ஊழலின் ஊற்றுகண்

இந்தியாவில் பொது வாழ்க்கையில் நேர்மை இவ்வளவு தூரம் சீரழிந்தற்க்கு 1991 வரை இங்கு இருந்த ‘சோசியலிச’ பாணி பொருளாதார கொள்கைகள் தான் அடிப்படை காரணம். அதன் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. மேலும் பல பத்தாண்டுகளில் படிப்படியாக நம் நேர்மை அழிந்தது. 1966இல் பிராகசம் அவர்கள் தான் ஏன் இன்னும் உயிர் வாழ வேண்டும் என்று நொந்து பேசியதை பற்றி ராஜாஜி எழுதியது :

http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

இந்த ’சோசியலிச எச்சங்கள்’ பற்றி ’சிசுபாலன்களுக்கு’ புரியாது. இதெல்லாம் போலி சோசியலிசம் அல்லது ’……’ என்று மட்டும் கதைப்பார்கள். அது என்ன எழவோ, அதன் விளைவை பற்றி சுதந்திரம் வந்து 20 ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தலைவர் சாக வேண்டும் என்று நொந்து புலம்பும் அளவிற்க்கு நிலைமை சீரழிய ஆரம்பித்துவிட்டது. இன்று உச்சமடைந்து உள்ளது. இதெல்லாம் புரிந்து கொள்ள ‘முன் முடிவுகளற்ற’ திறந்த மனம் வேண்டும்.

இறுதியாக அந்த கட்டுரையில் ராஜாஜி, நேருவின் கொள்கைகள் பற்றி எழுதியது :

Sri Jawaharlal Nehru, urged by patriotic impulse, and early
indoctrination committed the blunder of taking India out of
the path of humility and put it in the race for industrialization,
and did all he could to transform our ideology into that of
Soviet Russia. This was the fatal step that brought us to the
present position out of which it requires not only wisdom but
indomitable courage to save India. Social justice and removal
of disparities of opportunity and equitably distributed welfare
are great and worthy ends. But the fatal mistake was the plan
to achieve this by the shortcut of heavy borrowing and central
planning and permit-license-regime which has brought in its
wake all that makes Sri Sri Prakasa lament so bitterly.

வினவு தளத்தில் இதை பற்றி நான் நிகழ்த்திய ஒரு உரையாடல் :

johny,

உமக்கான பதில் சுவாமிநாதன் அங்கலேஸ்வரைய அய்யர் எழுதிய கட்டுரையில் உள்ளது. இந்தியாவில் தான் எம்.பிக்கள் ஓட்டு போட பணம் வாங்கினால், அது சட்டபடி குற்றமல்ல. மேலை நாடுகளில் அப்படி இல்லை. கீழே நான் இட்ட பின்னூட்டத்தின் இறுதியில் மிக தெளிவாக அய்யர் எழுதுகிறார் :

..Last week’s row in Parliament is distracting attention from the real job that lies ahead. Former prime minister Narasimha Rao survived a confidence vote by acquiring the support of three MPs of the Jharkhand Mukti Morcha. These gentlemen were naïve enough to deposit Rs 1 crore apiece in cash in their bank accounts, and were caught by the police. But the Supreme Court then held that voting for any reason whatsoever in the Lok Sabha was covered by privileges of Parliament, which gave MPs immunity from the normal laws of the land. So, MPs taking cash for votes could not be prosecuted.

When the Constitution was formulated, it provided that Parliament should codify its own privileges, laying down precisely which acts would be immune from prosecution or civil suits. More than 60 years later, Parliament has not yet done so. MPs of all parties prefer their existing immunity for all actions. This is the real scandal, and no party or newspaper is highlighting it.

We need to get beyond finger pointing to true morality and justice. The Lok Sabha needs to codify its privileges swiftly, providing immunity only for free speech in Parliament, not for any other action such as voting for cash or office. Indeed, it should provide that all criminal cases against MPs are heard first and foremost, so that parliamentarians are held to a higher standard than others, not a lower one. If the BJP and CPM are serious about improving political morality, they must launch an immediate campaign to codify and narrow parliamentary privileges. If they fail to do so, their talk of morality will stand exposed as pure hypocrisy.

