ஊழலின் ஊற்றுகண் - 2

சோசியலிசம் என்ற சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்துப்படுவதால்
குழப்பம் அதிகம். கம்யூனிசததிற்க்கு முன்னோடியான சோசியலிசம் வேறு. நான் சொல்ல வருவது, சில மே.அய்ரோப்பிய நாடுகளில், இந்தியாவில் அன்று கடை பிடிக்கப்பட்ட ஜனனாயக பாணி சோசியலிசம்.
இந்தியாவில் சோசியலிச பாணி என்ற பெயரில் 50களில் இருந்து நடைமுறை படுத்தப்பட்ட கொள்கைகள் :
அய்ந்தாண்டு திட்டங்கள் : இவை நாட்டில் பொருளாதாரத்தை முழுவது திட்டமிட்டு நடத்தும் நோக்கதில் உருவாக்கப்பட்ட்ன. முடிந்த வரை அரசு துறைக்குதான் முக்கியத்துவம். தனியார் துறை மிகுந்த கட்டுப்படுகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஒவ்வொறு துறையிலும் தனியார்கள் எந்த ஒரு பொருளையும், எத்தனை அளவு உற்பத்தி செய்ய முன் அனுமதி அளிக்க industrial licensing policy என்ற சட்டம் இயற்றப்பட்டது.
சில முக்கிய துறைகள் தனியார்களுக்கு அனுமதி மறுக்கப்ப்ட்டன. பல துறைகளில், மிக குறைந்த அளவு லைசென்ஸே அளிக்கப்பட்டது. பொதுதுறை வளர வேண்டி, தனியார் துறை முடக்கப்பட்டது. ஆனால் பொதுதுறையால வேண்டிய உற்பத்தி செய்ய இயலாமல் பற்றாக்குறை உண்டாகியது. சிமெண்ட். நூல், ஜவுளி என்று பல விசியங்களில் கடும் பற்றாக்குறை. அதனால கடத்தல், கள்ள சந்தை உருவாகி, ஊழல் தலைகாட்டியது.
இந்த லைசென்ஸ் ராஜ்ஜியத்தை கட்டிக்காக்க பெரும் அரசு அதிகாரவர்கள் உருவாக்கப்பட்டது. அவர்களின் நேர்மை படிப்படியாக குறைந்தது. தொழிலதிபர்கள் புதிய நிறுவனங்களை ஆரம்பிக்க, இருக்கும் நிறுவனங்களை விரிவு படுத்த, இந்த அதிகாரிகள், அமைச்சர்களின் தயவை நாட வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால லைசென்ஸ் வழங்குவதில் லஞ்சம் மற்றும் political patronage பெரிய அளவில் உருவானது. இது இந்திரா காந்தி காலங்களில் அதி உச்சமடைந்தது.
அரசு துறையை தொடர்ந்து விரிவு படுத்த, ராணுவ செலவுகளை செய்ய அரசு பெரும் அளவில் வரி விதித்தது. புதிய புதிய வரிகள் விதிக்கப்பட்டன. உச்சபட்சமான வருமான வரி 98 % அளவிற்க்கு (கோடீஸ்வர்களுக்கு மட்டும்) 70களில் உயர்ந்தது. இதனால் பெரும் அளவில் வரி ஏய்ப்பு நடக்க ஆரம்பித்தது. கருப்பு பணம் மிக மிக மிக அதிகம் உருவாகி, நேர்மையை அழித்தது.
தேசியமயமாக்கல் என்ற ‘அபாயம்’ இருந்ததால், பலரும் புதிய தொழில்களை துவக்க, ரிஸ்க் எடுக்க தயங்கினர். அதனாலும் உற்பத்தி பற்றாகுறை ஏற்பட்டு சிக்கல் அதிகரித்தது.
அன்னிய முதலீடுகளே தடை செய்யப்பட்டன. அன்னிய நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. ரூபாய், பணச் சந்தையில் இன்று போல் float செய்யப்படாமல், severe foreign exchange rate controlsகளுக்கு உட்படுத்தப்பட்டது. ரூபாயின் மதிப்பு செயற்க்கையாக சந்தை மதிப்பை விட, பல மடங்கு அதிகமா நிலை நிறுத்தப்பட்டது. அனைத்து பரிவர்த்தனைகளும் அரசின் ரிஸர்வ் வங்கி மூலம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இறக்குமதி எப்போதும் நமக்கு ஏற்றுமதியை விட டாலர் மதிப்பில்அதிகம். அதனால் டாலர் இருப்பு எப்போதும் பற்றாக்குறை. ஏற்றுமதியும் அதிகரிக்க வழியில்லை காரணம் நம் ரூபாயின் மதிப்பு செயற்கையாக அதிகமாக வைக்கப்பட்டதால். வெளிநாடுகளில், நம் பண்டங்களை இறக்குமதி செய்பவர்கள், சந்தை மதிப்பை விட அதிக விலை அளித்து, இறக்குமதி செய்ய தயாரில்லை. இது புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படையான விசியம் தான். (ரூபாய்க்கி எதிராக டாலர் வீழ்ச்சி அடைந்த 2007இல், நம் ஏற்றுமதியாளர்கள் அடைந்த பிரச்சனைகள், நஸ்டங்களை நினைவு கூருங்கள்).
