பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

சுதந்திர‌ம் அடைவ‌த‌ற்க்கு முன் இந்திய‌வில் பொது துறை நிறுவ‌ன‌ங்க‌ளே இல்லை.
ரயில் போக்குவ‌ர‌த்து, மின் வின‌யோகம், வங்கி, இன்ஸுரனஸ்
கூட‌ த‌னியார் வ‌ச‌ம்தான். அப்போது ஊழல், திருட்டு இந்த
அளவு இல்லை, இது போன்ற நிறுவனங்களில் கூட.
நன்றாகவே நடந்தன.

நேரு, சோசியலிச பாணி கொள்கைகளை முன்மொழிந்து ஐந்தாண்டு திட்டங்கள் மூலம்
பொது துறை நிறுவனங்கள் உருவாக வழி வகுத்தார். 50களில் பெரும் செலவில் பல
துறைகளில் அவை உருவாக்கப்பட்டன. அரசி முதலீடு
செய்ய கடன் வாங்கி /நோட்டடிதே செயல் பட்டது. மேலும் வரிவிகுதங்களை மிக
மைக அதிகமக்கியது. அதன் மூலம்
பண வீக்கம் மிக அதிகமாகி விலைவாசி விசம் போல் உயர்த்தொடங்கியது.

சரி, அத்தனை செலவு செய்து உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின்
வரல்லறை இன்கு பார்ப்போம்.

இரும்பு உருக்காலைக‌ள் அப்போது டாடா நிறுவ‌ன‌ம் ம‌ட்டும் ந‌ட‌த்திய‌து.
அமெரிக்க‌ க‌ம்பெனிக‌ள் 50க‌ளில் இந்தியாவில் புதிய‌ உருக்காலைக‌ள்
துவ‌ங்க‌ ஆர்வ‌ம் காட்டின‌. அந்நிய‌ முத‌லீடுக‌ள் அனும‌திக்க‌ப‌ட‌வே
இல்லை. இந்திய‌ர் தொழில் முனைவோர்க‌ளும் புதிதாக் ஆர‌ம்பிக்க
அனும‌திக்க‌ப‌ட‌வில்லை. (இன்ரு நேர் எதிர்). அர‌சே க‌ன‌ர‌க‌ தொழில்க‌ளை
துவ‌க்க‌ முற்ப‌ட்ட‌து, மிக‌ அதிக‌ செல‌வில்.

துர்காபூர், ரூர்க்கி, பிலாய் போன்ற‌ இட‌ங்க‌ளில் ர‌ஸ்ஸிய‌ உத‌வியுட‌ன்
இரும்பு உருக்கு ஆலைக‌ள் ஆர‌மிப்க்க‌ ப‌ட்ட‌ன‌. ஆர‌ம்ப‌ம் முத‌லே க‌டும்
சிக்க‌ல்க‌ள். ந‌ஸ்ட‌ம். ப‌ற்றாக்குறை.
அங்கு வேலை பார்ப‌வ‌ர்க‌ளும் அர‌சு ஊழிய‌ர்க‌ளாக‌ அனாத‌ல் அவ‌ர்க‌ளிட‌ம்
நேர்மையான‌ வேலை செய்யும் ம‌னோபாவ‌ம்
மிக‌ குறைவாக‌ இருந்த‌து.

மிக் முக்கிய‌மாக‌, நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சு உய‌ர் அதிகாரிக‌ளால்
தான் மேலாண்மை செய்ய‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர்க‌ள் ம‌த்திய‌ அமைச்ச‌ர்க‌ளுக்கு
கீழ் இருந்த‌ன‌ர். அதாவ‌து ஆளும்
காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர்க‌ள், அமைச்ச‌ர்க‌ள், அரசு உயர் அதிகாரிக‌ள் :
இவ‌ர்க‌ளின் முழு க‌ட்டுப்பாட்டில் இய‌ங்கிய‌து. எத்த‌னை தூர‌ம் நேர்மை,
ந‌டுவு நிலைமை, professionalisim,
சிக்க‌ன‌ம், இருந்திருக்கும் என்று க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள்.

போட்டிகள் கிடையாது, லாபம் எனப்து கெட்ட வார்த்தை.
இறக்குமதி மூலமும் போட்டிகள் கிடையாது. ஏனேனில் இறக்குமதி
செய்ய அன்னியல் செலவாணியே இல்லை. அரசிக்கு தட்டுபாடு.
இறக்குமதி லைசென்ஸ்கள் அளிப்பதில் கடும் ஊழல், அரசியல்
மற்றும் கள்ள சந்தை. இப்போது புரிந்து கொள்ள மிகவும்
கஸ்டம்.

அதாவது ஒரு நிறுவனம் ஒரு கனரக எந்திரங்கள் அல்லது உதிரி
பாகங்கள் வெளினாட்டில் இருந்து இன்று சர்வ சாதாரணமாக
இறக்குமதி செய்ய முடிகிறது. அன்று பகல் கனவு.
சுங்க வரிகளும் மிக மிக மிக அதிகம். 200 சதவீதம் எல்லாம்
இருந்தன.

அதனால் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் உறபத்தியை
மட்டுமே பல துறைகளில் நம்ப வேண்டிய நிலை.
இருந்த சில தனியார்களும் உற்பத்தியை பெருக்க தடை,
கடும் கட்டுப்பாடுகள்.

இரும்பு, சிமென்ட், உரம், கம்ரெஸ்ரர்கள், என்று பல முக்கிய‌
பொருட்க‌ளில் அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளே ஏக‌ போக‌மாக‌ திக‌ழ்ந்த‌ன‌.

ஏர் இந்தியா பற்றி பார்ப்போம். 1930களில் சிறிய அளவில் ஜே.ஆர்.டி டாடா
அவர்களால் கடும் முயற்சிகளுக்கு பிறகு ஆரபிக்கப்பட்டது. அவரின் திறமையான‌
மேலாண்மையினல் படிப்படியாக வளர்ந்தது. 1950களில் சோசியலிச பாணி அரசால்
'தேசியமயமாக்க' பட்டது. அதாவது ஜே.ஆர்.டி அவர்களிடம் இருந்து
பிடுங்கப்பட்டது.திருடப்பட்டது என்றும் சொல்லாம். ஆனால் செய்தது மக்கள்
அரசாச்சே.

அதன் பின் ஆரபித்தது சீரழிவு. ஒரு விமான போக்குவரத்து துறை இரு மத்திய
அமைச்சரின் கீழ் உருவானது. (இப்படித்தான் தேவை இல்லா புதிய அமைச்சர்
பதவிகள், அதிகாரி பதவிகள், பல் கோடி வெட்டிச் செலவுகள் ஆண்டு தோறும் ;
அதை விட கொடுமை இவர்கள் மிரட்டி வாங்கும் லஞ்சம், கட்டுபாடுகள் ; வேறு
பல‌ நாடுகளில் இது போன்ற அமைச்சர்கள் கிடையாது. தேவையும் இல்லை) விமானம்
வாங்குவதில் இருந்து, உதிரிப்பாகங்கள் வாங்குவது வரை, பராமரிப்பு
காண்ட்ராக்ட், ஆள் எடுப்பது போன்ற அனைத்து 'துறை' களிலும் லஞ்சம், ஊழல்,
கொள்ளை. இன்றும் தொடர்கிறது. பல வருடங்கள் நஸ்டம். மேலும் நஸ்டம்.
இந்த நஸ்டங்களை ஈடு செய்ய மத்திய அரசு, வரி பணத்தை வாரி இறைக்கும் கொடுமை.

சரியான நேரத்தில் பயணம் ஆரம்பிப்பது அரிது. பயணிகள் நலம் பற்றி கண்டு
கொள்ளாத திமிர் பிடித்த ஊழியர்கள். (அவர்கள் தாம் அரசு ஊழியர்களயிற்றே.
என்ன தவறு செய்தாலும் வேலை போகாதே). இதர தனியார் / வெளினாட்டு
விமானங்களில் பயணித்தவர்களுக்கு இந்த வித்தியாசம் உடனே தெரியும்.

நன்கு, திறமையாக நிர்வாகிக்கப்பட்ட ஒரு நிறுவனம், அரசுடைமயாக்கப் பட்டதன்
விளைவு எத்தனை கொடுமையான சீரழிவு. இது போல் பல நிறுவனங்கள்...

இந்தியன் வங்கியின் (Inidan Bank) கதை :

சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் செட்டியார் ஜாதியனரால்
துவக்கப்பட்ட வங்கிகள் பல : இந்தியன் வங்கி, கரூர் வைசியா வங்கி, லக்ஷ்மி
விலாஸ் வங்கி, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி போன்றவை.