//சோசலிசம் பேசிய காலத்துல இது மாதிரி நடந்திருந்தால் சொல்லுங்க.///

பிரகாசம்காரு, தான் இதையெல்லாம் பார்த்துகொண்டு வாழ்வதை விட சாக வேண்டும் என்று நொந்து போய் பேசியதை பற்றி, ராஜாஜி அன்று எழுதியதை (மேலே) படிக்கவே இல்லை போல. அல்லது புரியலையா ? அன்று விதைத்த வித்துக்கள் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளன. அந்த வித்துகள் ‘சோசியலிசம்’ என்ற பெயரால் தான் அன்று அழைக்கப்பட்டன. அதன் cumulative effects இன்றும் உள்ளது. ஒரே வருடத்த்தில், நூற்றாண்டில் சீராக முடியாது. மாசுபட்ட நிலத்தடி நீர் சரியாக எத்தனை வருடங்கள் பிடிக்கும் ? அல்லது நுற்றாண்டுகள் பிடிக்கும். அதே போல் தான் மனோபாவ மாசுகளும்.

//ஒப்பந்தம் இந்திய நலனுக்கு உகந்ததுன்னா ஏன் காசு கொடுக்குற நிலை வருது.//

இந்திய நலனை பற்றி யார் கவலை பட்டாங்க. மேலும் பலருக்கு இதன் அவசியம் புரியவில்லை. மின் பற்றாக்குறை பற்றி அக்கரை இல்லை. அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒரே நோக்கம் மட்டும் தான். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை பாரளுமன்ற ஒப்புதல் பெற காங்கிரஸ் தனக்கு நன்கு பழக்கப் பட்ட ‘முறையில்’ வெற்றிகரமாக செயல்பட்டது. உண்மைய சொன்னால், இந்திய நலன் கருதிதான் மன்மோகன் சிங் இத்தனை பிடிவாதமாக அதை நிறைவேற முயன்றார். அவர் சூட்கேஸ் வாங்குபவர் அல்ல. அமெரிக்க கைக்கூலியும் அல்ல. he is a realist and visionary who know ground reality and the our follies in the past better than any of us here. He is the one who opened up India in 1991 and saved us from bankruptcy and disaster. but for his vision and determination, this chat here would not be happeining here. Indian rupees would have crumbled (like the Zimabwen dollar now) and our imports of petro products would have stopped in 1991 and India would have collapsed like USSR in 1992. difficult for you to picturise. nevertless that is the fact, which you refuse to look at.

///Libertarian,

இதுக்கும் சோஷலிசத்துக்கும் என்ன சம்பந்தம்///

johnny,

மிக எளிமையாக சொல்கிறேன். 1947 வரை நம்மிடம் இருந்த நேர்மை, முக்கியமாக அரசியலில் இருந்த நேர்மை, போகப்போக குறைந்தது. அன்று ஒரு எம்.பி இப்படி லஞ்சம் வாங்குவது மிக மிக மிக அபூர்வம். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு தியாகிகளாலும், நேர்மையாளர்களாலும் நிரம்பியிருந்தது. இன்று மிக சீரழிந்துவிட்டது. இது சோசியலிச பாணி கொள்கைகளில் விளைவுகள். இதை பற்றி தான் ராஜாஜி எழுதியதை எடுத்துகாட்டியிருந்தேன்.