இறக்குமதி செய்ய லைசென்ஸ்கள் அரசாங்கத்தால் அளிக்க்பட்டன. அன்னிய செலவாணி மிக தட்டுப்பாடாக இருந்தால், எந்த பண்டம் அத்தியாவியம், எது ஆடம்பரம், யாருக்கு இறக்குமதி லைசென்ஸ் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் (காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும்), உருவாக்கப்பட்டன. இது பெரும் ஊழலுக்கு வகை செய்தது. பெரும் தொழிலதிபர்கள், தளவாடங்கள், இயந்திரங்கள், மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அதிகாரிகளில் தயவு மிக மிக அதிகம் தேவை பட்டது. போதாக்குறைக்கு, சில முக்கிய ஏற்றுமதி / இறக்குமதி வணிகம் அரசுடைமயாக்கப்பட்ட State Trading Corporation மூலமாக மட்டும் தான் சாத்தியாமானது. அதில் மெகா ஊழல் உருவானது.
அரசின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேயிருந்தது. சமாளிக்க தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்டுகள். அதாவது புதிதாக பெரிய அளவில் நோட்டடித்து, அரசு பொறுப்பில்லாமல் செலவு செய்தது. இதன் விளைவு கடுமையான விலைவாசி உயர்வு. ஆண்டுகள் 18 சதவீதம் எல்லாம் சாதாரணம். அதனால வட்டி விகுதங்களும் அதை விட அதிகமாக உயர்ந்து, மக்களை வாட்டியது.
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்த்தால், அதற்க்கு ஏற்றது போல், கூலி உயர்வு கேட்டு, தொழிலாளர்களின் போராட்டமும் வலுத்தது. அதனால் வருடத்தில் பல நாட்கள் உற்பத்தி முடங்கி, பற்றாக்குறை அதிகரித்தது. புதிய தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தியிம் அதிகம் இல்லை. இரும்பு, சிமெண்ட், சர்கரை, உரம் போன்ற பல பொருட்களின் விலையை அரசு கடுமையான price controls மூலம் கட்டுப்படுத்தியது.
இதனால கள்ள சந்தை, கடத்தல், பதுக்கல் உருவாகி, நேர்மையை மேலும் சீரழித்தது.
வறுமையும் தொடர்ந்து அதிகரித்தது. வேலை இல்லாத்திண்டாடமும் மிக மிக அதிகரித்தது. ஜனத்தொகையும் தொடர்ந்து உயர்ந்தது.
தொழிற்துறையை முடக்கியது போதாது என்று விவசாயத்தையும் சோசியலிச கோட்ப்படுகள் என்ற பெயரில் முடக்கினார்கள். நில உச்ச வரம்பு சட்டம் என்று எந்த ஒரு விவசாயும், நஞ்சை நிலங்கள் 15 ஏக்கர்களுக்கு மேல் சொந்தமாக வைத்திருக்க கூடாது என்று தடை. இதனால் பினாமி நிலங்கள் உருவாகின. வளர்ந்த நாடுகளில் நடந்தது போல், பெரும் அளவு கொண்ட நவீன பண்ணைகள் உருவாகி, விவசாய உற்பத்தி திறன், அதாவது maximization of yield and minimization of productions costs due to economies of scale and use of modern technology இங்கு சாத்தியமில்லாமல் போயிற்று. இதனால் தானிய விலை மிக மிக அதிகமாக உயர்ந்தது.
அன்னிய முதலீடுகள், இந்திய பெரு முதலாளிகள், பெரிய விவசாயிகள் : இவர்கள் அனைவரும் மெகா வில்லன்கள் என்று இடதுசாரிகளால் தொடர்ந்து மேடைகளிலும், ஊடகங்களிலும் தூற்றப்பட்டனர். மக்களின் பொது புத்தியிலும் அப்படி ஏற்றப்பட்டது. இதனால் (இன்று போல் அல்லாமல்) தொழில் துவங்க பலரும் அன்று தயங்கினர். A whole generation of ‘would be’ entrepreneurs were blunted from risk taking and made to look for got jobs.
தனியார் துறை மிக குறைவான வேலை வாய்புகளையே இதனால் உருவாக்க முடிந்தது. பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் மிக மிக அதிகரித்தது. வேலை என்றால் அரசு துறை வேலை மட்டும் தான் என்று பல பத்தாண்டுகள் இருந்தது. எம்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்துவிட்டு, வேலை கிடைக்காமல், இளைஞர்கள் தாடி வளர்த்துக் கொண்டு, குட்டை சுவற்றில் அமர்ந்து, கம்யூனிசம் பேசினர். 1980இல் வெளிவந்த வறுமையில் நிறம் சிகப்பு படம் அருமையாக இந்த சூழலை காட்சிபடுத்தியது.
அன்னிய செலவாணி பற்றாமல், அய்.எம்.எஃப் வங்கியிடம் ஆண்டு தோறும் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் நமக்கு. ஒரு கட்டத்தில் வட்டி கூட கட்ட முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டோம். 1991இல் இது ஒரு களைமாக்ஸ்க்கு நகர்ந்தது.
மேலும்..