1969இல் 100 கோடி ரூபாய் மதிப்பிற்க்க்கு மேற்பட்ட தனியார் வங்கிகளை
இந்திரா காந்தி 'தேசியமயமக்கினார்' ; ஓட்டு வங்கிகளை பெருக்கவும், தன்னை
ஒரு ஏழை பங்காளன் / உண்மையன சோசியசிஸ்ட் என்று காட்டிக்கொள்ளவும்,
காங்கிரஸில் நடந்த உட்பூசலில் தன்னை மக்கள் செல்வாக்குடன்
வலுவாக்கிக்கவும் இதை கள்ளத்தனமாக அமலாக்கினார். கரூர் வைசியா வங்கி,
லக்ஷ்மி விலாஸ் வங்கி போன்றவை தப்பின ; ஆனால் இந்தியன் வங்கி மாட்டியது.

1969 வரை இந்தியன் வங்கி நேர்மையாகவும், திறம்படவும் நிர்வாகம் செய்யப்
பட்டது. நஸ்டம் மற்றும் வராக்கடன் மிக குறைவு. அரசுடமையக்கப்பட்ட பின்
ஆரமத்தது சனி. நிதி அமைச்சரகத்திற்க்கு கீழ் நேரடி கட்டுப்பாட்டில்
வந்தது. வங்கி உயர் அதிகாரிகள் 'முன்னேற' அரசியல்வாதிகள் மற்றும் அரசு
உயர் அதிகாரிகளின் 'தயவு' தேவை பட்டது.

கடன் வழங்க‌ 'கமிஸன்' வாங்கும் ஊழல் பெரிய அளாவில் ஆரம்பித்தது.
த‌னியார்வ‌ச‌ம் இருக்கும் போதும் ஊழ‌ல் சிறிய‌ அளவில் இருந்திருக்கும்
தான். ஆனால் நிர்வாக‌ம் உட‌னுக்குட‌ன் அவ‌ற்றை விழிப்புண‌ர்வுட‌ன்
க‌ண்கானித்து உட‌ன‌டியாக‌ த‌குந்த‌ மாற்று ந‌ட‌வ‌டிக்கை ம‌ற்றும்
தண்ட‌னைக‌ள் க‌ன்டிப்புட‌ன் செய்வ‌ர். ப‌ங்குதார்க‌ளுக்கு ப‌தில்
சொல்ல‌வேண்டிய‌ பொறுப்பு எப்போதுமே தனியா‌ர் நிர்வாகிக‌ளுக்கு மிக‌ மிக‌
அதிக‌ம். ஆனால் அர‌சுடைமையாக்க‌ப் ப‌ட்ட‌ பிற‌கு அனைத்து ப‌ங்குக‌ளும்
அர‌சிட‌ம்தான். அர‌சு என்றால் அதிகாரிக‌ளும், அமைச்ச‌ர்க‌ளும் தான்.
யாருக்கும் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ 'பொறுப்பு' இல்லையே. ந‌ஸ்ட‌ம்
ஆனாலும், சீர‌ழிந்தாலும் பொதுப்ப‌ண‌ம் தானே என்ற‌ அல‌ட்சிய‌ம் ம‌ற்றும்
பொறுப்பின்மை அனைத்து அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளுக்குமே பொது.

90க‌ளில் நிலைமை ப‌டுமோச‌மான‌து. வ‌ங்கிச் சேர்ம‌னாக‌ கோப‌ல‌க்கிருஷ்ண‌ன்
நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். ப‌ல‌ருக்கும் ச‌க‌ட்டுமேனிக்கு வாரி வ‌ழ‌ங்கினார்.
மூப்பானாரின் சிபாரிசுக‌ள் அதிக‌ம். ப‌ல‌ அயோக்கிய‌ர்க‌ளுக்கு
அநியாயமா‌க‌, அனைத்து விதி முறைக‌ளையும் மீறி க‌ட‌ன்க‌ள்
வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இறுதியில் வ‌ங்கி திவால் நிலைமையை அடைந்த‌து.
கோபாலக்கிருஷ்ணன் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அர‌சு வேறு வ‌ழியில்லாம‌ல் 2000 கோடி வ‌ரை புதிய‌ முத‌லீடுக‌ளை
வ‌ங்கிக்குள் செலுத்தி வ‌ங்கியின் நிலைமையை ச‌ரி செய்த‌து. இந்த‌ 2000
கோடிக‌ள் ம‌க்க‌ளின் வரிப்ப‌ணாம். ப‌ல‌ முக்கிய‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளுக்கு
செலவு செய்ய வேண்டிய‌ ம‌க்க‌ள் ப‌ண‌ம் இப்ப‌டி 'கொள்ளை' போன‌து.

ஆனால் த‌னியார் வ‌ச‌மே தொட‌ரும் க‌ரூர் வைசியா வ‌ங்கி போன்றவை ந‌ன்கு
வ‌ள‌ர்ந்த‌ன‌. இந்திய‌ன் வ‌ங்கிக்கு விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே அர்.பி.அய்
விதிமுறைக‌ள், க‌ட்டுப்பாடுக‌ள் தாம் அவைக்கும். ஆனால் திற‌ம்ப‌ட‌,
நேர்மையான்‌ நிர்வாக‌ம் ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சியை அளிக்கின்ற‌து இன்ற‌ளவும்.
அங்கும் வ‌ராக்க‌ட‌ன்க‌ள், ந‌ஸ்ட‌ம் அவ்வ‌போது ஏற்ப‌டும். ஆனால்
திற‌மையாக் ச‌மாளிக்க‌ ப‌டும்.

60,000 கோடிக‌ளுக்கு மேல் அர்சு வங்கிக‌ளில் வ‌ராக்க‌ட‌ன். அவ‌ற்றை
வாங்கிய‌ தொழில‌திப‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டும் என்று
அனைவ‌ரும் (முக்கிய‌மாக‌ க‌ம்யூனிஸ்டுக‌ள்) வ‌லியுறுத்துவ‌து ச‌ரிதான்.
ஆனால் அவை த‌னியார் வ‌ங்கிக‌ளில் ஏன் அந்த‌ அளவு வ‌ராக்க்ட‌ன் ம‌ற்றும்
ஊழ‌ல் இல்லை என்ப‌தை விள‌க்க‌ வேண்டும்.

க்ளோப‌ல் ட‌ர‌ஸ்ட் வ‌ங்கி என்னும் புதிய‌ த‌னிய‌ர் வ‌ங்கி ப‌ல‌
த‌வ‌றுக‌ள் புரிந்து திவாலான‌து உண்மைதான். ஆனால் அதை ஈடு செய்ய‌ அர‌சின்
பொது ப‌ண‌ம் செல‌விட‌ப்ப்ட‌வில்லை. அந்த‌ வ‌ங்கி வேறு ஒரு ப‌ல‌மான‌
வ‌ங்கியுட‌ன் அய்க்கியப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் ப‌ங்குதார்க‌ள்தான்
ந‌ஸ்ட‌த்தை ஏற்ற‌ன‌ர். அர‌சு அல்ல். இது தான் முக்கிய‌ வித்தியாச‌ம்.

ஜென்ரல் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களான் GIC : National, Oriental, United
India, New India Assurance ; நான்கும் 50களில் தேசியமயமாக்கப்பட்டன.
அத‌ன் பிற‌கு அதில் ந‌ட‌க்கும் ஊழ‌ல் ம‌ற்றும் கூட்டுக் கொள்ளைக‌ள்
ப‌ற்றி த‌னியாக‌ க‌ட்டுரை எழுத‌லாம். வாகன‌ இன்ஸுர‌ன்ஸ், அதாவ‌து வாக‌ன‌
விப‌த்து காப்பீடுக‌ளில் ந‌ட‌ப்ப‌து ஒரு கூட்டுக்கொள்ளை. காப்பீட்டு
நிறுவ‌ன‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர், நீதிப‌தி, போலிஸார்,
விப‌த்தில் ப‌லியான‌ / அடிப‌ட்ட‌வ‌ரின் உற‌வின‌ர் ம‌ற்றும் அவ‌ரின்
வ‌ழ‌க்க‌றிஞ‌ர் அனைவ‌ரும் 'சேர்ந்து' காப்பீட்டு நிறுவ‌ன‌த்தை
கொள்ளை/சுரண்ட‌ல் செய்கின்ற‌ன‌ர். காப்பீட்டு நிறுவ‌ன‌ அதிகாரிக‌ளும்
வ‌ழ‌க்கு ப‌ற்றி க‌ண்டு கொள்ள மாட்ட‌ர்க‌ள். போலி வ‌ழ‌க்குக‌ள், போலி
'முத‌ல் த‌க‌வ‌ல் அறிக்கைக‌ள்' போலி ஆவ‌ண‌ங்க‌ள் என்று ஒரு முறையே
உருவாகியுள்ளது. ச‌மீப‌த்தில் நாம‌க்க‌ல், க‌ரூர் ப‌குதி தேசிய‌
இன்ஸுர‌ன்ஸ் நிறுவ‌ன‌ ஊழ‌ல்க‌ளை விசாரிக்க‌ சி.பி.ஐ வ‌ந்த‌து ஞாப‌க‌ம்
இருக்க‌லாம்.