எம்.பிக்கள் பணம் வாங்கும் அளவிற்க்கு அவர்களின் நேர்மை கெட்டதற்க்கு இந்த சோசியலலிச பாணியில் நிகர விளைவுகளே காரணம். பொதுவாகவே சோசியலிசம் / கம்யூனிசம் என்ற பெயரில் அரசு எந்திரம் மற்றும் அமைச்சர்களிடம் அதிகாரம் மிக மிக அதிகமாக குவிந்த நாடுகளில், போக போக ஊழல் மலிந்து சீரழிவு உருவானது. பழைய USSR இல் இருந்த அனைத்து நாடுகளின் இன்றைய நிலை, சீனா, வட கொரியா, தென் அமெரிக்க நாடுகள் என்று பல நாடுகளில் அரசியல் நேர்மை மிக குறைந்து, லஞ்சம் விளையாடுகிறது. ஆனால் லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தை ஆரம்பத்தில் இருந்து அமலாக்கிய பல வளர்ந்த நாடுகளில் இத்தனை சீரழிவு இல்லை. ஜெர்மனி, ஃபின்லாந் போன்ற நாடுகளின் எம்.பிக்கள் இப்படி பணம் வாங்குவது சாத்தியமில்ல. விதிவிலக்காக யாராவது வாங்கினால், பிறகு வெளியே தெரிந்தால், அவ்வளவுதான். அவன் அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும். சட்டப்படி தண்டனை கிடைக்க பெரும் சாத்தியம்.

///Libertarian,

நேர்மையின்மை சோசியலிசத்தின் விளைவுகள் என்றால் சோசியலிசம் பேசப்பட்ட காலங்களில் இருந்ததைவிட சோசியலிசம் பேசப்படாத தற்போதுதான் ஒழுங்கீனம் அதிகமாக இருப்பது ஏன்? 1947ல் விதைத்த வித்துதான் இன்று ஆலமாமாகியிருக்கிறது இதை மாற்ற நூற்றாண்டாகலாம் ஆனால் சோசியலிசம் பேசிய உடனேயே சீரழிவு வந்துவிட்டதாக கூறிகிறீர்களே அது எப்படி சாத்தியமானது?

இந்தியாவை விடவும், ஜெர்மனி சோசியலிசம் பேசிய நாடு. மேலும் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பிராதனமாக செல்வாக்கு செலுத்தியது. மேலும் கிழக்கு ஜெர்மனி 1949 முதல் 1990 வரையிலும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் இருந்த நாடு.

பிரகாசம்காருவின் நொந்துபோன வார்த்தைகள் வெளிப்பட்ட தருணங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது வாக்குகளை பணத்திற்காக விற்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். சோசலிசம் பேசப்படாத இப்போதுதன் ஓட்டுக்காக பணம் வாங்குவதும் அதிகரித்துள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.///

ஜானி,

Long term effects, cumulative effects என்று சொல்வார்கள். அதுதான் இங்கு. ஓவர் நைட் மாற முடியாது. கிழக்கு ஜெர்மனியில் பின்னாட்களின் ஊழல் சீரழிந்தது. இணைந்த பிறகும் அதன் விளைவுகள் தொடர்ந்தன. ஆனால் மே.ஜெர்மனியின் பலம் மற்றும் இதர தன்மைகளால சமாளிக்க முடிந்தது. சரி, ஃபின்லாந் தான் உலகில், ஊழல் மிக மிக குறைவான நாடு என்று ட்ரான்ஸ்பாரன்ஸி இண்டெர்னேசனல் சொல்கிறது. எப்படி முடிந்தது ? வட கொரியாவையும் தென் கொரியாவையும் ஒப்பிடுங்கள்.

1966 வாக்குகளை விற்க்கவில்லை தான். ஊழல் கான்ஸர் போல அனைத்து துறைகளிலிம் பரவ ஆரம்பித்த காலங்கள் அவை. 20 ஆண்டுகளின் அன்று பெரும் மாற்றம் எப்படி ? அதற்க்கு முன்பு ஏன் அப்படி இல்லை. பல லச்சம் மக்கள் தன்னலமில்லாம்ல, விடுதலை போராட்டத்தில் தியாகம் செய்ய முடிந்த காலங்கள். 20 ஆண்டுகளில் அதே மக்களின் நேர்மை, அர்பணிப்பு, ஒழுக்கம் எப்படி கெட ஆரம்பித்தது ?