ஊழலின் ஊற்றுகண்

இந்தியாவில் பொது வாழ்க்கையில் நேர்மை இவ்வளவு தூரம் சீரழிந்தற்க்கு 1991 வரை இங்கு இருந்த ‘சோசியலிச’ பாணி பொருளாதார கொள்கைகள் தான் அடிப்படை காரணம். அதன் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. மேலும் பல பத்தாண்டுகளில் படிப்படியாக நம் நேர்மை அழிந்தது. 1966இல் பிராகசம் அவர்கள் தான் ஏன் இன்னும் உயிர் வாழ வேண்டும் என்று நொந்து பேசியதை பற்றி ராஜாஜி எழுதியது :

http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

இந்த ’சோசியலிச எச்சங்கள்’ பற்றி ’சிசுபாலன்களுக்கு’ புரியாது. இதெல்லாம் போலி சோசியலிசம் அல்லது ’……’ என்று மட்டும் கதைப்பார்கள். அது என்ன எழவோ, அதன் விளைவை பற்றி சுதந்திரம் வந்து 20 ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தலைவர் சாக வேண்டும் என்று நொந்து புலம்பும் அளவிற்க்கு நிலைமை சீரழிய ஆரம்பித்துவிட்டது. இன்று உச்சமடைந்து உள்ளது. இதெல்லாம் புரிந்து கொள்ள ‘முன் முடிவுகளற்ற’ திறந்த மனம் வேண்டும்.