த‌னியார் இன்ஸுர‌ன்ச் நிறுவ‌ன‌ங்க‌ள் வாக‌ன‌ இழ‌ப்பீடு விசிய‌ங்க‌ளில்
ஏமாறுவ‌தில்லை. நிர்வாகிக‌ள் ப‌ங்குதார்க‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌
க‌ட்டாய‌ம் ; அத‌ன் வ‌ழ‌க்கறிஞ‌ர்கள், தோற்க்கும் வ‌ழ‌க்குக‌ளுக்கு
த‌குந்த‌ ப‌தில் சொல்ல‌ வேண்டும். இதெல்லாம் அர‌சு நிறுவ‌ன‌ங‌க‌ளில்
கிடையாது. அத‌னால் தான் பிரிமிய‌த் தொகை அதிக‌மாக்க‌ வேண்டிய‌ நிலை.
சுர‌ண்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ணத்தை வாடிக்கையாளார்க‌ளிட‌ம் இருந்து வ‌சூல் செய்து
ச‌ரிக‌ட்டும் அவல‌ம்.

நிலகரி சுரங்கங்கள் சுதந்திரத்திற்க்கு முன் தனியார் வசம் தான் இருந்தன.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, மத்திய அமைச்சர் மோகன்
குமாரமங்கலமின் வழிகாட்டுதலில், அவரின் கீழ் பணி புரிந்த ஒரு உயர்
அதிகாரி தேசியமயமாக்கலை வழினடத்தினார். 25 ஆண்டுகள் கழித்து அந்த அதிகாரி
அதற்க்காக மிகவும் வருத்தப்பட்டு, நொந்து போய் எழுதிதியிருந்தார். எந்த
நோக்கத்திற்க்காக நிலக்கரி சுரங்கங்கள் அரசுடைமையாக்கப்பட்ட‌னவோ,
அதற்க்கு நேர் எதிரான விளைவுகளே நடந்தன. நிலக்கரி மாஃபியா என்னும்
கிரிமினல் குழுக்கள் பீகார் பகுதிகளில் புதிதாக தோன்றி இன்று
கான்ட்ராக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மிரட்டல், பணம் பறிப்பு,
கடத்தல் மற்றும் ஊழல் அதிகாரிகள்/அமைச்சர்களோடு 'கூட்டு சேர்ந்து' கொள்ளை
போன்ற கொடுமைகளில் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றன. அவர்களாஇ மீறி அங்கு
யாரும் நிலகாரியை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல முடியாது. மேலும் ஒரு
புத்தகமே இதை பற்றி எழுதலாம்...

http://www.india-seminar.com/2001/502/502%20suhel%

////Corporate corruption in India can easily be classified into two parts:
corruption by PSUs (public sector units) and that by the private
sector. The analysis in many parts will be common, but suffice to say
that it is the PSUs which even today practise it with aplomb. Every
PSU gives way when it comes to accountability. While institutions such
as the Unit Trust of India have come in for heavy criticism because of
the parameters they have used to disburse loans, the picture is no
different in most PSUs which remain the fountainhead of all white
collar corruption.

No amount of vigilance activities or the fulminations of the CVC have
been able to curb their wanton expenditure. From private visits in
some steel plant's planes to quota disbursals, especially in the Coal
Indias of the world, we have seen it all. It is the PSU that still
supports the errant ways of bureaucrats and ministers in its
supervising ministries which is why corruption cannot be snuffed out –
it travels right to the top. India is the only country which sees
battles within the Prime Minister's Office to appoint chairmen of
nationalized banks or functionaries to some important financial
institutions.

Corruption at the PSU is manifested in several ways; it ranges from
the empanelment of suppliers to the selection of employees. In fact,
some of the biggest scams are in the area of recruitment for these
PSUs. The tack that most PSUs employ is to create artificial
employment, which in the ultimate analysis is harmful to shareholder
interest. However, since the largest (if not the only) shareholder in
almost all these PSUs is the government, accountability is the least
important of issues! The other facet of corporate corruption is what I
call the 'constituency nurturing' syndrome. A careful observation will
show that many ministers make it a point to extract all they can in
the form of cash or kind in order to benefit their constituency. Now
if this isn't corruption, then what is?

Would this happen if things were transparent? It is galling that
despite severe strictures, even from the Supreme Court in many
instances, we see flagrant violations in appointments to these
high-powered posts. We have put in place a system which breeds
corruption at all levels: whether it is the lowly excise inspector to
the Chairman of the Customs Board (who was recently arrested),
corruption has permeated every aspect of Indian existence and it is
not getting any better! ////

கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)

பொருளாதார‌ ஏற்றதாழ்வுக‌ளை ச‌ரி செய்வ‌தே
நோக்க‌மாக‌ கொண்ட‌ க‌ம்யூனிச‌ சித்தாந்த‌ம், அத‌ற்க்கு
விலையாக‌ அடிப்ப‌டை ஜ‌ன‌னாய‌க‌ உரிமைக‌ளை
ப‌லியாக் கேட்கிற‌து என்ற‌ விசிய‌ம் ப‌ல‌ருக்கும்
தெரிவ‌தில்லை.

அதாவ‌து க‌ருத்துச் சுத‌ந்திர‌ம், பேச்சுரிமை, ப‌த்திரிக்கை
சுத்ந்திர‌ம், வெளிப‌டையான‌, நியாமான‌ நீதி ம‌ன்ற‌ங்க‌ள், விசாரைனை
இன்றி, அப்பீல் இன்றி யாரையும்
சிறைப‌டுத்த‌ முடியாத‌ ச‌ட்ட‌ உரிமைக‌ள், ம‌த‌
உரிமைக‌ள், சொத்துரிமை போன்ற‌ அனைத்து
அடிப‌டை உரிமைக‌ளும் புர‌ட்சி அர‌சு ர‌த்து
செய்யும் என்ப‌தே வ‌ர‌லாறு. All fundamental rights,
including right to life are suspended and suppresed.

தொழிற்ச‌ங்க‌ள், ம‌ற்றும் ஸ்ரைக்குக‌ள் க‌ம்யூனிச‌
நாடுக‌ளில் அனும‌திக்க‌ ப‌ட‌ மாட்டா. இந்த‌
bloggerஇல் ந‌ட‌க்கும் சுந்திர‌மான‌ விவாத‌ங்க‌ள்,
மாற்றுக்க‌ருத்துக்க‌ளை அனும‌திப்ப‌து போன்ற‌வை
சிறிதும் இருக்காது.

வ‌ர்க‌ எதிரி, எதிர் புர‌ட்சியாள‌ர், அல்ல‌து ம‌க்க‌ளின்
எதிரி என்று யாரை வேண்டுமானாலும் முத்திரை
குத்தி எந்த‌ நேர‌த்திலும் ரகசியமாக கைது
செய்ய‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப‌ட‌லாம் ; வ‌தை
முகாம்க‌ளில் அடைக்க‌ ப‌ட‌லாம். கொல்ல‌ப்ப‌ட‌லாம்.
விசாரனை ம‌ற்றும் வெளிப‌டையான நீதி ம‌ன்ற‌
வ‌ழ‌க்குக‌ள் கிடையாது. ஹிட்ட‌ல‌ரின் நாசிப்ப‌டைக‌ள்,
யூத‌ர்க‌ளையும் பிற‌ ம‌க்க‌ளையும் எப்ப‌டி வ‌தை
முகாம்க‌ளில் அடைத்து கொன்ற‌ன‌ரோ அதே போல்
ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் ர‌ஸ்ஸியாவிலும், சைன‌விலும்
கொல்ல‌ப‌ட்ட‌ன‌ர். பார்க்க‌ :

http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part3

கொடுங்கோல‌ன் ம‌வோவின் ஆட்சியில் திட்ட‌மிட்டு
கொல்ல‌ப‌ட்ட‌ ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் ப‌ற்றி அறிய‌ :

http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part7

சோவிய‌த் யூனிய‌னை ஸ்டாலின் ஆண்ட‌ கால‌த்தில்,
1930க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் உக்ரேன் பிர‌தேச‌த்தில்
செய‌ற்கையாக‌, திட்ட‌மிட்டு உருவாக்க‌ப் ப‌ட்ட‌
பெரும் ப‌ஞ்ச‌த்தில் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் மாண்ட‌ன‌ர்.
அதை இன்றும் உக்ரேன் நாட்டின் பெரும்
ஹோல்ட்ம‌ர் என்று அழைத்து, அதை அங்கு
ம‌றுப்ப‌து குற்ற‌ம் என்று அறிவிக்க‌ப‌ட்டுள்ள‌து.