9 comments:

K.R.அதியமான் said...

அமெரிகாவிற்க்கு ‘அடிமையாக’ இருப்பதை கடுமையாக எதிர்க்கும் காம்ரேடுகள், ஒரு காலத்தில், இந்தியா, சோவியத் ரஸ்ஸியாவிற்க்கு ‘அடிமையாக’ இருக்க விழைந்தனர்.
இந்த அணு ஒப்பந்தத்தின் அடிப்படை மிக எளிமையானது. டெக்னாலஜி மற்றும் தாதுபொருட்களை விற்பவர்கள் சில நிபந்தனைகளை விதிக்கின்றனர் : இது ராணுவ செயல்பாடுகளுக்கு / அணு குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. மின் உற்பத்திக்கு மட்டும் தான் அனுமதி. மேலும் இன்ஸுரன்ஸ் அளவு உலக அளவை விட குறைவு போன்றவை. நமக்கு கடும் மின் தட்டுப்பாடு. ‘சரக்கு’ வேண்டுமானால், விற்பவனின் நிபந்தனைக்கு உட்பட்டு வாங்கிக்கொள்ளலாம். இல்லாவிட்டால் இப்படியே புரட்சி பேசிக்கொண்டு இருட்டில் வாழலாம். the choice is ours and no compulsion from anyone about this. take or leave it deal. அவ்வளவுதான் விசியம்.

ஆனால் இந்த ராணுவ கூட்டு ஒப்பந்தம் எல்லாம் தவறு மற்றும் தேவை இல்லாத வேலை தான். லிபர்ட்டேரிய கோட்ப்பாடுகளுக்கு மாறானது. அதிகார மையங்களை உருவாக்கி, ஏகாதிபத்திய பாணிக்கு வழி செய்வது. அதை விட வெட்டி செலவுகள் இவை. செய்ய வேண்டிய அத்தியாவச செலவுகளை விட்டு, military industrial complex crony capitalistsகளின் நலன்களுக்கு வரி பணத்தை செலவிடும் அயோக்கியத்தனம்.

K.R.அதியமான் said...

இந்தியாவில் பாரளுமன்ற ஜனனாயகம் சீரழிந்து, கேலிக்கூத்தாகிவிட்டது. பல விரிவான காரணிகளை பற்றி எமது பதிவுகளில் எழுதியுள்ளேன். சோசியலிச காலங்களின் நிகர விளைவு என்று வாதாடியுள்ளேன்.

வினவு தோழர்களின் நோக்கம் வேறு. இந்தியாவில் சீரழிந்த்தால், இந்த அமைப்பு முறையே முற்றிலும் தவறானது, பாரளுமன்ற ஜனனாயக முறையே வெறும் பித்தலாட்டம். பூஸ்வா ஏமாற்று வேலை என்று அப்பாவி வாசகர்களை நம்ப வைப்பது. இதற்கெல்லாம் மாற்றாக, தொழிலாள வர்க ‘சர்வாதிகாரம்’ தான் சரியானது என்று பிரச்சாரம் செய்ய ஒரு உத்தி. அந்த அமைப்பில், ஓட்டு பொறுக்கிகள், எதிர் கட்சிகள், ஓட்டுக்கு பணம், விவாதங்கள், மாற்றுக்கருத்துக்கள் இருக்க மாட்டா.