இறுதியாக அந்த கட்டுரையில் ராஜாஜி, நேருவின் கொள்கைகள் பற்றி எழுதியது :

Sri Jawaharlal Nehru, urged by patriotic impulse, and early
indoctrination committed the blunder of taking India out of
the path of humility and put it in the race for industrialization,
and did all he could to transform our ideology into that of
Soviet Russia. This was the fatal step that brought us to the
present position out of which it requires not only wisdom but
indomitable courage to save India. Social justice and removal
of disparities of opportunity and equitably distributed welfare
are great and worthy ends. But the fatal mistake was the plan
to achieve this by the shortcut of heavy borrowing and central
planning and permit-license-regime which has brought in its
wake all that makes Sri Sri Prakasa lament so bitterly.

வினவு தளத்தில் இதை பற்றி நான் நிகழ்த்திய ஒரு உரையாடல் :

johny,

உமக்கான பதில் சுவாமிநாதன் அங்கலேஸ்வரைய அய்யர் எழுதிய கட்டுரையில் உள்ளது. இந்தியாவில் தான் எம்.பிக்கள் ஓட்டு போட பணம் வாங்கினால், அது சட்டபடி குற்றமல்ல. மேலை நாடுகளில் அப்படி இல்லை. கீழே நான் இட்ட பின்னூட்டத்தின் இறுதியில் மிக தெளிவாக அய்யர் எழுதுகிறார் :

..Last week’s row in Parliament is distracting attention from the real job that lies ahead. Former prime minister Narasimha Rao survived a confidence vote by acquiring the support of three MPs of the Jharkhand Mukti Morcha. These gentlemen were naïve enough to deposit Rs 1 crore apiece in cash in their bank accounts, and were caught by the police. But the Supreme Court then held that voting for any reason whatsoever in the Lok Sabha was covered by privileges of Parliament, which gave MPs immunity from the normal laws of the land. So, MPs taking cash for votes could not be prosecuted.

When the Constitution was formulated, it provided that Parliament should codify its own privileges, laying down precisely which acts would be immune from prosecution or civil suits. More than 60 years later, Parliament has not yet done so. MPs of all parties prefer their existing immunity for all actions. This is the real scandal, and no party or newspaper is highlighting it.

We need to get beyond finger pointing to true morality and justice. The Lok Sabha needs to codify its privileges swiftly, providing immunity only for free speech in Parliament, not for any other action such as voting for cash or office. Indeed, it should provide that all criminal cases against MPs are heard first and foremost, so that parliamentarians are held to a higher standard than others, not a lower one. If the BJP and CPM are serious about improving political morality, they must launch an immediate campaign to codify and narrow parliamentary privileges. If they fail to do so, their talk of morality will stand exposed as pure hypocrisy.

//சோசலிசம் பேசிய காலத்துல இது மாதிரி நடந்திருந்தால் சொல்லுங்க.///

பிரகாசம்காரு, தான் இதையெல்லாம் பார்த்துகொண்டு வாழ்வதை விட சாக வேண்டும் என்று நொந்து போய் பேசியதை பற்றி, ராஜாஜி அன்று எழுதியதை (மேலே) படிக்கவே இல்லை போல. அல்லது புரியலையா ? அன்று விதைத்த வித்துக்கள் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளன. அந்த வித்துகள் ‘சோசியலிசம்’ என்ற பெயரால் தான் அன்று அழைக்கப்பட்டன. அதன் cumulative effects இன்றும் உள்ளது. ஒரே வருடத்த்தில், நூற்றாண்டில் சீராக முடியாது. மாசுபட்ட நிலத்தடி நீர் சரியாக எத்தனை வருடங்கள் பிடிக்கும் ? அல்லது நுற்றாண்டுகள் பிடிக்கும். அதே போல் தான் மனோபாவ மாசுகளும்.