அதை ப‌ற்றி அறிய‌ :

http://en.wikipedia.org/wiki/Holodomor

விக்கிபீடிய‌வில் விவ‌ரிக்க‌ப‌ட்டுள்ள‌தாலேயெ அந்த‌
கொடுமையான‌ விவ‌ர‌ங்க‌ள‌ அன‌த்தும் பொய்
என்று ஒற்றை வ‌ரியில் அதை சில‌ 'மேதைக‌ள்'
ம‌றுக்க‌க் கூடும். விஞ்ஞான ரீதியாக‌ வ‌ர‌லாறை க‌ற்ப‌தாக
வேறு அவ‌ர்க‌ள் க‌தைப்ப‌ர் !! இந்த‌ விவ‌ர‌ங்க‌ளை
உல‌கின் உள்ள‌ அனைத்து ஆய்வ‌ள‌ர்க‌ளும் ஏற்றுக்க் கொண்டுள்ள‌ன‌ர்.
சந்தேகம் இருந்தால் உக்ரேன்
நாட்டில் விசாரிக்க‌வும்.

புர‌ட்சி ம‌ற்றும் க‌ம்யூனிச‌ம் ப‌ற்றி பேசுவோர், த‌ங்க‌ள்
அடிப்ப‌டை உரிமைக‌ளை இழ‌க்க‌ த‌யாரா ?

பொருளாதார‌ ஏற்ற த‌ழ்வுக‌ளை ச‌ந்தை பொருளாதார‌ம் மூல‌மாக‌வே அனைத்து
முன்னேறிய‌ நாடுகளும்
அடைந்த‌ன‌. முக்கிய‌மாக‌ இர‌ண்டாம் உல‌க்போரில்
க‌டும் அழிவை ச‌ந்தித்த‌ ஜ‌ப்பான், 35 ஆண்டுக‌ளில்
உல‌கின் இர‌ண்ட‌வ‌து ப‌ண‌க்கார‌ நாடாக‌ வ‌ள‌ர்ந்தது
ச‌ந்தை பொருளாதார‌த்தை பின் ப‌ற்றிதான்.

வ‌றுமை கொடுமைக‌ளை ஒழிக்க‌ க‌ம்யுனிச‌ம்
காட்டும் வ‌ழி வெறும் மாயை. வ‌றுமையும்
ஒழிய‌வில்லை, ப‌ல் கோடி ம‌க்க‌ளும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தே
வ‌ர‌லாறு. திரிபுவாதிக‌ளின் ச‌தி, சில‌ வ‌ர‌லாற்றுத்
த‌வ‌றுக‌ள் என்று ச‌ப்பை க‌ட்டுவ‌ர் இன்றைய‌
க‌ம்யூனிச்ட்டுக‌ள். உண்மைக‌ளை உண‌ராத‌வ‌ர்க‌ளின்
பேச்சு அது.

This post is addresed to all those who have 'vague' Marxist
beliefs with little knowldge about the terrible human rights
violations that is inseparable from communist regimes.

Communism is incompatible with basic democracy and
human rights. Nor can communism solve the problems
it tries to address, as history proves.

"One who refuses histroy is condemned to repeat it."

உபரி மதிப்பு, சுரண்டல், வர்கப் போர், எகாதிபத்தியம்,
பூர்ஷ்வா போன்ற சில வார்த்தைகளை மட்டும்
வைத்துகொண்டு 100 வருடமாக அதையே அனைத்து சூழ்னிலைகளுக்கும்
திரும்பத்திரும்ப ஜல்லி அடிப்பர்....

உபரி மதிப்பு என்பது விஞ்ஞானபூர்வமாக மறுக்கபட்டு
வெகு நாளாச்சு. suprlus value of a worker (working with same
machineary and same hours) varies with nations, and other factors.
how ? and if there is no market for his output, there is no question of
surplus value.and what about the surplus value of the organiser /
motviator / boss ?

1960களில் இந்தியாவில் உணவு பஞ்சம், கடும்
விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம்.
அப்போது தாரளமயமாக்கல் இல்லை ; நேர் எதிராக‌
அரசு கட்டுபாடுகள், சோசியலிச பாணியி‌ல்..

அன்றும் காம்ரேடுகள் இதே பல்லவியை தான் பாடினர்.
இன்றும், என்றும் அதே தான்.

திரிபுவாதிக‌ள் என்று ஒரு க‌தை. திரிபுவாதிக‌ள‌
அனைத்து க‌ம்யூனிஸ்ட் நாடுக‌ளிலுமே எப்ப‌டி
தோன்றி, க‌ம்யூனிஸ‌த்தை அழித்த‌ன‌ராம் ? இதிலிருந்தே
புர‌ட்சி அர‌சு உல‌கெங்கிலும் சில‌ கால‌ங்க‌ளில்
திரிபுவாதிக‌ளிட‌ம் ம‌ட்டும் என்று புரிகிற‌தா ?
திரிபுவாதிக‌ள் ஏன், எப்ப‌டி தோன்றுகின்ற‌ன‌ர் ?
அவ‌ர்க‌ள் என்ன‌ அயோக்கிய‌ர்க‌ளா அல்ல‌து
மூட‌ர்க‌ளா ? ந‌டைமுறை வாழ்க்கை ம‌ற்றும்
ம‌னித‌ சுபாவ‌த்தை புரிந்து கொள்ள‌
முடியாத‌வ‌ர்க‌ள்தாம் திரிபுவாதிக‌ள் ஏன்
தோன்றுகின்ற‌ன‌ர் என்று புரியாம‌ல் த‌விப்ப‌ர்...

1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

அன்னிய செலவாணி கையிருப்பு பற்றி பலருக்கும் சரியான புரிதல்
இல்லை. ஏற்றுமது / ஈரக்குமதி மற்றும் உலக வர்தகம், பெரும்பாலும்
அமெரிக்க டாலர்களில்தான் பல காலமாக நடக்கிறது. டால்ர் தான்
உலகின் ரிசர்வ் கரன்சி இன்று.

ந‌ம‌து மொத்த இற‌க்குமதியின் டாலர் மதிப்பில், ந‌ம் ஏற்றும‌தியை
விட‌ மிக‌ மிக‌ அதிக‌ம். முக்கிய‌மாக‌ பெட்ரோலிய‌ப் பொருட்க்கள்,
கச்சா எண்ணை போன்ற‌வை‌க‌ளின் தேவைகள் மிக‌ அதிக‌ அளவில்
இற‌க்கும‌தியை ந‌ம்பி இருக்கிற‌து. இற‌க்கும‌தி செய்ய‌ டால‌ர்க‌ள்
ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும். ந‌ம‌து இந்திய‌ ரூபாயை பெரும்பான்மையான‌
நாடுக‌ள் ஏற்க்க‌ மாட்டார்க‌ள். (ப‌ழைய‌ சோவிய‌த் ர‌ஸ்ஸியா ம‌ட்டும்
விதி வில‌க்கு, பல காரண‌ங்களுக்காக‌).