பாரளுமன்ற ஜனனாயகம் மிக வெற்றிகரமாக, நன்கு செயல்படும் அய்ரோப்பிய நாடுகளை பற்றி தப்பி தவறி பேசவே மாட்டார்கள். இதில் இருக்கும் தவறுகளை ‘மட்டும்’ தொடர்ந்து பிரச்சாரம் செய்வர். இந்தியாவில் மற்றும் வளரும் நாடுகளில் இந்த அமைப்பு சரியாக, ஒழுங்காக செயல்படுவதில்லை. எனவே இந்த அமைப்பே தவறு / அயோக்கியத்தனம். இதுதான் இவர்களின் பிரச்சார டெக்னிக். ஆனால் இனி இதெல்லாம் இங்கு எடுபடாது தோழர். ஏமாற மக்கள் இனி தயாராக இல்லை. நன்கு விசியம் தெரிந்த நடுத்தர வர்கம் இன்று பெரிதாக உருவாகிவிட்டது. அதனால் தான் இந்த நடுத்தர வர்கத்தை பார்த்து இத்தனை வயித்தெறுச்ச்சல் இவர்களுக்கு !!!

K.R.அதியமான் said...

’சோவியத் ரஸ்ஸியா, ஸ்டாலினுக்கு பின் போலி கம்யூனிஸ்டுகளினால் சீரழந்துவிட்டது ; இதர ’கம்யூனிச பாணி’ சோசியலிச நாடுகள்லும் அப்படியே’ : இதுதான் வினவு தோழர்களின் ஒரே பல்லவி. ஆனால் இதே ’லாஜிக்’ முதலாளித்துவ ஜனனாயக அமைப்புகளுக்கும் பொருந்தும் என்ற மறுபக்கத்தை பற்றி பேச மாட்டார்கள். அதாவது போலி முதலாளிகள், போலி ஜனனாயகவாதிகளால் தான் இந்தியா சீரழிந்தது. இது சித்தாந்தத்தின் குற்றமல்ல, போலிகளில் குற்றம் என்ற வாதம்.

’உண்மையான’ ஜனனாயகவாதிகள், ’உண்மையான’ முதலாளிகள் நன்கு செயல்படும் பல அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிட வேண்டும். (உங்களுக்கு மட்டுதான் ’போலிகள்’ என்று பேசத் தெரியுமா என்ன ? நாங்களும் பேசுவோம் !!!! )

அப்பறம், இந்த post – stalin Russiaவிற்க்கு ஒரு நல்ல பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள் வினவு தோழர்கள் : ‘சமூக ஏதாதிப்பத்தியம்’ ; அது என்ன எழவோ. ஒரு 3 கோடி பேர்களை ’வர்கப்போர்’ என்ற பெயரில் போட்டு தள்ளிவிட்டு, ’ஸாரி, implementationஇல் சின்ன தவறு நடந்து விட்டது’ என்று சர்வ சாதாரணமாக அடுத்த விசியத்துக்கு போவாக இந்த கருணாமூர்த்திகள் !!!

K.R.அதியமான் said...

Q2A,

உங்க கேள்விகளுக்கு நிதானமாக விடை அளிக்கிறேன். ஜான் பெர்கின்ஸ் நூலை புரட்டியிருக்கிறேன். முழுசா இன்னும் படிக்கவில்லை. அதை பற்றி சுருக்கமாக சொன்னால் : அவை விதி விலக்குகள் தான். எல்லா நாடுகளிலும், எல்லா நிறுவனங்களும் அப்படி செய்வதில்லை. தேவையும் இல்லை. உதாரணமாக இந்த உரையாடலை சாத்தியாமாக்கியிருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், இண்டெல், அய்.பி.எம், மொடொரோலா, சிஸ்கோ, ஹெச்.பி, போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மேல் கொண்ட நூலில் உள்ள அக்கிரமங்களை செய்யது சாதிக்கவில்லை.

எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் கிரிமினல்கள், அயோக்கியர்கள் ஒரு குறிப்பிட்ட சதம் இருப்பார்கள் தாம். அவர்களின் செயல்களை கொண்டு அந்த நாடே அப்படி தான் என்று சொல்வது பொதுப்படுத்துவது.

எனக்கு மிகவும் பிடித்த இந்திய தலைவர் ராஜாஜி. (இத்தனைக்கும் நான் ஒரு தி.க குடும்ப பிண்ணியில் இருந்து வந்தவன் !). அவரை பற்றி எமது பிளாகுகளில் விரிவாக எழுதியுள்ளேன். பிடிக்காத தலைவர் : இந்திரா காந்தி.