//ஒப்பந்தம் இந்திய நலனுக்கு உகந்ததுன்னா ஏன் காசு கொடுக்குற நிலை வருது.//

இந்திய நலனை பற்றி யார் கவலை பட்டாங்க. மேலும் பலருக்கு இதன் அவசியம் புரியவில்லை. மின் பற்றாக்குறை பற்றி அக்கரை இல்லை. அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒரே நோக்கம் மட்டும் தான். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை பாரளுமன்ற ஒப்புதல் பெற காங்கிரஸ் தனக்கு நன்கு பழக்கப் பட்ட ‘முறையில்’ வெற்றிகரமாக செயல்பட்டது. உண்மைய சொன்னால், இந்திய நலன் கருதிதான் மன்மோகன் சிங் இத்தனை பிடிவாதமாக அதை நிறைவேற முயன்றார். அவர் சூட்கேஸ் வாங்குபவர் அல்ல. அமெரிக்க கைக்கூலியும் அல்ல. he is a realist and visionary who know ground reality and the our follies in the past better than any of us here. He is the one who opened up India in 1991 and saved us from bankruptcy and disaster. but for his vision and determination, this chat here would not be happeining here. Indian rupees would have crumbled (like the Zimabwen dollar now) and our imports of petro products would have stopped in 1991 and India would have collapsed like USSR in 1992. difficult for you to picturise. nevertless that is the fact, which you refuse to look at.

///Libertarian,

இதுக்கும் சோஷலிசத்துக்கும் என்ன சம்பந்தம்///

johnny,

மிக எளிமையாக சொல்கிறேன். 1947 வரை நம்மிடம் இருந்த நேர்மை, முக்கியமாக அரசியலில் இருந்த நேர்மை, போகப்போக குறைந்தது. அன்று ஒரு எம்.பி இப்படி லஞ்சம் வாங்குவது மிக மிக மிக அபூர்வம். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு தியாகிகளாலும், நேர்மையாளர்களாலும் நிரம்பியிருந்தது. இன்று மிக சீரழிந்துவிட்டது. இது சோசியலிச பாணி கொள்கைகளில் விளைவுகள். இதை பற்றி தான் ராஜாஜி எழுதியதை எடுத்துகாட்டியிருந்தேன்.

எம்.பிக்கள் பணம் வாங்கும் அளவிற்க்கு அவர்களின் நேர்மை கெட்டதற்க்கு இந்த சோசியலலிச பாணியில் நிகர விளைவுகளே காரணம். பொதுவாகவே சோசியலிசம் / கம்யூனிசம் என்ற பெயரில் அரசு எந்திரம் மற்றும் அமைச்சர்களிடம் அதிகாரம் மிக மிக அதிகமாக குவிந்த நாடுகளில், போக போக ஊழல் மலிந்து சீரழிவு உருவானது. பழைய USSR இல் இருந்த அனைத்து நாடுகளின் இன்றைய நிலை, சீனா, வட கொரியா, தென் அமெரிக்க நாடுகள் என்று பல நாடுகளில் அரசியல் நேர்மை மிக குறைந்து, லஞ்சம் விளையாடுகிறது. ஆனால் லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தை ஆரம்பத்தில் இருந்து அமலாக்கிய பல வளர்ந்த நாடுகளில் இத்தனை சீரழிவு இல்லை. ஜெர்மனி, ஃபின்லாந் போன்ற நாடுகளின் எம்.பிக்கள் இப்படி பணம் வாங்குவது சாத்தியமில்ல. விதிவிலக்காக யாராவது வாங்கினால், பிறகு வெளியே தெரிந்தால், அவ்வளவுதான். அவன் அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும். சட்டப்படி தண்டனை கிடைக்க பெரும் சாத்தியம்.