டால‌ர் ப‌ற்றாக்குறையை ச‌மாளிக்க‌ மூன்று வ‌ழிக‌ள்தான் உள்ள‌ன‌ :

(1) ஏற்றும‌தியை மிக‌ அதிக‌ரித்த‌ல்
(2) அன்னிய முத்லீடுக‌ளை 'தாராள‌மாக‌' அனும‌தித்த‌ல்
(3) அய்.எம்.எஃப் வ‌ங்கியிட‌ம் டால‌ர் க‌ட‌ன் வாங்குதல்

'சோசிய‌லிச‌', 'சுதேசி' கொள்கைக‌ளாஇ 1947 முத‌ல் 1991 வ‌ரை இந்திய‌ அர‌சு
மேற்கொண்ட‌தால், முத‌ல் இர‌ண்டு வ‌ழிக‌ளும் சாத்திய‌மில்லாம‌ல் போன‌து.
சுத‌ந்திர‌ம் பெற்ற போது சுமார் 500 மில்லிய‌ன் ஸ்டெர்லிங் ப‌வுண்டுக‌ளை
ஆங்கிலேய‌ அர‌சு, நிக‌ர‌ கையிருப்பாக‌ விட்டுவிட்டுச் சென்ற‌து. ந‌ம‌து
ம‌ட‌த்த‌ன‌மான‌, 'மூட‌ப்ப‌ட்ட‌' பொருளாதார‌ கொள்கைக‌ளால், அந்த‌ இருப்பு
விரைவில் க‌ரைந்து, பிற‌கு அய்.எம்.எஃப் இட‌ம் வ‌ருட‌ந்தோரும் க‌ட‌ன்
வாங்கி இறக்கும‌திக‌ளுக்கான‌ டால‌ர்க‌ளை பெற்றோம்.(உலக வங்கி
கடன்கள் வேறு வகை ; அவை project specific and are not for dollar needs of govt.

இந்திய‌ ரூபாயின் ம‌திப்பு, செய‌ற்கையாக‌ டால‌ருட‌ன் ஒரு குறிப்பிட்ட‌
விகித‌த்தில் அர‌சால் நிர்ணிய‌க்க‌ப்ப‌ட்டு, அதுவே அனைத்து வ‌ர்த‌க‌ங்க‌ளுக்கும்,
பேர‌ங்கலுக்கும் அடிப்ப‌டையாக‌ கொள்ள‌ப்ப‌ட்ட‌து. ந‌ம‌து ப‌ற்றாகுறை
ப‌ட்ஜெட்டுக‌ளால் ப‌ண‌ வீக்க‌ம் மிக‌ மிக‌ அதிக‌மாகி, அர‌சின் மொத்த‌
க‌ட‌ன் மிக‌ அதிக‌மாகி, ரூபாயின் நிக‌ர‌ ம‌திப்பு ப‌டிப‌டியாக‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு
குறைந்த‌து. ஆனால் அர‌சு 'நிர்ணிய‌த்த‌' ரூபாய் (டால‌ர்) ம‌திப்பு,
ரூபாயின் உண்மையான‌ ச‌ந்தை ம‌திப்பை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்.

இத‌ன் மொத்த‌ விளைவு, க‌டும் டால‌ர் ப‌ற்றாக்குறை. இறக்கும‌தி செய்ய
லைசென்ஸ்க‌ள் 'வேண்டிய‌வ‌ர்க‌ளுக்கு' ம‌ட்டும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டது.
இற‌க்கும‌தி லைசென்ஸுகளை, அதிகாரிகள் மட்டும் அரசியல்வாதிகளின்
'புண்ணியத்தில்' அடைந்தவர்கள், கொளளாஇ லாபம் பார்த்தனர்.

கருப்பு பணாமும், கள்ளச் சந்தையும், கடத்தலும், டாலர்களை
கள்ளத்தனமாக பெற ஹவாலா முறைகளும் தோன்றின.
வேண்டிய அளவு இற‌க்கும‌தி செய்ய‌ முடியாம‌ல் போன‌தால்,
த‌ங்க‌ம், எலெக்ட்ரானிக் பொருட்க்க‌ள் போன்ற‌ 'ஆட‌ம்ப‌ர‌'
பொருட்கக்க‌ளை க‌ட‌த்த‌ர்கார்க‌ள் க‌ட‌த்தி விற்ற‌ன‌ர். க‌ட‌த்த‌ல்
ஒரு முக்கிய‌ உப‌ தொழிலாக‌ சுத‌ந்திர‌ இந்தியாவில் உருவெடுத்தது.

வ‌ருட‌ங்க‌ள் செல்ல‌ செல்ல‌, டால‌ர் ப‌ற்றாக்குறையின் அளாவு மிக‌
மிக‌ அதிக‌மாகி, அய்.எம்.எஃப் இட‌ம் டால‌ர் க‌ட‌ன் மேலும் மேலும்
வாங்கி, திவால் நிலைமைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டோம். 1990க‌ளில் ஒரு
ப‌ட்ஜெட் உரையில் ந‌ம் நிதிய‌மைச்ச‌ர் பா.சித‌ம்ப‌ர‌ம், தாயுமான‌வ‌ர்
பாசுர‌த்தை ச‌ற்றே மாற்றி, '...என் ப‌ணி க‌ட‌ன் செய்து கிடைப்ப‌தே !'
என்று பாடினார் !!!

1991இன் ஆர‌ம்ப‌த்தில், இர‌ண்டு வார காலத்திற்க்கு ம‌ட்டுமே
தேவையான‌ டால‌ர் இருப்பு இருந்த‌, மிக‌ மிக‌ அபாய‌க‌ர‌மான‌
நிலையில் ந‌ம‌து நிதிய‌மைச்ச‌ர், அர‌சின் த‌ங்க‌த்தை விமான‌த்தில்
ல‌ண்ட‌ன் அனுப்பி, அங்கு அட‌மான‌ம் வைத்து, இறக்கும‌திக்கு
தேவையான‌ டால‌ர்க‌ளை அவ‌ச‌ர‌மாக‌ புர‌ட்டினார். 1991இன்
ம‌த்தியில் தேர்த‌ல் ; ந‌ர‌சிம்ம‌ ராவ் பிர‌த‌மரானார். ம‌ன்மோக‌ன் சிங்
அவ‌ர்க‌ளை நிதிய‌மைச்ச‌ராக்கி, சுத‌ந்திர‌மாம‌ செய‌ல்ப‌ட‌
அனும‌தித்தார்.

ம‌ன்மோக‌ன் சிங் அவ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ 'தார‌ள‌ம‌ய‌மாக்க‌ல்'
கொள்கைக‌ளை அம‌ல்ப‌டுத்த‌ தொட‌ங்கினார். அன்னிய முத‌லீடுக‌ள்
ப‌ல‌ துறைக‌ளில் 'தார‌ள‌மாக‌' அனும‌திக்க‌ப‌ட்ட‌ன‌. ப‌ங்கு வ‌ணிக‌ம்,
வ‌ங்கி ம‌ற்றும் நிதித் துறைக‌ளைலும் ப‌டிப்ப‌டியாக‌ அன்னிய
முத‌லீடுக‌ள் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ன. உற்பத்தி துறையை அதுவரை
கட்டி போட்டிருந்த லைசென்ஸ் முறை அடியோடு ரத்து
செய்யப்பட்டது. அனைத்து வ‌ரி விகித‌ங்க‌ளும் ப‌டிப்ப‌டியாக‌
குறைக்க‌ப்ட்ட‌ன‌. தொழில் துறைக‌ள் ஊக்குவிக்க‌ப‌ட்ட‌ன‌.
க‌ர‌ண்ட் அக்க‌வுண்ட் க‌ணாக்கில் ரூபாய் / டால‌ர் அன்னிய‌
செல‌வாணி வ‌ர்த‌க‌ம் முத‌ன் முறையாக‌ அனும‌திக்க‌ ப‌ட்ட‌து.
ஏற்றுமதியாளர்களுக்கும் வருமான வரி முற்றாக ரத்து
செய்யப்பட்டது. கணனி மற்றும் மென்பொருள் ஏற்றுமதி
துறை மிக வேகமாக வளார்ந்துமேலும் அன்னிய செலவாணி
ஈட்டியது.

ம‌டை திற‌ந்த‌ வெள்ள‌ம் போல் ப‌ல‌ ஆயிர‌ம் கோடி டால‌ர்
ம‌திப்பிலான‌ அன்னிய முத‌லீடுக‌ள், இந்தியாவினுல் பாய்ந்த‌து.
(ஆனால் சைனாவை ஒப்பிட்டால் மிக‌ குறைவான‌ அளாவுதான்).
அன்னிய முத்லீட்டாள‌ர்க‌ள் த‌ங்க‌ள் டால‌ர்க‌ளை ரிச‌ர்வ் வ‌ங்கி
மூல‌ம் இந்திய‌ ரூபாய்க‌ளாக‌ மாற்றி, இங்கு புதிய‌ முதலீடுக‌ளை
செய்த‌ன‌ர் / செய்கின்ற‌ன‌ர்.