தண்ணீர் பற்றாகுறை : ஜனத்தொகை இன்று 110 கோடிகள். தொடர்ந்து ஏறுகிறது. அன்று 80 கோடி தான். எப்படியும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும். மேலும் மழை குறைந்து, குளங்கள், நிலத்தடி நீர் மிக கீழே சென்று கொண்டிருக்கிறது. கிராம குளங்கள், குட்டைகளை தூர் வாரி ஒழுங்கா பராமரிப்பது 50 ஆண்டுகளில் நின்று போய்விட்டது. மேலும்…

K.R.அதியமான் said...

Q2A,
விவசாயம் உண்மையான முதலாளித்துவ முறைக்கு படிப்படியாக, பல பத்து வருடங்களில், வளர்ந்த நாடுகளில் நிகழ்ந்த முறையில், அரசின் தலையிடுகள், உச்ச வரம்பு சட்டங்கள் இல்லாத நிலையில் இருந்திருந்தால், இன்று இங்கு விவசாயத்தில் பிரச்சனைகள் இருந்திருக்காது :
http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

///7.மக்களாட்சி என்றால் என்ன? மக்களின் நன்மைக்காக மட்டுமே அனைத்து அரசுகளும் செயல்படுகின்றனவா? மக்களின் எதிபார்புகளை அரசு பூர்த்தி செய்கிறதா? யாருடைய கோரிக்கைகள் முதன்மை படுத்த படுகின்றன ஏன்?///

இந்திய நிலைய வைத்துகொண்டு இதை கேட்கிறீர்கள். உண்மையான மக்கள் ஆட்சி மே.அய்ரோப்பிய நாடுகள், ஸ்காண்டினேவிய நாடுகளில் ஏறக்குறைய முழு அளவில் உள்ளது. நெதர்லாந்த் மற்றும் ஃபின்லாந் நாடுகள் உலகின் மிக சிறந்த நாடுகள் என்று கருதப்படுகின்றன. அங்கு உள்ள ‘மக்களாட்சி முறையை’ தான் வழிமொழிகிறேன். அவை போல லிபரல் ஜனனாயகமும், பொருளாதார வளர்சியும் இந்தியாவில் உருவாக வேண்டும் என்பதே எம் இலட்சியம் / நோக்கம். சரி, நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுங்களேன். மக்கள் சக்தி கட்சி என்று ஒரு சிறு கட்சி இங்கு தேர்தலில் போட்டியிடுகிறது. பல தோழர்கள் அங்கு. அடிப்படை கொள்கை நேர்மை. ‘இந்திய நேர்மை கட்சி’ என்று பெயரிட சொல்லி கொண்டிருந்தேன். நேர்மை தான் நமக்கு மிக மிக மிக அடிப்படை தேவை. வலது / இடது கொள்கைகள் அப்பறம் தான். அடிப்படை நேர்மை, அறம் இல்லாமல் எந்த பயனும் இல்லை ; ஜனனாயகம் வெற்றி பெறாது.

//.பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தரமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் உள்ளவையா அல்லது நாட்டுக்கு நாடு வேறுபடுமா? ஆம் என்றால் ஏன் உயிரிழப்பு ஏற்படுகிறது? இல்லை என்றால் ஏன் வேறுபடுகின்றன?///