///Libertarian,

நேர்மையின்மை சோசியலிசத்தின் விளைவுகள் என்றால் சோசியலிசம் பேசப்பட்ட காலங்களில் இருந்ததைவிட சோசியலிசம் பேசப்படாத தற்போதுதான் ஒழுங்கீனம் அதிகமாக இருப்பது ஏன்? 1947ல் விதைத்த வித்துதான் இன்று ஆலமாமாகியிருக்கிறது இதை மாற்ற நூற்றாண்டாகலாம் ஆனால் சோசியலிசம் பேசிய உடனேயே சீரழிவு வந்துவிட்டதாக கூறிகிறீர்களே அது எப்படி சாத்தியமானது?

இந்தியாவை விடவும், ஜெர்மனி சோசியலிசம் பேசிய நாடு. மேலும் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பிராதனமாக செல்வாக்கு செலுத்தியது. மேலும் கிழக்கு ஜெர்மனி 1949 முதல் 1990 வரையிலும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் இருந்த நாடு.

பிரகாசம்காருவின் நொந்துபோன வார்த்தைகள் வெளிப்பட்ட தருணங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது வாக்குகளை பணத்திற்காக விற்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். சோசலிசம் பேசப்படாத இப்போதுதன் ஓட்டுக்காக பணம் வாங்குவதும் அதிகரித்துள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.///

ஜானி,

Long term effects, cumulative effects என்று சொல்வார்கள். அதுதான் இங்கு. ஓவர் நைட் மாற முடியாது. கிழக்கு ஜெர்மனியில் பின்னாட்களின் ஊழல் சீரழிந்தது. இணைந்த பிறகும் அதன் விளைவுகள் தொடர்ந்தன. ஆனால் மே.ஜெர்மனியின் பலம் மற்றும் இதர தன்மைகளால சமாளிக்க முடிந்தது. சரி, ஃபின்லாந் தான் உலகில், ஊழல் மிக மிக குறைவான நாடு என்று ட்ரான்ஸ்பாரன்ஸி இண்டெர்னேசனல் சொல்கிறது. எப்படி முடிந்தது ? வட கொரியாவையும் தென் கொரியாவையும் ஒப்பிடுங்கள்.

1966 வாக்குகளை விற்க்கவில்லை தான். ஊழல் கான்ஸர் போல அனைத்து துறைகளிலிம் பரவ ஆரம்பித்த காலங்கள் அவை. 20 ஆண்டுகளின் அன்று பெரும் மாற்றம் எப்படி ? அதற்க்கு முன்பு ஏன் அப்படி இல்லை. பல லச்சம் மக்கள் தன்னலமில்லாம்ல, விடுதலை போராட்டத்தில் தியாகம் செய்ய முடிந்த காலங்கள். 20 ஆண்டுகளில் அதே மக்களின் நேர்மை, அர்பணிப்பு, ஒழுக்கம் எப்படி கெட ஆரம்பித்தது ?


முதலீட்டியத்தின் அடிப்படைகள் - 3

லாபம் என்பது பாவமா ?

Functions of profit மற்றும் price theory பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

முதலாளி, சுரண்டல், லாப வேட்டை என்ற் சொல்லாடல்கள், ஒரு எதிர் மறையான,
வில்லத்தனமான அர்த்ததில் மட்டும் இங்கு பொது புத்தியில் ஏற்றப்பட்டு
உள்ளது. ’உபரி மதிப்பை’ தான் சுரண்டி, லாபம் என்று மாற்றி, பிறகு அதுவே
மூலதனம் ஆகிறது என்ற மார்க்சிய பார்வை பழுதுபட்டது. இதை பற்றி எமது
முக்கிய பதிவு இது :

http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html
'உபரி மதிப்பு என்னும் மாயயை'

லாபம் இல்லாமல் யாரும் எந்த காரியத்தையும் எங்கும் செய்வதில்லை. சமூக
சேவை, கலைச்சேவை போன்றவை விதிவிலக்குகள். பொதுவாக சொல்கிறேன்.