இவ‌ற்றின் மொத்த‌ விளைவு : ந‌ம‌து டால‌ர் இருப்பு ப‌டிப‌டியாக‌
உய‌ர்ந்து இன்று சுமார் 1,00,000 கோடி ரூபாய் அளவை க‌ட‌ந்து
விட்ட‌து. க‌ட‌ந்த‌ ப‌த்து ஆண்டுக‌ளாக‌ அய்.எம்.எஃப் வ‌ங்கியிட‌ம்
இருந்து டால‌ர் க‌ட‌ன் வாங்க‌வில்லை !! ரூபாயின் ம‌திப்பு க‌ட‌ந்த‌
50 ஆண்டுக‌ளில் முத‌ன்முறையாக‌ டால‌ருக்கு எதிராக‌ உய‌ர்ந்த‌து.
இதுவ‌ரை வாங்கிய‌ அன்னிய‌ செல‌வாணி க‌ட‌ன்க‌ளை திருப்பி
செலுத்த‌ வ‌ழி பிற‌ந்த‌து !!

மேலும் அன்னிய‌ முத‌லீடுக‌ளால் உருவான‌ நிறுவ‌ன‌ங்க‌ளினால்
ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர்க‌ளுக்கு புதிய‌ வேலை வாய்ப்புக‌ள் ; அர‌சிற்க்கோ
ப‌ல‌ ஆயிர‌ம் கோடி புதிய‌ வ‌ரிவ‌சூல் ம‌ழை. அரசின் மொத்த‌ வ‌ரி
வ‌சூல் ப‌ல‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு இந்த‌ 17 ஆண்டுக‌ளில் உய‌ர்ந்துள்ள‌து.
அதைகொண்டு ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளை அம‌லாக்க‌ நிதி கிடைத்து.

அன்னிய முத‌லீடுக‌ளை, உல‌க‌ம‌ய‌மாக்க‌லை 'எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்'.
1991இல் திவால் நிலையில் இருந்த‌, மிக‌ மிக‌ மிக‌ அபாய‌க‌ர‌மான‌
ந‌ம் நிலைமையினை வேறு எந்த‌ 'வ‌ழிக‌ளில்' கையாண்டிருப்ப‌ர்க‌ள் ?
மாற்றுவ‌ழி இருந்தால் விவாதிக்க‌லாமே...

உலகமயமாக்கல் பற்றி...

முதல்ல உலகமயமாக்கல் என்றால் என்ன ?
பெரும்பாலானோருக்கு சரியா புரியாமலே 'எதிர்பதாக' சொல்கிறார்கள்.

இந்த தமிழ் blogs/posts , ஆர்குட்/கூகுள் என்னும் அமேரிக்க நிறுவனமும்,
இன்னும் பல இணைய மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனக்களும், தொலைதொடர்பு
நிறுவனங்களின் அபாரமான வளர்சியில் விளைவுதாம். அவைகளை இந்தியாவிற்க்குள்
அனுமதித்து உலகமயமாக்கலின் ஒரு அங்கம்.
அதை எதிர்க்கிறவர்கள், இந்த tamilblogs/posts/groups ஆணிவேரையை
எதிர்ப்க்கிறார்களா ? எப்ப‌டி ? உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இல்லாம‌ல் இந்த‌
அர‌ங்க‌மே சாத்திய‌மில்லையே ? முர‌ண் தொகை !!!

சிறிபெரும்புதூர் தொடங்கி, ஒரகடம், மறைமலை நகர் வரை, சென்னையை சுற்றி
நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்
அதற்க்கு பல உதிர்பாகங்கள் தயாரிப்போர் நிறுவனங்கள் க‌டந்த 15
ஆண்டுகளில், உலகமயமாக்கலின் விளைவாக‌ உருவாகின. அதில் பல ஆயிரம்
பேர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு அபாரமான வரி வசூல், அன்னிய
செலாவாணி, மக்களுக்கு மலிவான தரமான பொருட்க்கள் (உ.ம் : நோக்கியா
செல்போன்கள்)....

சரி, இவை எல்லாம் அனுமதிக்கபடாமல், 1990 வரை இருந்த மாதிரியே
தொடர்ந்திருந்தால், நம் நிலைமை இன்னும் 'நன்றாக' இருந்திருக்குமா ?
அல்லது மோசமாகியிருக்குமா ?

இவற்றின் சாதக/பாதகங்கள் என்ன ? உலகமயமாகலுக்கு பின் தான் தனியார்
துறைகளில் இப்ப வேலைவாய்ப்புகள் மிக மிக அதிகம் வளர்ந்துள்ளது. 1980இல்
வெளியான கமல் படம் 'வறுமையின் நிறம் சிகப்பு' பார்க்கவும், அன்றைய
சூழ்னிலை பற்றி அறிய. 1965க்கு முன் பிறந்தவர்களிடமும் விசாரிக்கவும்,
வேலை வாய்ப்புகள் பற்றி.

விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

1. உலகெங்கும் பல பணகார நாடுகள் மிக மிக அதிகமாக தம் விவசாயிகளுக்கு
மான்யம் வழங்குவதால் விவசாய விலை பொருட்க்கள் விலை மற்ற பொது விலைவாசி
அளவுக்கு கூடவில்லை. முக்கியமாக பருத்தி. நம்மால் அந்த அளவிற்கு மானயம்
அளிக்க முடியவில்லை. ஊழல் வேறு பெரும் பகுதி மானியத்தை அபகரிக்கின்றது.

2.நில சீர்திருத்தம் என்ற பெயரில், பெரும் பண்ணைகள் இன்று துண்டு
துண்டாக்கப்பட்டு, ஒரு விவ‌சாயின் சராசரி நிலம் 2 ஏக்கருக்கும்
குறைவானது. முன்னேறிய நாடுகள், சைனாவிலும் இதற்க்கு நேர் எதிராக மிக
பெரிய பண்னைகள், நவீன தொழில்னுட்பம் பயன் படுத்தபடுகின்றன. economics of
scale and
minimum farm size..

3.இந்தியாவில் நாம் 1991 வரி கடைபிடித்த லைசென்ஸ், பெர்மிட் ராஜ்
பொருளாதார கொளகைகிளினால், தொழில்துறை முடக்கபட்டது. இல்லவிட்டால், பல
கோடி கிராம மக்கள், அந்தந்த பகுதிகளிலேயே உருவாகும் உற்பத்தி துறை வேலை
வாய்ப்பை பெற்று படிப்படியாக மாற்று வழி பெற்றிருப்பர். சீனாவில் அதுதான்
நடந்தது. The bulk of the population migrated gradually from farming to
manufacturing and finally to service sector, unlike India.

4.அர‌சின் பற்றாக்குறைகளால் ப‌ண‌வீக்கம் அதிகரித்து, அனைத்து
விலைவாசிகளும், கூலியும் மிக அதிகமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமை அதிகம்.

5.அரசு அளிக்கவேண்டிய அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள், ஊழல் மற்றும்
பொறுப்பற்ற அர‌சு ஊழிய‌ர்க‌ளினால் ச‌ரியாக‌ விவசாயிக‌ளுக்கும்
ஏழைக‌ளுக்கும் கிடைக்காத்தால், அவ‌ர்க‌ள் த‌னியார் துறைக‌ளை நாட‌
வேண்டிய‌ அவ‌ல‌ம். மேலும் செல‌வுக‌ள். சுமைக‌ள்.

6.இன்னும் ப‌ல‌ சிக்க‌லான‌ கார‌ணிக‌ள்....

கருப்பு பணத்தின் லீலைகள்

வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.

கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.

காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்..

மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.

வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?

'தாரளமயமாக்கல்' என்றால் என்ன ?

' தனியார் மயமாக்கல், தாரளமயமாக்கல், உலகமயமாக்கல்'‍‍ இவை பற்றிய தெளிவான , சரியான விளக்கங்கள் இன்னும் தழிழில் எழுதப்படவில்லை. உணர்ச்சி வேகம். கோபம் , பயம் போன்ற உண்ர்வுகளால் இவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களும் , விளைவுகளும் தெளிவாக்கப்படாமல் உள்ளன. முதலில் 'தாரளமயமாக்கல்' பற்றி புரிந்து கொள்வோம்.

.