ஆம் / இல்லை என்று பதில் சொல்ல முடியாது. அது நிறுவனங்களை பொருத்து. எந்த நாட்டை சேர்ந்த ’பன்னாட்டு நிறுவனத்தை’ சொல்கிறீர்கள் ? சீனா பண்ணாட்டு நிறுவனங்கள் ஒரு வகை. அதிலிம் பல தரங்களில் உள்ளன. ஆனால் தொழிற்சாலைகள் அமைந்துள்ள host countries இன் சட்டங்கள், அவை எத்தனை நேர்மையாக, ஒழுங்காக அமலாக்கப்படுகின்றன என்பதை பொருத்தே விளைவுகள். உதாரணமாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சட்டங்கள் இந்தியாவில் பல காலங்களாக ஏட்டளவில் தான் உள்ளன. சட்டம் நன்றாக, போதுமானதாக தான் இருக்கிறது. இங்கு உள்ள லஞ்ச / ஊழல் கான்ஸ்ர் நோயை போல் புரையோடி, நாட்டின் அனைத்து துறைகளையும் சீரழித்து விட்டதால், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் ஊழல் மிக மலிந்து, சட்டங்களை அமலாக்காமல், ஏய்ப்பவர்களுக்கு துணை போகிறது. இதற்க்குபன்னாட்டு நிறுவனங்கள் தான் காரணமா அல்லது நம் நேர்மைதான் காரணமா ? மேலும்..

K.R.அதியமான் said...

Libertarian

/// நான் தொழிற்சங்க பிரதிநிதியாக இருந்து தொழிலாளர்களுடன் இருக்கிறேன். ஆனால் நண்பர் ஜோதிஜி முதலாளியாகவும், பணிநேரத்தில் தொழிலாளியோடு தொழிலாளியாகவும் இருப்பதால்///

சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை நான் முன்மொழிவதாலேயே நான் தொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதி, ‘முதலாளிகளின்’ நலன்களை மட்டுமே ஆதரிப்பவன் என்று கருதுவது போல் உள்ளது.
கம்யூனிச அமைப்பு, சோசியலிச அமைப்பு, முதலாளித்துவ அமைப்பு, நிலப்பிரவுத்தவ அமைப்பு என்று எல்லா அமைப்புகளிலும் தொழிலாளர்கள் தொழிலாளர்களாகவே தம் பணிகளை செய்து, சம்பளம் பெறுவார்கள். இவற்றில் அவர்களின் நலன் மற்றும் வாழ்க்கை தரம் மிக உயர சாத்தியமான அமைப்பு சுதந்திர சந்தை பொருளாதார அமைப்பு தான் என்பதே எம் வாதம். Proof of pudding is in eating என்ற முதுமொழிக்கேற்ப, தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் எந்த அமைப்பில் படிப்படியாக உயர்ந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களில் இருந்து பார்த்தாலே தெரியும்.

இன்றைய வட கொரிய தொழிலாளர்களின் நிலையுடன் தென் கொரிய தொழிலாளர்களின் நிலையை ஒப்பிட்டாலே போதும்.
ஸ்டாலினிய ரஸ்ஸியாவில், மாவோவின் சீனாவில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் ‘நன்றாக’ இருந்தது என்பவர்கள் முழு ஆதாரங்களையும் பார்ப்பதில்லை. மிக முக்கியமாக அடிமைகளாக, பயத்துடன் அன்று அங்கு வாழ்ந்தார்களா, அல்லது இன்றை மே.அய்ரோப்பா போல சுதந்திரத்துடன், அதே சமயம் நல்ல வாழ்க்கை தரத்துடன் வாழ்ந்தார்களா என்பதே முக்கிய விசியம்.

விலைவாசி உயராமல் இருப்பது, மிகுதியான வேலை வாய்ப்பு : இவை இரண்டும் முதலில் கிடைத்தாலே இந்திய தொழிலாளர்களுக்கு போதுமானதாக இருந்த காலங்கள் இங்கு 80கள் வரை இருந்தது. (நண்பர் சித்திரகுப்தன், நீங்கள் 1961இல் பிறந்தவர். இதை பற்றி அனுபவரீதியாக எங்களை விட அதிகம் தெரிந்திருக்கிம். 1980இல் வெளி வந்த ’வறுமையின் நிறம் சிகப்பு’ படம் இன்று பொருந்துமா ?).
’உயர்ந்த கொள்கை லட்சியங்கள்’ மட்டும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது. முக்கியமாக இந்தியாவில் 1991க்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள், மற்றும் கோசங்களின் விளைவுகளையும், தென் கொரியா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகள் அந்த காலங்களில் கடைபிடித்த கொள்கைகளின் விளைவுகளையும் ஒப்பிட்டால் போதும்.