ஒரு புதிய தொழில்துறை முதன் முதலில் உருவாகும் போது, போட்டிகள் மிக
குறைவாக இருக்கும். புதிய தொழில் நுட்ப்பம் அல்லது idea / concept அய்
கண்டுபிடித்தவர் அல்லது நிறுவனம், போட்டி இல்லாத ஆரம்ப காலங்களில், மிக
மிக அதிக லாபம் பார்க்கும். காப்பிரைட் சட்டங்கள் சில ஆண்டுகளுக்கு அதை
உறுதி செய்யும். ஆனால் போக போக போட்டிகள் உருவாகி, அதனால் விற்பனை

விலையை படிப்படியாக குறைக்க வேண்டியிருக்கும். லாபமும் அதற்க்கு ஏற்ப
குறைய ஆரம்பிக்கும். (கம்யூட்டர் மற்று செல்பேசி துறைகள் நல்ல உதாரணம்).
ஒரு கட்டத்தில் உற்பத்தில் விலைகே விற்க்க வேண்டிய கட்டாயம் உருவக வாய்ப்பு
உண்டு. இதனால் பெரும் பயன் அடைபவர்கள் வாடிக்கையளார்கள் தான்.
பண்டங்கள் / சேவைகளின் விலை மிக மிக குறைந்து, தரம் மிக மிக உயர்ந்து,
பற்றாக்குறையே இல்லாமல் தாரளமாக கிடைக்கும்.

இதில் முக்கிய அம்சம், புதிய போட்டியாளர்கள் உருவாகுவது. புதிய
முதலீடுகள் மற்றும் போட்டி நிறுவனங்கள் எப்படி சரியான துறை அல்லது
product / services தேர்ந்தெடுப்பார்கள் ? அந்த துறையில் உள்ள ‘ஏகபோக’
நிற்வனத்தில் அப்ரிதமான லாபத்தை பார்த்துதான். இந்த ‘தகவலை’
(price signals) சரியான முறையில் சந்தையில் உள்ள அனைத்து playersக்கும்
கொண்டு செல்லுவதே, லாபத்தின் முக்கிய பணி. Information asymmetry
முடிந்த வரை குறைவாக உள்ள சந்தைகளே mature markets எனப்படுவது.

இன்று மிக மிக மலிவாக சந்தையில் கிடைக்கு அனைத்து பொருட்கள் / சேவைகளும்
இப்படி, இதே வழியில் வந்தவைதான். உப்பு கூட நல்ல உதாரணம். Salary என்ற
சொல், salt இல் இருந்துதான் உருவானது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்,
உட்பிரதேசங்களில் உப்பு மிக அரிதான பண்டம். ஒரு கலாத்தில் ’பணமாக’ அது
பயன்படுத்தப்படும் அளவிற்க்கு மதிப்பு இருந்தது. தொழில் புரட்சிக்கு
பின், மேலே சொன்ன முறையில் தான் இன்று உலகெங்கிலும், தாரளமாக, மலிவாக
கிடைக்கிறது. அதன் கடை பற்றி விரிவாக பேச முடியும்

சரி, ஏற்கெனவே பல ஆயிரம் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் ஒரே துறையில்,
ஒரே வகையான பண்டங்களை / சேவைகள் உற்பத்தி செய்து, சந்தையில் கடும் போட்டி
நிலவும் சூழல் பற்றி பார்ப்போம். திடிரென பற்றாக்குறை உருவாகிறது என்று
வைத்துக்கொள்வோம். (அதற்க்கு பல காரணிகள் இருக்கலாம் : மூலப் பொருட்கள்
தட்டுப்பாடு, மின் தடை, போதிய தொழிலாளர்கள்(skilled labour) இல்லாமை,
போன்றவை). உடனே சந்தையில் அந்த பண்டத்தை வாங்க பலரும் போட்டி போடுவர்.
ஆனால் விற்பனைக்கு குறைந்த அளவே கிடைப்பதால், உற்பத்தியாளார்கள் மற்றும்
வியாபரிகள் முடிந்த வரை விலையே எற்றி நல்ல லாபம் பார்ப்பார்கள். இந்த
விலை உயர்வு, உடனடியாக ஒரு முக்கிய தகவலை அனைத்து playersக்கும்
அறிவிக்கும். இந்த பண்டம் உற்பத்தி செய்தால், லாபம் மிக அதிகம்
கிடைக்கும் என்பதை. எனவே பலரும் அதே பண்டத்தை மிக அதிகமாக உற்பத்தி
செய்ய முனைவார்கள். பிறகு படிப்படியாக போட்டி அதிகமாகி, தேவையை
விட சப்பளை அதிகாமாக்கும் சூழல் உருவாகி, விலை குறைய ஆரம்பிக்கும்.