சுதந்திரம் வந்த புதிதில். 1950களில் , பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டல்படி, காங்கிரஸ் கட்சி 'சோசியலிச' பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த துவங்கியது. அப்போது உலகெங்கிலும் இது போன்ற சிந்தனைகளே ஆதிகம் செலுத்தின. (அமேரிக்கா , மேற்க்கு ஜெர்மனி போன்ற சில நாடுகளை தவிர்த்து). சோசிய‌லிச‌ கொள்கைக‌ளின் முக்கிய‌ அம்ச‌ம் ' திட்ட‌மிட‌ல்' (centralised planning ) ; அதாவ‌து நாட்டிலுள்ள‌ இய‌ற்கை ம‌ற்றும் ம‌னித‌ வ‌ள‌ங்க‌ளை எவ்வாறு உப‌யோக‌ப் ப‌டுத்த‌ வேண்டும் என்று ம‌த்திய‌ அர‌சு ம‌ட்டுமே 'திட்ட‌ க‌மிச‌ன்' மூல‌ம் தீர்மாணிக்கும். சந்தை பொருளாதார‌ கொள்கைக‌ளுக்கு நேர் எதிரான‌ சித்தாந்த‌ம். பொதுத் துறை நிறுவ‌ன‌ங்க‌ளுகே முக்கிய‌த்துவ‌ம். த‌னியார்க‌ள் ப‌ல‌ முக்கிய‌ துறைக‌ளில் ( உ.ம் தொலைபேசி, மின் உற்ப‌த்தி) நுழைய‌ த‌டை. ஏற்க‌ன‌வே இருக்கும் துறைக‌ளில் தொழிலை விரிவுப‌டுத்த‌ , குறைக்க‌ ப‌ல‌ ப‌ல‌ க‌ட்டுப்பாடுக‌ள். உற்ப‌த்தியை பெருக்க‌ த‌டைக‌ள் ப‌ல‌. இக்க‌ட்டுப்பாடுக‌ளை (controls and licenses) அம‌ல்ப‌டுத்த‌ ஒரு மிக‌ப் ப‌ல‌மான‌ , பூத‌க‌ர‌மான‌ அர‌சு எந்திர‌ம் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ அந்த‌ எந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து. ஒரு தொழில‌திப‌ர் ஒரு புதிய‌ தொழிற்சாலையை நிறுவ‌ வேண்டுமானால் ப‌ல‌ அதிகாரிக‌ளின் த‌ய‌வும் , 'க‌ருணையும்', அர‌சிய‌ல்வாதிக‌ளின் (பெரும்பாலும் காங்கிர‌சஸ் அமைச்ச‌ர்க‌ள் ம‌ற்றும் த‌லைவ‌ர்க‌ள்) 'ஆத‌ர‌வும்' தேவையாக‌ இருந்த‌து. தாரளமயமாக்களுக்கு பின் இன்று எவ்வ‌ள‌வே ப‌ர‌வாயில்லை.

.

உதராணமாக கோவை மதுக்கரை ப‌குதியில் உள்ள ஏ.சி .சி (Tata) சிமென்ட் நிறுவனத்தை பார்ப்போம். லைசென்ஸ்டு கெப்பாசிட்டி (licensed capacity ) என்று அதற்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிகப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லச்சம் டன் மட்டுமே அனுமதி (லைசென்ஸ்) என்றால் , அதற்க்கு மேல் ஒரு கிலோ கூட உற்பத்தி செய்ய அனுமதியில்லை. சந்தையில் தேவை (demand) எவ்வளவு அதிகரித்தாலும் கூட உற்பத்தியை பெருக்க அனுமதி கிடையாது. காரணம் டாடா நிறுவன அதிபர்கள் பெரும் பணக்காரர்களாக வளர்ந்து விடுவார்களாம் ! 'concentration of economic power ' என்ற ஒரு மூடத்தனமான சிந்தனை நாட்டின் பொதுபுத்தியை மிகவும் ஆக்கிரம்த்த காலம் அது. நூறு கோடிக்கு மேல் (ஒரு உதாரணத்திற்கு) ஒரு தனியார் சிமின்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை (அல்லது சொத்துகள்) அதிகரிக்க அனுமதியில்லை ! இதன் மொத்த விளைவு , செயற்க்கையான‌ தட்டுப்பாடுகள் , பதுக்கல் , கள்ளமார்க்கட், லஞ்சம். அரசே லெவி (levy) என்ற பெயரில் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை மிக குறைந்த விலைக்கு கட்டாய கொள்முதல் செய்து பின் ரேசன் முறையில் விற்றது. 1950 களில் வந்த திரைபடங்களில் வில்லன்கள் சிமென்ட், சர்க்கரை , நூல் பேல்கள் போன்றவற்றை பதுக்குவார்கள் , கடத்துவார்கள். அவ்வளவு தட்டுப்பாடு அப்போது !!

.

Monopolies Restricted Trade Practises Act (MRTP Act) என்று ஒரு முட்டாள்தனமான சட்டம் 1969 இல் இயற்றப்பட்டது. அதன்படி எந்த ஒரு குறிப்பிட்ட தொழிற் துறையிலும், எந்த ஒரு நிறுவனமும் , மிகப்பெரிய அளவில் 'வளரக்கூடாது '. இதற்கான அளவுகோள்கள் 'percentage of market share' அடிப்படையில் வகுத்திறுந்தாலாவது பரவாயில்லை ; அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் சென்றால் பெனால்டி , தண்டனை என்று உருவாக்கபட்டது. விளைவு : தட்டுப்படு, அதிக விலை.

.

இதற்க்கெல்லம் சிகரம் வைத்தாற்போல வரி விகுதங்கள். 'பணக்கார்க‌ள்' மீது மிக மிக அதிக வரி விதித்து , அதை ஏழைகளுக்காக ' செலவு' செய்யவதாக சொல்லப்பட்டது. அனைத்து வரிகளும் சேர்ந்து சுமார் 95 % ஆனது. விளைவு வரி ஏய்ப்பு , கருப்பு பணம், வரி வசூல் செய்யும் அரசு எந்திரம் லஞ்சமயமானது. அதிக வரிக்கு பயந்து புதிதாக யாரும் தொழில் தொடஙக முயலவில்லை. கடுமையான விலைவாசி உய்ர்வும் , வேலை இல்லாத்திண்டாட்டமும் உருவாகின.

.

1991 இல் அன்னிய செலாவனி தட்டுப்பாடு வந்து அரசின் தங்கத்தை வெளிநாட்டில் அடமானம் வைக்க வேண்டிய கட்டாயமான‌ சூழல் நிலையில் நரசிம்மராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக்கி , சுதந்திரமாக செயலாற்றா அனுமதிதார். முதல் வேலையாக லைசென்சிங் முறையை அறவே ரத்து செய்தார் மன்மோகன் சிங். MRTP Act ரத்து செய்யப்பட்டது. அந்நிய முதலீடுகளும் 'தாரளமாக' அனுமதிக்கப்படன. வரி விகுதங்களும் படிப்படியாக குறைக்கபட்டன. இதைத்தான் ' தாரளமயமாக்கல்' என்கிறோம்.

.

விளைவு : 9 % பொருளாதார வளர்ச்சி , மிக மிக அதிக அளவு வரி வசூல் (1991ஐ விட இன்று சுமார் 15 மடங்கு அதிகம்), வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை. வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 50 % இல் இருந்து சுமார் 25 % மாக குறைந்தது. ஐ.எம்.எஃப் உலக வங்கியிடம் இனி எப்போதுமே அன்னிய செலவாணிக்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத , பலமான சூழல்.

.

இந்த 'தாரளமயமாக்கலை' செய்யாமல் இருந்திருதால், இன்னேரம் நாடே திவாலாகியிருகும். (அவ்வள்வு அன்னிய கடன் வாங்கியிருந்தோம்). வறுமை இன்னும் அதிகரித்திருக்கும்...

'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்

ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட கிழக்கிந்திய கம்பேனியின் ஞாபகம் இன்னும் பலரையும் வாட்டுகிறது. சூழ்நிலைகளும், கால கட்டமும் பலவிதமாக மாறினாலும் இந்த பயம் இன்னும் பல இடது மற்றும் பிற சிந்தனைகளை இன்றும் பாதிக்கிறது.

'பன்னாட்டு நிறுவனங்களை இங்கு தொழில் தொடஙக அனுமதித்தால், அவை நம் வளங்களை சூறையாடும் ; ஏழை தொழிலாளிகளை சுரண்டும், சிறு தொழில்களை அழிக்கும், அரசின் கொள்கைகளை மறைமுகமாக கட்டுப்ப‌டுத்தும்' ; இவ்வாறாக பல குற்றச்சாட்டுகள், பயங்கள். 1950 முதல் 1991 வரை நமது பொருளாதார கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டன.