K.R.அதியமான் said...

Good for you Nammy. these are real questions which need correct
answers.
To start with, India has / had crony capitalism instead of real capitalism.
I have written enough about this in my blogs :
http://athiyaman.blogspot.com/2006/02/why-indians-became-cynical_114041607453064093.html
http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html
http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html
Causes for the 2008 global crisis :
http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html
and yes, poverty is worse in BRMU states. while states like
TN are much better. who is responsible ?
and what solutions do you propose ? back to pre-1991
license raaj, tight controls, a closed economy ,etc ?
and US deficts and artifical propping of USD by Asian exporting
nations are major reasons for the imbalances in the system :

K.R.அதியமான் said...

பாஸ்கர்,
1991இல் அந்நிய செலவாணி இரண்டு வார இறக்குமதிக்கும் மட்டும் போதுமானதாக அபாயகரமான நிலையில் இருந்தது. இன்று பல நூறு பில்லியன் டாலர்கள் கையிருப்பு. அன்று ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்துக்கு விழும் அபாயம் மிக அதிகமாக இருந்தது. அதாவது ஒரு டாலருக்கு நிகராக சுமார் 2000 ரூபாய் அல்லது இன்னும் மோசமாக வீழ்ந்திருக்க வாய்ப்பு மிக மிக அதிகம். ரஸ்ஸிய் ரூபிள் 1992க்கு பிறகு கடுமையாக வீழ்ந்ததை போல் ஒரு situation. இதிலிருந்து மீண்டு வர 1991 பட்ஜெட்டில் மன்மோகன் சிங் செய்தது : immediate floating of rupee in the current account (and not in capital account), allowing foreign investments into many sectors and stock markets, that is free flow thru FDI and FII, reduction of import duties and controls, reduction of many other tariffs and excise duties, trade liberalisation and most crucial decision of abolishing industrial licensing in one go. Dramatic actions which saved us from doom and destruction. இவை பற்றி விரிவாக எழுதிய ஒரு முக்கிய பதிவை பற்றி, இந்த அமசங்கள் எதை பற்றியும் பேசாமல், அமெர்க்க ஏகாதிபத்தியம், ஊழல் தலைவர்கள் என்று மட்டும் ‘கருத்தாக’ மீண்டும் மீண்டும் ஒருவர் சொல்லும் போது, பொறுமை இழந்து sheer nonsense என்றுதான் சொல்ல முடியும். ஒற்றை வரியில் இத்தனை சிக்கலான விசியங்களை பற்றி ‘கருத்து’ சொல்வது இங்க மட்டும் தான் முடியும். அறிஞர்கள் சபைகளில் அப்படி செய்ய முடியாது !

ஊழலுக்கும், பொருளாதார சுதந்திரத்திற்க்கு இருக்கும் உறவை பற்றி ஒரு விரிவான ஆய்வு சுட்டியை எத்தனை முறை அளித்தும், அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதுதான் ‘ஜனனாயகமா’ ? hitmanகள் எத்தனை சதவீத நிறுவனங்கள் பயண்படுத்துகின்றன என்று கேட்டால், இன்னும் தகவல் வெளிவரவில்லை என்று sweeping assumption by himself. முழுசா இந்த உரையாடல்களை படித்து பாருங்க.

sundar said...

Rajaji was great in several aspects,but he was also human and did a great blunder in ganging up against Kamaraj and Congress.He thus paved way for un principled alliances in 1967 by bringing foes like communists,Muslim league,Swantantra and DMk with the sole objective of defeating Congress.Unfortunately his farsight failed when he had to reverse his opinion about Kazhagams in two years.But the downslide and implication for the coutry was disastrous