இது ஒரு வகையான see-saw விளையாட்டு போல் தன்னைதானே சமன்(balance) செய்து
கொள்ளும் mechanism. இதற்க்கு இணையான வேறு ஒரு மெக்கானிசமும் இதுவரை
மனிதன் கண்டுபிடிக்கவில்லை. இதற்க்கு பெயர் தான் ’சந்தை’. இதில் சுதந்திர
சந்தை தான் முக்கிய சூட்சமம். அதாவது அரசுகளின் கட்டுப்பாடுகள் மற்றும்
அதிக வரிவிதிப்பு, மூலம் எந்த ஒரு தடையும் (அல்லது distortionகளும்)
இல்லாத நிலை வேண்டும். இல்லாவிட்டால் அது சுதந்திர சந்தையாக இருக்காது.
போட்டிகள் உருவாகி விலையை குறைக்க முடியாது. இந்தியாவில் 1991வரை
அதுதான் நடந்தது.

நஸ்டம் பற்றி பேசலாம். இதற்க்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. மேலே
கண்தற்க்கு நேர் எதிரான விளைவுகள், செயல்பாடுகளை உருவாக்கும். ஒரு துறை
அல்லது பண்ட உற்பத்தியில் ஈடுபடும் நிறவனங்கள் தொடர்ந்து நஸ்டம் அடையும்
சூழலில், இந்த நஸ்டம் பற்றிய தகவல் சந்தையில் உள்ள அனைத்து playersக்கும்
சென்றடையும். புதிதாக முதலீடு செய்பவர்கள் மற்றும் ஏற்கெனவே அதே துறையில்
உள்ளவர்கள் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்ப்பர். காரண்ம், நஸ்டம் பற்றிய
தகவல். படிப்படியாக புதிய முதலீடுகள் உருவாகவது நின்று போகும். ஆனால் ஒரு
கட்டத்தில், உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டு, பற்றாக்குறை உருவாகும்.
லாபம் கிடைக்க ஆரம்பித்து, பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க, லாபமும் உயர
ஆரம்பிக்கும். முன்னர் நாம் பார்த்த நிகழ்வுகள் மறுபடியும் உருவாகும். It
is a perfectly self correcting and self regulating mechanism, provided
there are no distortions caused by govt regulations.

ஏகபோகம், அதாவது monopoly என்று ஒரு பயங்காட்டல், இடதுசாரிகளால் பல
ஆண்டுகளாக செய்யப்படுகிறது. ஒரு நிறுவனம், ஒரு குறிப்பிட பொருளுக்கான
சந்தையின் பெரும் பகுதியை கைப்பற்றி, பிறகு தங்கள் இஸ்டபடி மிக மிக அதிக
விலை வைத்து, கொழுத்த லாபம் ஈட்டி, மக்களை முழுவதும் அதன்
கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் என்ற ‘கருத்து’ ; இதற்க்கு மாற்று
போட்டிகள் தான். வேறு வழிகளான அரசின் கட்டுபாடுகள், தடைகள் மிக
எதிர்மறையாகத்தான் வேலை செய்துள்ளன. புதிய போட்டிகள் சுலபமாக உருவாக
தடை செய்யாமல் இருந்தாலே போதும். விலை குறையும். அதுதான் 1991க்கு பின்
இந்தியாவிலும், கடந்த 150 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளிலும் நடந்தது...