கல்கட்டா, ரங்கூன், சிங்கப்பூர் : ஒரு ஒப்பீடு

கல்கட்டா, ரங்கூன், சிங்கப்பூர் : ஒரு ஒப்பீடு

1940 வ‌ரை சிங்க‌பூர், ர‌ங்கூன், க‌ல்க‌ட்டா மூன்றும் ஆங்கில‌
கால‌னிய‌ சாம்ராஜ்ய‌த்தின் மூன்று முக்கிய‌ துறைமுக‌ ந‌க‌ர‌ங்க‌ள்.
மூன்றும் ஏறக்குறைய சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தனவாக
1940வரை இருந்தன. ஏறக்குறைய ஒரே அளவு வளர்சி மற்றும்
வாணிபம் அந்த துறைமுகங்கள் மூலம் நடைபெற்றன.

இரண்டாம் உலக்ப்போரின் விளைவாக, ஆங்கிலேய காலனியாதிக்கம்
சரிந்து, பின் மூன்று நகரங்களும் சுதந்திர நாடுகளின் துறைமுக
நகரங்களாக உருமாற்றாம் ஆயின.

60 ஆண்டுகளுக்கு பின் இன்று இம்மூன்று நகரங்களையும் ஒப்பீட்டால் :
சிங்கபூர் மிக மிக அதிக வளம் பெற்று, ஒரு உயர்தர வளர்ந்த நாட்டின்
துறைமுக நகராக ஜொலிக்கிறது. 1940உடன் ஒப்பிட்டால் இன்று அங்கு
வாழ்க்கை தரம் மிக மிக அதிகம். முக்கிய‌ கார‌ண‌ம் அங்கு க‌ட‌ந்த‌
60 ஆண்டுக‌ளாக‌ சுத‌ந்திர‌ ச‌ந்தை பெருளாதார‌ கொள்கைக‌ள், free port,
கூட்டாட்சி ம‌ற்றும் சுத‌ந்திர‌ம்.

ரங்கூன் (இன்று யாங்கூன் என்று பெயர் மாற்றம்) ஒரு
கொடுமையான ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ். 1948முதல்
அன்னிய வெறுப்பு (xenophobia ) மிக அதிகம் கொண்டிருந்த ஒரு நாட்டின்
முக்கிய நகரம். அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் நசுக்கப்பட்ட ஒரு
பகுதி. அதன் விளைவு, இன்று ரங்கூன் துறைமுகம் முக்கியத்துவம்
இல்லாமால், கவனிக்கப்படாமல் ஒரு நோயாளி போல் உள்ளது.

கல்கட்டா 1920கள் வரை ஆங்கிலேய இந்தியாவின் தலைநகர்.
முக்கிய துறைமுகம். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த
பின், காங்கிரஸ் அரசு, ஜனனாயக சோசியலிச பாணி பெருளாதார
சித்தாந்ததை இந்தியாவில் அமல்படுத்தியது. முக்கியமாக கம்யூனிச
கொள்கைகள் மேற்கு வங்கத்தில் மிக அதிகம் பரவி, 1977 முதல்
அங்கு சி.பி.எம் கட்சியின் ஆட்சி. வணிகம் மற்றும் தொழில்களுக்கு
பெரும் தலைவலி மற்றும் வெளிப்படையான எதிர்ப்பு உருவானது.
தொழில் வளர்ச்சி முடங்கி, இன்று கல்கட்டா சீரழவில் உள்ளது. 60
ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரகாசமான நிலை நலிந்து, இன்று
ஒரு பெரு நோயாளி போல் தவிக்கிறது. பெரும் தொழில்க‌ள் ம‌ற்றும்
வ‌ணிக‌ நிறுவ‌ங்க‌ள் க‌ல்க‌ட்டாவை விட்டு புல‌ம் பெய‌ர்ந்து விட்ட‌ன‌.
புதிய‌ முத‌லீடுக‌ள் ம‌ற்றும் வேலை வாய்ப்புக‌ள் மிக‌ குறைவாக‌வே
வ‌ள‌ர்கின்ற‌ன‌.

1940 வ‌ரை ஏற‌க்குறைய‌ ச‌ம‌ அள‌வில் இருந்து மூன்று பெரு
ந‌க‌ர‌ங்க‌ளின் இன்றைய‌ நிலை சொல்கிற‌து : எது ச‌ரியான‌
பொருளாதார‌ / அர‌சிய‌ல் கொள்கை என்ப‌தை..

2 comments:

K.R.அதியமான் said...

http://en.wikipedia.org/wiki/Rangoon

http://en.wikipedia.org/wiki/Singapore

http://en.wikipedia.org/wiki/Calcutta

K.R.அதியமான் said...

http://en.wikipedia.org/wiki/Calcutta#Economy

Once India's leading city and Capital, Kolkata experienced a steady economic decline in the years following India's independence due to the prevalent unstabilised political condition and rise in trade-unionism.[49] Between the 1960s to the mid 1990s, flight of capital was enormous as many large factories were closed or downsized and businesses relocated.[49] The lack of capital and resources coupled with a worldwide glut in demand in the city's traditional industries (e.g. jute) added to the depressed state of the city's economy