர‌க்க‌மில்லாம‌ல்,
க‌ட்யான் என்ற‌ இட‌த்தில் வைத்து சுட்டுத்த‌ள்ளினார்க‌ள். கார‌ண‌ம்
அவ‌ர்க‌ள் 'பூர்ஸ்வா' எண்ண‌ம் கொண்ட‌ அதிகாரிக‌ளாம். போரில் பிடிப்ப‌ட்ட‌
ராணுவ‌ அதிகாரிக‌ளை கொல்வ‌தை இப்ப‌டி நியாய‌ப்படுத்துகிறார்க‌ள். ஆனால்
ப‌ல‌ ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ நிக‌ழ்வை ரஸ்ஸிய கம்யூனிஸ்டுகள் மூடி
ம‌றைத்த‌ன‌ர். இன்று அந்த‌ இட‌த்தில் ஒரு மாபெரும் நினைவுச்சின்ன‌ம்
அமைந்துள்ள‌து. போலந்த் மக்கள் இந்த கொடூரத்தை மற்க்க மாட்டர்கள்.
ஸ்டாலின் போல‌ந் நாட்டில் ந‌ட‌த்திய‌ கொடூர‌த்திற்க்கு இது ஒரு முன்
மாதிரிதான்..

Stalin's order for the KATYN FOREST MASSACRE
http://www.geocities.com/athens/troy/1791/beria.html

Stalin's ethnic cleansing of Eastern Poland
http://www.stalinsethniccleansing.com/

1944இல் ஜெர்மன் நாசிகளின் பிடியில் இருந்த‌ போலந்தின் தலைநகரான
வார்ஸாவில், ஒரு பெரும் போராட்ட‌ம் வெடித்த‌து. நாசிக‌ளை த‌ம்
ந‌க‌ரைவிட்டு விர‌ட்ட‌ வார்ஸா ம‌க்க‌ள் த‌ன்னிச்சியாக‌
கிள‌ர்ந்தெழுந்த‌ன‌ர்.

சோவியத் ரஸ்ஸியாவின் படைகள் ஜெர்மனியா ராணுவத்தை முறியடித்து மேற்க்கு
நோக்கி முன்னேறு, போலந்து பகுதிகளில் நுழைந்து வார்ஸா நகரை நெருங்கியது.
விர்ஸுலா நதியின் கிழக்கு கரை வரை முன்னேறிய பெரும் ரஸ்ஸிய ராணுவம்,
நதியின் மேற்க்கு கரையில் இருந்த வார்ஸா நகரின் போராளிகளுக்கு உதவ
மறுத்து, கிழக்கு கரையிலேயே பல மாதங்கள் சும்மா பார்த்து கொண்டு
இருந்தது.

ரஸ்ஸியர்கள் உதவிக்கு வருவார்கள் என்று 'நம்பி' கிளர்ச்சியை துவக்கிய
வார்ஸா மக்கள், கொடூரமான‌ ஜெர்மானிய தாக்குதலுக்கு உள்ளானார்கள். சுமார்
16,000 போராளிகளும், சுமார் 1,50,000 பொது மக்களும் கொல்ல்பட்டனர்.
அக்டோபர் 2ஆம் தேதி வார்ஸா மக்கள் சரணடைந்தனர். அதை பார்துக்கொண்டு ஒரு
பெரும்
ரஸ்ஸிய படை சும்மா இருந்தது. காரணம் ஸ்டாலின் ஆணை. கிளர்ச்சியாளர்கள்
கம்யூனிஸ்டுகள் அல்ல்வாம்.

போலந்த மக்கள் இதை மற்க்க மாட்டர்கள்

Warsaw Uprising 1944
http://www.warsawuprising.com/

geethappriyan said...

அருமை நண்பர் அதியமான் அவர்களே
இவ்வளவு நாட்கள் எப்படி நான் பார்க்காமல் போனேன் ?ஒவ்வொன்றும் தங்க கிரீடத்தில் வைர கற்கள்.நன்றிகள் பல உரித்தாகுக .நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்,விருப்பங்கள்.
உங்கள் பதிவுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன,இன்றைய சமுதாய சூழலுக்கு ஏற்ற சவுக்கடிகள்,நீங்கள் தொடர்ந்து சமூக அவலங்களை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்,உங்கள் பேனா தொடர்ந்து எழுதட்டும்,வந்தே மாதரம்
கார்த்திகேயன்

Anonymous said...

கம்யூனிசம் தப்பல்ல. தப்பானவர்களின் கைகளில் போய்ச் சேர்வது தான் தப்பு.