1955இல் யு.எஸ்.ஸ்டீல் என்னும் அமெர்க்க கம்பெனி, பிகார் / ஒரிசா பகுதிகலில் ஒருபெரிய எஃகு ஆலை அமைக்க விரும்பியது. ஆனால் நமது 'ஜனனாயக சோசியலிச' அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது. அந்நிறுவனம் முதலீடு (டாலர்களில்), தனது தொழில்நுட்பம் மற்றும் (மேனெஜ்மென்ட்) நிர்வாக மேலான்மை போன்றவற்றை முழுவதும் இங்கு பயன்படுத்த தாயாராக இருந்தது. ஆனால் அரசு மிக அதிக செலவில், பொதுத் துறையில், பிலாய் எஃகு ஆலை அமைத்தது. அந்த‌ ஆலைக்கு தேவையான‌ ப‌ல‌ ஆயிர‌ம் கோடி முத‌லீட்டை நாம் க‌ட‌ன் வாங்கியும், ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்திலிருந்தும் செல‌வ‌ளித்தோம். ப‌ல‌ ஆண்டுக‌ள் ந‌ஷ்ட‌த்திலும், ல‌ஞ்ச‌ ஊழ்ல்க‌ளிலும், நிர்வாக‌ சீர்கேடுக‌ளிலும் அது ந‌ம‌க்கு மிக‌ப் பெரிய‌ சுமையாக‌ இருந்த‌து. அதே ச‌ம‌ய‌ம் எஃகு தேவை மிக‌ அதிக‌ரித்த‌தால், ப‌ற்றாக்குறைக‌ள், க‌ருப்பு மார்க்கெட் உருவான‌து. சோசிய‌லிச‌ கொள்கைக‌ளின்ப‌டி, எந்த‌ ஒரு தனியார் நிறுவ‌ன‌மும் த‌ன‌து இஷ்ட்ட‌ம் போல் த‌ன்து உற்ப‌த்தியை பெருக்க‌ அனும‌தி இல்லை. அத‌னால் டாடா ஸ்டீல் நிறுவ‌ன‌மும் உற்ப‌த்தி திற‌னை (புதிய‌ ஆலைக‌ள் அமைத்து) அதிக‌ப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை. க‌டுமையான‌ ப‌ற்றாக்குறை, விலை உய‌ர்வு, க‌ள்ள‌ ச‌ந்தை, ஊழ‌ல் உருவாகின‌.

சிம‌ன்ட், ச‌ர்க‌ரை, உர‌ம், ம‌ருந்து, பொறியிய‌ல் எந்திர‌ங்க‌ள், ஜவுளி ஆலைகள் ம‌ற்றும் அனைத்து துறைக‌ளிலும் இதே க‌தைதான். செய‌ற்கையான‌ ப‌ற்றாக்குறை, உல‌க‌ ச‌ந்தையை விட‌ மிக‌ அதிக‌ விலை, தரக்குறைவான பொருள்கள், க‌ள்ள‌ மார்க்கெட், ல‌ஞ்ச‌ம், ப‌துக்க‌ல், க‌ட‌த்த‌ல், போன்ற‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌ளே உருவாகின‌. விலைவாசி இத‌ன் மூல‌ம் க‌டுமையாக‌ உய‌ர்ந்த‌தால் வ‌றுமை மிக‌ அதிக‌மான‌து.
வ‌ரி விதிப்பும் மிக‌ மிக‌ அதிக‌மாக்க‌ப்ப‌ட‌தால் புதிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் உருவாக்க‌ தொழில் முனைவோர் விரும்ப‌வில்லை. அர‌சாங்க‌ வேலைக்கு செல்ல‌வே பெரும்பாலான‌ இளைஞ்ர்க‌ள் விருப்பின‌ர். ஆனால் எல்லேருக்கும் அர‌சு வேலை த‌ர‌ எந்த‌ கால‌த்திலும் இய‌லாது. ஆக‌வே வேலை இல்லா திண்டாட‌ம் மிக மிக அதிக‌மான‌து.

1977இல் அய்.பி.எம் நிறுவனத்தை ஜனதா அரசு நாட்டை விட்டே துரத்தியது. அவர்கள்தாய்லாந்திலும், சைனாவிலும் தங்கள் ஃபெக்ட்ரிகளை அமைத்தனர். நாம் ப‌ல‌ ஆண்டுக‌ளை வீணடித்தோம். இறக்குமதி செய்ய டாலர்கள் இல்லாததால், உலக வங்கி (ஐ.எம்.எஃப்) இடமிருந்து பல‌ ஆயிர‌ம் கோடி டாலர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம். வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. இவ்வாறு திவால் நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்ட‌தால், வேறு வ‌ழியின்றி க‌ட்டுப்பாடுக‌ளை த‌ள‌ர்தி, அந்ந்திய‌ முத‌லீடுக‌ளையும், ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங‌க‌ளையும் 1991க்கு பின் தாராள‌மாக‌ அனும‌தித்தோம்.

இன்று ப‌ல‌ நூறு ப‌ன்னாட்டு நிறுவ‌ங்க‌ள் இங்கு சுத‌ந்திர‌மாக‌ தொழிறசாலைக‌ள் அமைத்து மிக‌ அருமையான‌, ம‌லிவான‌ பொருட்க்க‌ளை உற்ப‌த்து செய்கின்ற‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர்க‌ளுக்கு நேர‌டியாக‌வும், ம‌றைமுகமாக‌வும் வேலை வாய்ப்பு, அர‌சுக்கு மிக‌ அதிக‌ வ‌ரி வ‌சூல், ம‌ற்றும் ம‌க்க‌ளுக்கு ம‌லிவான‌, தர‌மான பொருள்க‌ள் கிடைக்கின்ற‌ன‌. உதார‌ண‌மாக‌ : நோக்கியா செல் போன் நிறுவ‌ன்ம் சென்னை அருகே உருவான‌வுட‌ன், 1500 ரூபாய்க்கு ந‌ல்ல‌ செல்போன் கிடைக்கிற‌து. இன்டெல், அய்.பி.எம், மைக்ரோசாஃப்ட்,ஜி.ஈ., அல்ஸ்தோம், ஹுன்டாய், போர்ட், எ.பி.பி., ஹோன்டா, மிட்ஷுபிஷி, ம‌ற்றும் பல நிறுவனங்கள் வந்து உள்ளன. அன்னிய செலாவானி இருப்பும் மிக,மிக அதிகமாகி இன்று அய்.எம்.எஃப் வங்கியிடம் கடனே வாங்க அவசியமில்லா நிலை !!!

புதிய போட்டியினால், இதுவரை ஏகபோகத்தில் சுகமாக வளர்ந்த இந்திய நிறுவன‌ங்கள் (உ.ம் : பி.ஸ்.என்.எல், பஜாஜ் ஆட்டோ, அய்.டி.அய், எஸ்.பி.அய் போன்றவை) தஙக‌ளின் மெத்தன‌ போக்கிலிருந்து மீண்டு, தரத்தை உயர்த்தி, உற்பத்தி செலவை குறைத்து, நவீன தொழில் நுட்பத்தை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர்.

பன்னாட்டு நிறுவ‌ன‌ங்கள், எதோ ஹைடெக் பொருட்க்க‌ளை 'ப‌ண‌க்கா‌ர‌' வ‌ர்க‌த்திற்க்காக‌ ம‌ட்டும், ஏழை தொழிலாளர்க‌ளை 'சுர‌ண்டி', த‌யாரிக்கின‌ற‌ன‌ என்ற‌ பொய்யான‌ வாத‌த்தை, பிர‌மையை இட‌துசாரிக‌ள் உருவாக்குகின்ற‌ன‌ர். இந்தியாவை மீண்டும் கால‌னியாக்குகின்ற‌ன‌ இவை,என்றும் கதைக்கிறார்க‌ள். முதலாவுதாக இது போன்ற நிருவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, மற்ற நிறுவனங்களை விட மிக அதிக சம்பளம், சலுகைகள். மக்களுக்கு மிக நல்ல சேவைகள்/பொருட்க்கள். அரசாஙக்திற்க்கு நல்ல வரி வசூல் (அதன் மூலம் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள், நலத்திட்டங்களை அமல் படுத்த வாய்ப்பு). நாட்டின் பொருளாதாரம் முன்னேற‌ வாய்ப்பு.

1991க்கு முன் இருந்த நிலைமையே ப‌ர‌வாயில்லையா ? ஒப்பிட்டு பாருங்க‌ள். அனேகமாக‌ இதை ப‌டிக்கும் அனைவ‌ருமே ஏதோ ஒரு வ‌கையில் ப‌ன்னாட்டு நிருவ‌ன‌ங்க‌ளினால் ப‌ய‌ன்டைந்திருப்பீர்க‌ள். அல்ல‌து வேலை வாய்பை பெற்றிருப்பீர்க‌ள். யோசியுங்க‌ள் ந‌ண‌ப‌ர்க‌ளே.